Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்சமூகத்திற்கு நன்றி தெரிவித்தார் பொறிஸ்ஜோன்சன்- நல்லிணக்கம் பொறுப்புக்கூறலை வலியுறுத்தினார்

Featured Replies

பிரிட்டனில் வாழும் தமிழ் சமூகத்திற்கு நன்றி தெரிவித்து  செய்தியொன்றை வெளியிட்டுள்ள பிரதமர் பொறிஸ்ஜோன்சன்  இலங்கையில் நல்லிணக்கமும் பொறுப்புக்கூறலும் சாத்தியமாகவேண்டும் என விருப்பம் வெளியிட்டுள்ளார்

வீடியொவொன்றில்  பொறிஸ்ஜோன்சனின் இந்த  கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

தேர்தலை முன்னிட்டு  டுவிட்டரில் வெளியாகியுள்ள வீடியோவில் அவர்  இதனை தெரிவித்துள்ளார் 

 

வணக்கம் நான் தமிழ் சமூகத்திற்கு அவர்கள் எங்கள் நாட்டிற்கு  செய்துவரும் அனைத்து விடயங்களிற்காகவும் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன் என  பொறிஸ்ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சமூகத்தினரின்விழுமியங்களும்,எங்கள் தேசத்தின் தேசிய சுகாதார சேவை தொழில்முயற்சியாண்மைக்கு அவர்கள் வழங்குகின்ற பங்களிப்பும், அவர்கள் கல்விக்கு வழங்குகின்ற முக்கியத்துவமும்,மற்றும்அவர்களது கல்விச்சாதனைகள் மிகச்சிறந்தமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன என பொறிஸ்ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே பிரெக்சிட்டை நாங்கள் சாத்தியமானதாக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்,

boris_jhon_de_12.jpg

பிரெக்சிட்டை நிறைவேற்றினால்  நாங்கள் தொழில்முனைவோரிற்கு தொடர்ந்து ஆதரவளிக்கலாம்,தேசிய சுகாதார சேவைகளிற்கு ஆதரவளிக்கலாம்  ,முதலீடுகளை அதிகரிக்கலாம்,மேலும் பிரெக்சிட் சாத்தியமானதும் நாங்கள் எங்கள் குடிவரவுகொள்கையில் நியாயமானதாக நடந்துகொள்ளலாம், அவுஸ்திரேலியாவில் காணப்படுவதை போன்ற புள்ளிகளை அடிப்படையாககொண்ட குடிவரவு கொள்கையை முன்வைக்கலாம்,இது பிரிட்டனிற்கு வருவதை நோக்கமாக கொண்ட அனைவரும் சமமாக மதிக்கப்படுவதை உறுதி செய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே தமிழ் சமூகத்திற்கு எனது நன்றிகள்என அவர் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையில் நல்லிணக்கம்நிலவும் என நான் பெருமளவிற்கு எதிர்பார்ப்பை கொண்டுள்ளேன் என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன்,கடந்த காலங்களில் இடம்பெற்றவைக்காகவும், எங்கள் முன்னாள இடம்பெற்றவைக்காகவும் பொறுப்புக்கூறல் இடம்பெறும் என நான்நம்புகின்றேன்,இலங்கையில் நிரந்தர அமைதிநிலவும் என எதிர்பார்க்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/70893

 

  • தொடங்கியவர்

பிரித்தானியா பாராளுமன்றத் தேர்தல் 2019! எமக்காக குரல் கொடுக்கும் நண்பர்களை வென்றெடுங்கள்!

 

தமிழினம் பேரழிவிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய ஒரு இனம். அதனை உலகத்தில் இருந்து தனிமைப் படுத்த வேண்டும்; இலங்கை தீவின் உள்ளேயும் வெளியேயும் இருந்து தமிழினத்தை பாதுகாக்கும் குரல்கள் ஓங்கி ஒலிக்க விடக் கூடாது என்ற சூழ்ச்சி திட்டத்துடன் ஒரு கொடூரமான இன அழிப்புத் திட்டத்தினை நிறைவேற்றும் முக்கியமான சூத்திரதாரியான கோத்தபாய ராஜபக்ச, அதிஉச்ச அதிகாரங்களுடன இன்று இலங்கை ஜனாதிபதியாக வந்துள்ளார். இந்த பின்புலத்தில்  இலங்கையிலுள்ள எம் இனத்திற்காக முழு வீச்சுடன் குரல் கொடுத்து அவர்களின் இருப்பையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு புலம்பெயர் மக்களில் தங்கியுள்ளது

