Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மீனவர்களின் உயிருடன் விளையாடும் அபத்தப் போக்கு

Featured Replies

தமிழக மீனவர்களின் உயிருடன் விளையாடும் அபத்தப் போக்கு

`

பாக்கு நீரிணையில் இந்திய மீனவர்கள் படும்பாடு இப் போது பெரும் சர்ச்சையாகியிருக்கின்றது.

மீனவர்கள் விவகாரத்தில் இந்தியா கண்ணை மூடிக்கொண் டிருந்தால், ஈழத் தமிழர் தாயகப் பிரதேசங்களைச் சேர்ந்த மீனவர்கள் காலாதிகாலமாகத் தமக்கு வாழ்வளித்து வந்த கடல் அன்னையின் மடியில் இறங்கமுடியாமல், அன்றாட ஜீவனோபாயத்தைத் தொலைத்து, அல்லாடுவது போன்ற நிலைமை, தமிழக மீனவர்களுக்கும் கூட ஏற்படும் என்பதை முற்கூட்டியே உரைக்கும் விதத்தில் "தமிழக மீனவர்களின் பாடும் அதே(õ)கதி' என்ற தலைப்பில் இப்பத்தியில் சுமார் இரண்டரை மாதங்களுக்கு முன்னரே மார்ச் முதல் வாரத்திலேயே எச்சரித்திருந்தோம்.

அதுதான் இப்போது களத்தில் கட்டவிழ்கின்றது போலும்.

தமிழக மீனவர்கள் ஆழ்கடலில் வைத்து சுட்டும், வெட்டி யும் படுகொலை செய்யப்படுவதும் அவர்களது வலைகள் மற்றும் கடற்றொழில் உபகரணங்கள், பிடிக்கப்பட்ட மீன் வளங்கள் என்பன சூறையாடப்படுவதுமாகத் தொடர்ந்த கொடூ ரம் இப்போது அவர்களின் கதி என்னவென்றே தெரியாமல் போவது போன்று படகுகளுடன் சுவடே தெரியாமல் கட லில் அவர்கள் மாயமாக மறைந்து போகும் மோசநிலையை எட்டியிருக்கின்றது.

கடந்த மாத முற்பகுதியில் கன்னியாகுமரியைச் சேர்ந்த பத்து மீனவர்கள் மற்றும் தூத்துக்குடி, கேரளா ஆகிய பகுதி களைச் சேர்ந்த இரு மீனவர்களுடன் சென்ற படகு ஒன்று மர்மமான முறையில் மறைந்திருக்கின்றது.

இப்போது, கடந்த எட்டாம் திகதி நாகைப்பட்டினத்தி லிருந்து ஆறு மீனவர்களுடன் புறப்பட்ட மற்றொரு படகு கரை திரும்பாமல் காணாமற் போய்விட்டது. இது குறித்து சீர் காழி காவல் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டிருக் கின்றது.

இப்படி கொத்துக் கொத்தாக மீனவர்களை ஆழ்கடலில் வைத்து அமுக்கும் அராஜகம் மோசமான கட்டத்தை எட்டியிருக் கின்றது.

இவ்வாறு மீனவர்கள் காணாமற் போகின்ற செயலுக்கு புலிகள் மீது குற்றம் சுமத்தி, அவர்களைப் பொறுப்பாக்கும் விதத்திலான தகவல் முதலில் தமிழகக் காவல்துறை மட் டத்திலும், பின்னர் அதை ஆதாரமாக வைத்து தமிழக முதல் வர் மட்டத்திலும் கசிய விடப்பட்டது.

ஆனால் இந்தத் தகவல்களைப் புலிகள் அடியோடு மறுத் துரைத்திருக்கின்றார்கள்.

இவ்விவகாரத்தில் புலிகள் மீது அபாண்டமாகக் குற்றம் சுமத்தும் திட்டம் இலங்கைக் கடற்படையாலும் அதன் பின் னணியில் இயங்கும் சக்திகளாலும் வேண்டுமென்றே முன் னெடுக்கப்படுகின்றது என புலிகளின் அரசியல் பொறுப் பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன் குறைகூறியிருக்கின்றார்.

