Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்பிரச்சினை இலங்கையில் இல்லையென கூறுவதை அரசியல்வாதிகள் உடன்நிறுத்த வேண்டும்

Featured Replies

இனப்பிரச்சினை இலங்கையில் இல்லையென கூறுவதை அரசியல்வாதிகள் உடன்நிறுத்த வேண்டும்

*மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் கூறுகிறார்

இனப்பிரச்சினையை பணம் சேர்க்கும் கருவியாக அரசியல்வாதிகள் பயன்படுத்துவதாக கவலை வெளியிட்ட மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப், நாட்டின் நிலைவரம் ஆபிரிக்கா கண்டத்தைப் போன்று காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

இன்றைய அரசியல் சூழ்நிலை மற்றும் நிலைவரங்கள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது;

இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை, பயங்கரவாதப் பிரச்சினையே உள்ளதென அரசியல்வாதிகள் கூறுவதை முதலில் நிறுத்திவிட்டு, இனங்கள் மத்தியில் நிலவும் பிரச்சினையை தீர்க்க அரசாங்கம் முன்வரவேண்டும்.

இன்று நாட்டில் பயங்கரவாதப் பிரச்சினையே உள்ளதென இனங்களுக்கு மத்தியில் காணப்படும் பிளவுகளை மூடிமறைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

வன்முறையிலும், இரத்தம் சிந்துவதிலும் காட்டப்படும் ஆர்வம் விட்டுக்கொடுப்பில் காட்டப்படுவதில்லை. இந்நாடு பல்லின மக்கள் வாழும் நாடல்ல எனக்கருதி சிந்திப்பதும், செயலாற்றுவதுமே இதற்கான காரணமாகும்.

அரசியல் அதிகாரத்தை பகிர்வதன் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு காணலாமென்ற யதார்த்தம் மறக்கடிக்கப்படுவதும், அது தட்டிக்கழிக்கப்பட்டு வந்ததுமே கடந்தகால அரசியல் வரலாறு. இவ்வரலாறை திருத்தவேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களை சார்ந்துள்ளது.

எனினும், அரசியல்வாதிகள் பணம் சேர்க்கும் கருவியாகவே இனப்பிரச்சினையை பயன்படுத்துகின்றனர். தமது அரசியல் இலாபங்களுக்காக உண்மைகளை குழிதோண்டி புதைக்கும் நிலை உருவாகியுள்ளது.

மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, காமராஜர் ஆகியோரின் அரசியல் ஞானத்தை மறந்துவிட்ட நாம் இந்தியாவின் பஞ்சாயத்து முறை இனப்பிரச்சினையை தீர்க்குமென விதண்டாவாதம் புரிவதும் வாதிடுவதும் நகைப்புக்கிடமானது.

இலங்கை இனநெருக்கடிக்கு தீர்வு காணப்போவதாக கூறிக்கொண்டு ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள திட்டத்தை தீர்வுத் திட்டமென கூறவே முடியாது. அதை தீர்வுத் திட்டமென சொல்வதே பிழையானது. அதில் தமிழ் மக்களுக்கு எத்தகைய நன்மையுமில்லை.

இந்தியா தன் பிரச்சினையை எப்படி தீர்த்ததென நாம் பார்க்க வேண்டுமேயன்றி, அங்கு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள குறைந்த மட்ட அதிகாரத்தை எமது நாட்டில் அறிமுகப்படுத்துவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. அதுவெறும் பூச்சாண்டியாகவே அமையப்பெறும்.

புதிய அரசாங்கம் பதவியேற்றுக்கொண்ட காலம் முதல் நாட்டில் படுகொலை, ஆட்கடத்தல், கப்பம் கோருதல் மற்றும் காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்து சட்டமும் ஒழுங்கும் சீர்குலைந்துவிட்டது. சட்டம், ஒழுங்கு ஆகியன எழுந்திருக்க முடியாத கட்டத்தை அடைந்துள்ளது.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை ஆபிரிக்கா கண்டத்தைப் போன்று காணப்படுகிறது. இந்நிலை முடிவுக்கு கொண்டுவரப்படாவிட்டால் மேலும் பயங்கரமான சூழ்நிலைகள் உருவாகும்.

அயர்லாந்துப் பிரச்சினையும் அதற்கு தீர்வு காணப்பட்ட விதமும் எமது நாட்டுக்கு சிறந்த முன்னுதாரணமாகும். இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அண்மையில் நிபுணர்குழு சமர்ப்பித்த அறிக்கை முற்போக்கானது. ஆனால், அதை தூக்கி வீசி புறக்கணித்தமை, துரதிர்ஷ்டவசமானது. நிபுணர் குழுவின் அவ்வறிக்கையை அடிப்படையாக கொண்டு தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான சிறந்த வாய்ப்பினை ஆட்சியாளர்கள் தவறவிட்டுள்ளனர் என்றார்.

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.