Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித உரிமை மீறல் தீவிர யுத்த முனைப்பு - இலங்கை மீது கவனத்தை திருப்ப காரணமென்கிறார் பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர்

Featured Replies

மனித உரிமை மீறல் தீவிர யுத்த முனைப்பு - இலங்கை மீது கவனத்தை திருப்ப காரணமென்கிறார் பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர்

மனித உரிமை மீறல்களின் அதிகரிப்பும் மீண்டும் முனைப்பெடுத்திருக்கும் யுத்தமும் சமாதான செயற்பாடுகளில் ஏற்பட்டிருக்கும் ஸ்தம்பித நிலையுமே பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் பக்கம் தமது கவனத்தை திருப்பவும் கரிசனையுடன் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தவும் காரணமாக அமைந்தது என்று அந்த நாட்டின் உயர் ஸ்தானிகர் டொமினிக் சில்கொட் தெரிவித்தார்.

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக எவ்வளவு தூரத்திற்கு கவலையடைந்துள்ளனர் என்பதன் வெளிப்பாடே அங்கு நடத்தப்பட்ட விவாதம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை நிலைவரம் தொடர்பாக மே 3 இல் பிரித்தானிய பாராளுமன்றில் சுமார் நான்கு மணிநேரம் நடத்தப்பட்ட நீண்ட விவாதம் தென்னிலங்கை அரசியல் அரங்கில் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த விவாதத்தின் போது இலங்கை அரச தரப்பையும் புலிகளையும் நோர்வே தரப்பையும் இணைத்து ஒரு முத்தரப்பு மாநாட்டை இலண்டனில் நடத்தவும் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனுக்கு பிரித்தானிய பாராளுமன்றில் உரையாற்ற சந்தர்ப்பம் வழங்கவும் யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இலங்கையின் அரசியலில் பெரும் அதிர்வலைகளைத் தோற்றுவித்த இந்த விவாதம் குறித்து இலங்கை பாராளுமன்றத்தின் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை முன்மொழியப்பட்டு விவாதம் நடைபெற்றிருந்தது.

இந்த சூழ்நிலையில் சர்ச்சைக்குரிய விவாதம் (விவகாரம்) தொடர்பாக `தினக்குரலுக்கு' விசேட செவ்வியொன்றை வழங்கிய வேளையிலேயே பிரித்தானிய தூதுவர் மேற்படி கருத்தைத் தெரிவித்தார்.

இலங்கை விவகாரம் தொடர்பாக ஆராய பிரித்தானிய தொழிற்கட்சியின் பிரதிநிதி கீத் வாஸ் தலைமையில் பிரித்தானிய அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் குழு அமைக்கப்பட்டுள்ளமை குறித்து ஆரம்பகட்ட தகவல்களே தன்னிடம் இருப்பதாக தெரிவித்த பிரித்தானிய தூதுவர் முத்தரப்பு மாநாடு குறித்தோ, தமிழ்ச்செல்வனை பிரித்தானிய பாராளுமன்றில் பேச வைப்பது தொடர்பாகவோ இன்னமும் மேற்படி குழுவின் செயற்பாடுகள் என்ன எனத் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார்.

மேலும், இக்குழுவானது முழுக்க முழுக்க பாராளுமன்ற உறுப்பினர்களின் முயற்சி என்றும் குறிப்பிட்ட அவர் இது பிரித்தானிய அரசின் முன்முயற்சி அல்லவென்றும் குறிப்பிட்டார்.

இந்த முத்தரப்பு மாநாடு எங்கு நடைபெறவுள்ளது? எந்தெந்த நாடுகளுக்கு இதில் பங்குபற்ற அழைப்பு விடுக்கப்படும்? புலிகளின் தலைவர் ஒருவர் பிரித்தானியாவிற்கு அழைக்கப்படும் செயற்பாட்டில் இலங்கை அரசின் மனோபாவம் எத்தகையது? போன்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்குமிடத்திலேயே இது குறித்து முடிவு செய்ய முடியும் என்றும் அவர் கூறினார்.

ஆனால், இவ்வாறான ஒரு குழு அமைக்கப்பட்டமை பிரித்தானிய பாராளுமன்றத்தின் குறிப்பிட்ட எண்ணிக்கையான உறுப்பினர்கள் இலங்கையின் தற்போதைய சூழ்நிலை குறித்து அடைந்துள்ள கவலையை வெளிப்படுத்தியுள்ளது என்றும் அக்கவலை நிவர்த்தி செய்யப்பட வேண்டியது என்பதும் புரிந்து கொள்ளப்படக்கூடிய ஒன்று என தான் எண்ணுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால், தமிழ்ச்செல்வனையோ புலிகளின் பிரதிநிதிகளையோ அல்லது தலைவர்களையோ பிரித்தானியாவிற்கு அழைப்பதற்கு முன்னர் இங்கு மோதல்கள் நிறுத்தப்பட்டு சுமுகமான சூழ்நிலை உருவாக வேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர், இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு புலிகளினுடனான தொடர்பு ஆதாரமாக அமையுமிடத்து தமிழ்ச்செல்வனையோ அல்லது புலிகளின் பிரதிநிதிகளையோ பிரித்தானியாவிற்கு அழைத்துப் பேசுவதில் முரண்பாடு இல்லையென்றார்.