""தமிழக மக்கள் மீதும், தமிழக மீனவர்கள் மீதும் பெரும் பற் றும் பாசமும் கொண்டவர்கள் நாங்கள். இதில் எள்ளளவும் சந்தேகம் தேவையில்லை'' என்று தெளிவுபட உரைத்திருக் கும் அவர், மீனவர் பிரச்சினையில் தமிழகத்துடன் எத்தனை முறை வேண்டுமானாலும் எந்த விதத்தில் வேண்டுமானா லும் ஒத்துழைக்கத் தயார் என்று உறுதி கூறியிருக்கின்றார்.

அண்மையில் தமிழக மீனவர்கள் ஐவர் கடலில் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கும், பன்னிருவர் ஒன்றாகக் காணாமற் போனமைக்கும் இலங்கைக் கடற்படையே காரணம் என் றும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்தப் பின்னணியில், இந்திய மீனவர்களின் பாதுகாப்புப் பற்றிய சர்ச்சை குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ. ஜே. அந் தோனி இந்திய இராஜ்ய சபையில் அறிக்கை ஒன்றை கடந்த புதனன்று வெளியிட்டார்.

இலங்கைக் கடற்படைக்கு எதிரான காட்டமான வாசகங்களைக் கொண்ட விதத்தில் அந்த அறிக்கை அமைந்திருந் தமை கொழும்பைப் பெரும் சீற்றத்துக்குள்ளும் சினத்துக்குள் ளும் ஆழ்த்தியிருப்பதாக விடயமறிந்த கொழும்பு வட்டாரங் கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன.

"இந்திய மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் தாக்குதல்' என்ற தலைப்பில் அமைந்த அந்த அறிக்கையில், 1991 முதல் 2007 ஏப்ரல் நடுப்பகுதி வரையான காலத்தில் 77 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை படுகொலை செய்திருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

மீனவர் பாதுகாப்புப் பற்றிய விடயத்தை இந்திய அரசு, இலங்கை உயர்மட்டத்துடன் கடுமையான விதத்தில் எடுத்திருப்பதாகவும், இந்திய மீனவர் விவகாரத்தில் பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு கொழும்பைப் புது டில்லி வற்புறுத்தியுள்ளதாகவும் இந்த அறிக்கையில் கூறப் பட்டது.

இந்த அறிக்கை கொழும்பை சீற்றமுற வைத்திருப்பதை கொழும்பு ஊடகங்கள் பிரதிபலித்திருக்கின்றன.

புதுடில்லியின் அறிக்கை இந்திய இராஜ்ய சபையில் முன்வைக்கப்பட்ட கையோடு மற்றொரு மீனவர் படகு நாகைப்பட்டின மீனவர்கள் அறுவருடன் காணாமல் போயிருக்கின்றது.

தமது நியாயமான உரிமைகளைப் பெறுவதற்காகப் போரா டும் ஈழத் தமிழர்களையும், அவர்களது போராட்டத்தையும் பலவீனப்படுத்தி, மலினப்படுத்துவதற்காகப் பேரினவாதம் மேற்கொள்ளும் பல்வேறு எத்தனங்களில், இந்திய மீனவர் களைப் பகடைக்காய்களாக்கி நடத்தும் அபத்த நாடகமும் ஒன்றாக இருக்கலாம்.

இவ்விடயத்தில் புதுடில்லி அதிகார வர்க்கமும் தமிழக அதிகாரிகளும் மிகக் கவனமாகவும், நுணுக்கமாகவும், நுட்பமாகவும் செயற்பட்டு உண்மைகளைக் கண்டுபிடித்து, சதி காரர்களை அம்பலப்படுத்துவது முக்கியமானதாகும்.

uthayan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.