Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கிடையாது என இந்திய வெளியுறவுதுறை இணை அமைச்சர் நித்தியானந் ராய் கூறியுள்ளார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: 1 person
Image may contain: 1 person, smiling
Image may contain: 1 person, smiling, closeup
Image may contain: 1 person, sitting
Tholar Balan

•ஏழரைக் கோடித் தமிழரில்
உணர்வுள்ள தமிழன் ஒருவன்கூடாவா இல்லை?

ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கிடையாது என இந்திய வெளியுறவுதுறை இணை அமைச்சர் நித்தியானந் ராய் கூறியுள்ளார்.

அதேவேளை பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் பங்களாதேஸ் போன்ற நாடுகளில் இருந்து வந்த இந்து அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படுகிறது.

ஆனால் ஈழத் தமிழ் அகதிகள் இந்துவாக இருந்தாலும் அவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்திய அரசு மறுக்கிறது.

ஈழத் தமிழ் அகதிகள் இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என்றும் அதனால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது என்றும் அமைச்சர் கூறுகிறார்.

எந்த ஆவணமும் இன்றி உயிர் பிழைக்க கட்டிய துணியுடன் ஓடி வருபவர்கள்தானே அகதிகள். அவர்கள் எப்படி அனுமதி பெற்று நாட்டிற்குள் வர முடியும்?

இதுகூடத் தெரியாமல் ஒரு அமைச்சர். பரவாயில்லை. ஆனால் இந்த அமைச்சர் தெரிந்துகொள்ள வேண்டியது “லண்டன் கனடா போன்ற நாடுகள் ஆறு லட்சம் ஈழ அகதிகள் சட்ட விரோதமாக நுழைந்திருந்தாலும் அவர்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளன”.

ஆனால் ஈழ அகதிகள் தமது தாய் தமிழகத்திற்கு சட்ட விரோதமாக அகதியாக வரக் கூடாது என்று இந்திய அமைச்சர் கூறுகிறார். அதுமட்டுமல்ல தமிழ்நாட்டில் ஈழத்தமிழனுக்கு குடியுரிமை இல்லை என்று இந்திய அமைச்சர் முடிவு செய்கிறார்.

என்னே கொடுமை நிலை தமிழனுக்கு? உலகில் வேறு எந்த இனத்திற்கும் இந் நிலை ஏற்பட்டதுண்டா?

அதேவேளை இன்னொரு விடயத்தையும் தமிழ் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். வங்கதேச முதல்வர் மம்தா பனர்ஜி தனது மேற்கு வங்க மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வங்க இன மக்களுக்கு குடியுரிமை பெற்றுக் கொடுத்திருக்கிறார்.

மம்தா பனர்ஜியால் தனது இன மக்களுக்கு குடியுரிமை பெற்றுக்கொடுக்க முடியும் என்றால் எமது தமிழக தலைவர்களால் ஏன் ஈழ தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை பெற்றுக் கொடுக்க முடியவில்லை?

ஏனெனில் மம்தான பனர்ஜி வங்க இனத்தவர். எனவே அவர் தனது இனத்திற்கு விசுவாசமான தலைவராக இருக்கிறார். தமிழக தலைவர்கள் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் இல்லை. அதனால்தான் அவர்கள் தமிழ் இனத்திற்கு விசுவாசமானவர்களாக இல்லை.

அண்மையில் பார்ப்பணர் குருமூர்த்தி தமிழக முதலமைச்சரையும் துணை முதலமைச்சரையும் ஆண்மையற்றவர்கள் என்று பேசினார். ஆனால் தமிழக அரசு அவர் மீது வழக்கு பதிவு செய்யவில்லை. மாறாக சீமான் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

இதுகூடப்பரவாயில்லை. நடிகர் ராகவா லாரன்ஸ் என்பவர் சீமான் தமிழர்களுக்காக பேசுவதை தன்னால் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் இனி பேசினால் கடும் விளைவுகள் வரும் என்று மிரட்டுகிறார்.

என்னடா இது தமிழனுக்கு வந்த சோதனை? தமிழ்நாட்டுக்கு பிழைக்க வந்த நடிகர்கள் தமிழனை ஆள நினைப்பது மட்டுமன்றி தமிழனை மிரட்டவும் ஆரம்பித்து விட்டார்களே?

இப்படி ஒருவர் கர்நாடகாவில் இருந்துகொண்டு கன்னடர்களுக்கு எதிராக பேச முடியுமா? அவ்வாறு பேசியிருந்தால் இந்நேரம் பெற்றோல் குண்டு வீசியிருக்கமாட்டார்களா?

ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் எப்படி இவர்களால் தமிழனுக்கு எதிராக தைரியமாக பேசவும் செயற்படவும் முடிகிறது? தமிழ்நாட்டில் உப்பு போட்டுச் சாப்பிடுகிற தமிழன் ஒருவன் கூட இல்லை என்று இவர்கள் நினைக்கிறார்களா?

 

 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை நம்பினால் நம்புவர்களுக்கு இந்த செய்தி நல்ல உறைப்பாக இருக்கலாம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.