தாம் வாழும் நாடுகளின் அரசியல், ராஜதந்திர சக்திகளின் மத்தியில் தமிழ் மக்கள் ஆளுமை உள்ளவர்களாக எழுந்து நிற்க வேண்டும் என்று பிரித்தானிய தமிழர் பேரவை தொடர்ந்து வலியுறுத்தி வருவதோடு அதற்கான கட்டமைப்புகளை உருவாக்கி சரியான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. சர்வதேச சுயாதீன விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை முதல் முறையாக 2009 மே இன அழிப்பின் உச்சத்தின் போது பிரித்தானிய தமிழர் பேரவை முன்வைத்ததுடன் தொடர்ச்சியான பன்முக அழுத்தங்கள் மூலம் இந்த நாட்டின் கொள்கையை சர்வதேச விசாரணைக்கு சார்பாக மாற்றியமைத்தது. சோர்வு, தயக்கமின்றி அரசியல் ராஜதந்திர அழுத்தங்களை முழு வீச்சுடன் நாம் முன்னெடுக்க வேண்டிய தேவை முன்னெப்போதையும் விட இன்று அதிகரித்துள்ளது

தனி மரம் தோப்பாகாது. தமிழ் மக்கள் தனித்தனியாக நின்றோ அல்லது இந்நாட்டின் மக்களை தம் பக்கம் திருப்பாமலோ எம் மக்களின் பாதுகாப்பையும் எமது தேசத்தின் விடுதலையையும் இன்றுள்ள சூழ்நிலையில் உறுதிப்படுத்த முடியாது. இந் நாட்டின் அதிகார பீடங்களில் எமக்காக குரல் கொடுப்பவர்களை உருவாக்க வேண்டியது அவசியம். அதற்கன ஒரு சந்தர்ப்பம் இன்று உங்கள் முன் வந்துள்ளது.

நாளை இந்த நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் இடம்பெறவுள்ளது. அது தமிழர்களின் அபிலாசைகளையும் மற்றும் எம் தேசத்தின் எதிர்காலத்தையும் கூட ஒரு குறிப்பிட்ட அளவிற்கு சாதகமாகவோ பாதகமாகவோ மாற்றியமைக்கக் கூடியது. உலகின் சக்தி வாய்ந்த முடிவெடுக்கும் மட்டங்களில் எமக்கான நண்பர்களை வென்றெடுக்க வேண்டியுள்ளது

அதனால் நாளைய தேர்தலில், எந்தக் கட்சியாக இருந்தாலும் எம் மக்களின் அபிலாசைகளுக்காக பாராளுமன்றத்தின் உள்ளும் புறமும் உறுதியாகக் குரல் கொடுக்கக் கூடிய நண்பர்களை வென்றெடுத்து அவர்களுடன் தொடர்ச்சியான உறவைப் பேணி எம் மக்களின் ஜீவாதாரமான நலன்களை முன்னகர்த்த வேண்டுமாறு உரிமையுடன் கோருகின்றோம். இதற்கான வழிவகைகளையும் ஆவணங்களையும் ஒருங்கிணைப்பையும் பிரித்தானிய தமிழர் பேரவை உங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராகவுள்ளது

தமிழ் மக்கள் செயல் திறனுடனும் அர்ப்பணிப்புடனும் துரிதமாக செயல்பட வேண்டிய நேரமிது

நண்பர்களை வென்றெடுப்போம்! எம் தேசத்தின் இருப்பினை நிதர்சனமாக்குவோம்!

தொடர்புகளுக்கு 0208 808 0465, 07508365678, 07943100035, 07814486087



--

Best Wishes

S. Sangeeth     

BTF Media Coordinator

+44 (0) 7412 435697

Disclaimer

This email and any attachments with it are confidential and intended solely for the use of the individual or entity to whom they are addressed. If you have received this email in error please let us know at the earliest. Any unauthorised use, disclosure, or copying is not permitted.

Every effort has been made to ensure that this e-mail is virus free. However, the British Tamils Forum does not accept any liability in respect to an undetected virus and recommends that the recipient(s) use an up to date virus scanner.

Registered Office: British Tamils Forum, Unit 1, Fountayne Business Centre, Broad lane, London, N15 4AG

Telephone: +44(0)20 8808 0465

Website: www.britishtamilsforum.org  

E-mail: info@britishtamilsforum.org  

Twitter: https://twitter.com/tamilsforum

Facebook: https://www.facebook.com/BritishTamilsForum

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.