பிரித்தானியா புலிகள் மீது பயங்கரவாத தடை விதித்துள்ள போதிலும் புலிகளுடனான பிரித்தானியாவின் தொடர்பு சமாதானத்திற்கானது என்பதால் அது ஒரு முரண்பாடு இல்லை என்றும் தெரிவித்த அவர், புலிகளின் பிரதிநிதிகளை எதிர்காலத்தில் பிரித்தானியாவிற்கு அழைத்துப் பேசும் சந்தர்ப்பம் அமையுமானால் அது இலங்கையின் சமாதான செயற்பாடுகளில் பிரித்தானியா முன்னேறியுள்ளது, அல்லது சமாதான செயற்பாடுகள் மேலும் ஒருபடி முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதே அர்த்தம் என்றும் தெரிவித்தார்.

ஆனால், புலிகளின் தலைவர் ஒருவருக்கு அழைப்பு விடுக்குமுன்னர் மோதல்கள் நிறுத்தப்பட வேண்டும். பேச்சுவார்த்தைக்கும் அதன் மூலமான தீர்விற்கும் அனைத்து தரப்பினதும் அர்ப்பணிப்பு தேவை என்றும் அதனை ஏற்படுத்தவும் வேண்டும்.

இவற்றிற்கு முன்னர் புலிகளுக்கு அழைப்பு விடுப்பது உகந்ததல்ல. மேலும், விடுதலைப்புலிகளும் ஜனநாயக விழுமியங்கள் மீதான தமது ஈடுபாட்டையும் வெளிப்படுத்த வேண்டும் என்பது தனது தனிப்பட்ட கருத்து என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், புலிகளும் தாம் ஜனநாயக விழுமியங்களையும் வழிமுறைகளையும் கடைப்பிடிக்கத் தயார் என்றும் மோதல்களை நிறுத்திக் கொள்ளத் தயார் என்றும் அறிவிப்பதன் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தென்னிலங்கை தலைவர்களுக்கு உதவ முடியும் என்றும் இது நிலைமைகளை சீர்படுத்த உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தினக்குரல்

சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக தடை விதிக்கப்பட்டிருந்த போதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளை பிரித்தானியாவுக்கு அழைத்துப் பேசுவதில் முரண்பாடு ஏதுமில்லை என்று சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதுவர் சில்கொட் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தமிழ் ஊடகம் ஒன்றுக்கு சில்கொட் அளித்த நேர்காணலில் அவர் கூறியுள்ளதாவது:

சிறிலங்காவின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக எவ்வளவு தூரத்துக்கு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலையடைந்திருக்கின்றார்கள் என்பதன் வெளிப்பாடே அங்கு நடத்தப்பட்ட விவாதம்.

மனித உரிமை மீறல்களின் அதிகரிப்பும், மீண்டும் முனைப்படைந்திருக்கும் யுத்தமும், சமாதானச் செயற்பாடுகளில் ஏற்பட்டிருக்கும் தேக்கமான நிலையுமே பிரித்தானிய உறுப்பினர்கள் சிறிலங்காவின் பக்கம் தமது கவனத்தைத் திருப்புவதற்கும், கரிசனையுடன் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கும் காரணமாக இருந்தது.

இலங்கை விவகாரம் தொடர்பாக ஆராய பிரித்தானிய தொழிற்கட்சியின் பிரதிநிதி கீத் வாஸ் தலைமையில் பிரித்தானிய அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளின் குழு அமைக்கப்பட்டுள்ளமை குறித்து முதல் கட்டத் தகவல்களே இருக்கிறது. முத்தரப்பு மாநாடு குறித்தோ, தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனை நாடடாளுமன்றத்தில் பேச வைப்பது தொடர்பாகவோ இன்னமும் திட்டவட்டமான விவரங்கள் எனக்குத் தெரியவரவில்லை. மேலும், அக்குழுவானது முழுக்க முழுக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் முயற்சி. பிரித்தானிய அரசின் முன்முயற்சியல்ல.

இந்த முத்தரப்பு மாநாடு எங்கு நடைபெறவுள்ளது? எந்தெந்த நாடுகளுக்கு இதில் பங்கு கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்படும்? புலிகளின் தலைவர் ஒருவர் பிரித்தானியாவுக்கு அழைக்கப்படுவது தொடர்பில் சிறிலங்கா அரசின் மனோபாவம் எத்தகையது? போன்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்குமிடத்திலேயே இது குறித்து முடிவு செய்யக்கூடியதாகவிருக்கும்.

இவ்வாறான ஒரு குழு அமைக்கப்பட்டமை, பிரித்தானிய நாடாளுமன்றத்தின் குறிப்பிட்ட எண்ணிக்கையான உறுப்பினர்கள் சிறிலங்காவின் தற்போதைய சூழ்நிலை தொடர்பாக அடைந்திருக்கும் கவலையை வெளிப்படுத்தியிருப்பதாகவும

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.