Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘சட்டங்கள் பற்றி தெரியாது என எவரும் கூறமுடியாது’

Featured Replies

நாட்டின் சட்டதிட்டங்கள் பற்றி, எதுவும் தெரியாது என எவரும் கூறமுடியாது எனவும் குறிப்பாக இந்த விடயத்தில் பெண்கள் ஒரு படி முன்னேறி, சட்டப் பாதுகாப்பு அறிவுப் புலமையைப் பெற்றிருக்க வேண்டுமெனவும் மட்டக்களப்பு  மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி மயூரி ஜனன் தெரிவித்தார்.

இதனால் மட்டக்களப்பிலுள்ள இரண்டாந் தலைமுறைப் பெண்களுக்கு சட்டப் பாதுகாப்பு அறிவூட்டப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.  

மட்டக்களப்பு மாவட்டம் தழுவிய ரீதியில், பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் சட்டப்பாதுகாப்பு பற்றிய பயிற்சி நெறிகள் குறித்து, இன்று (26) அவர் கருத்துத் தெரிவித்தார்.

image_6c7a813bd0.jpg

இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், பட்டதாரிகள், பல்கலைக்கழக மாணவிகள் உட்பட உயர்கல்வியை அடைந்து கொண்ட யுவதிகள், இந்த இலவசமாக சட்டப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பயிற்சி நெறியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள் என்றார்.

இலங்கை சட்டங்களின் தரம், அனைத்துலக சட்டங்களின் தராதரங்கள், நீதிப் பொறிமுறை, தகவல் அறியும் உரிமை, திருமணம், விவாகரத்து,  தாபரிப்பு உட்பட அனைத்து வகையான சட்டப் பாதுகாப்பு அறிவுகளும் இதில் பெண்களுக்கு  வழங்கப்படுகின்றன எனவும் அவர் விவரித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தை முழுவதுமாக உள்ளடக்கியதாக இந்த சட்டப் பாதுகாப்புப் பயிற்சி நெறிக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ் பேசும் சமூகங்களைச் சேர்ந்த சுமார் 74 பெண்கள் தமது பயிற்சிகளை முடித்துக் கொண்டு சான்றிதழ்களைப் பெற்றதும் எதிர்கால வளவாளர்களாக அவர்கள் செயற்படவுள்ளார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/சட்டங்கள்-பற்றி-தெரியாது-என-எவரும்-கூறமுடியாது/73-243039

 

பெண்களை வலுப்படுத்தும் திட்டம்பற்றி ஆராய்வு

image_a379c942e3.jpg

மட்டக்களப்பு - வவுணதீவுப் பிரதேசத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின்  அனுசரணையில் செயற்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள்பற்றி ஆராயும் கூட்டம் கிரமமாக இடம்பெற்று வருகிறது.

வவுணதீவுப் பிரதேசத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களை வலுப்படுத்தும் திட்டத்தின்கீழ்,  ஐரோப்பிய ஒன்றியத்தின்  உதவியுடன் செயற்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள்பற்றி ஆராயும் கூட்டம், வவுணதீவு பிரதேச செயலகத்தில் இன்று (19) நடைபெற்றது.

இந்நிகழ்வில், வவுணதீவு பிரதேச செயலக  வெளிக்கள உத்தியோகத்தர்கள்,  கிராம செயற்றிட்டப் பயனாளிகள் உட்பட அமுலாக்க குழுவினரும் கலந்துகொண்டனர்.

இத்திட்டம், கிராமங்களில் எவ்வாறு முன்னோக்கி செல்கின்றது என்பது பற்றியும் இத்திட்டத்தின் குறை, நிறைகள் தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டன.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களை, கூட்டுறவின் ஊடாக மேம்படுத்தும் வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் வீ எபெக்ற் (We Effect) எனும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனத்தினூடாக உன்னிச்சை, பன்சேனை ஆகிய கிராமங்களில்,  நான்கு ஆண்டுகால செயற்றிட்டமாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/பெண்களை-வலுப்படுத்தும்-திட்டம்பற்றி-ஆராய்வு/73-242716

இலங்கையில் பெண்கள் உரிமைகள் அமைப்புகளுக்கு கனடா நிதியுதவி..!

இலங்கையிலுள்ள கனடா உயர்ஸ்தானிகராலயம் ஆசிய மன்றத்துடன் இணைந்து 'பெண்களின் உரிமையும் மற்றும் பெண்களின் தலைமைத்துவம்' எனும் கருப்பொருளில் இலங்கையிலுள்ள பெண்கள் உரிமைகள் அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது.

இதற்கான நிகழ்வு கடந்த வாரம் இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகரின் அலுவலக வாசஸ்தலத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தூதரக உறுப்பினர்கள் அபிவிருத்தி பங்காளிகள் பெண்கள் உரிமைகளின் அமைப்புக்கள் சிவில் சமூக அமைப்புக்கள் அரச மற்றும் அரச சாரா அமைப்புக்களின் உறுப்பினர்கள் என 70 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

2019 , 2023 காலப்பகுதிக்கான உலகலாவிய விவகாரங்களுக்கான கனடா பிரிவு வழங்கும் 3 மில்லியன் கனடா டொலரை ஆசிய மன்றம் இலங்கையிலுள்ள பெண்கள் உரிமைகள் அமைப்புகளுக்கு வழங்கவுள்ளது. இந்நிகழ்வில் இலங்கைக்கான கனடா உயர் ஸ்தானிகர் டேவிட் மெக் கினோன் மற்றும் ஆசிய மன்றத்தின் இலங்கைக்கான வதிவடப்பிரதிநிதி தினேஷா டி சில்வா விக்கிரமநாயக்க உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.

https://www.virakesari.lk/article/71719

இலங்கையின் சகல மாகாணங்களையும் சேர்ந்த 27 பெண்கள் உரிமைகள் அமைப்புக்கள் கடும் போட்டிக்கு மத்தியில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

கனடா , இலங்கை உட்பட 32 திட்டங்களை உலகின் பல்வேறு நாடுகளில் நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆசியாவில் ஆப்கானிஸ்தான் , பங்களாதேஷ், இந்தோனேஷியா, மியன்மார் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. 2019 - 2023 ஆகிய 5 வருட காலப்பகுதிக்கு கனடா 150 மில்லியன் கனடா டொலரை உலகலாவிய ரீதியில் வழங்கவுள்ளது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.