Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் பிரச்சினைக்கு குறைந்தபட்ச தீர்வைக் கூடமுன் வைக்க முடியாத நிலையில் அரசு -(பீஷ்மர்)

Featured Replies

தமிழர் பிரச்சினைக்கு குறைந்தபட்ச தீர்வைக் கூடமுன் வைக்க முடியாத நிலையில் அரசு -(பீஷ்மர்)

சென்ற வாரத்து மழை வெள்ள `புதினத்தினால்' அரசாங்கத்துக்கு சில நன்மைகள் கிடைக்காமலில்லை. கொழும்பின் வெள்ளப் பிரச்சினை காரணமாக சுதந்திரக் கட்சி முன்வைத்த பிரச்சினைத் தீர்வுக்கான ஆலோசனை பற்றிய ஆழமானதொரு விவாதம் நடக்காமலேயே போய்விட்டது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் கஜேந்திரன் எம்.பி. பாராளுமன்றத்துக்குள் காட்டிய எதிர்ப்பைத் தவிர தமிழ் மக்களின் நிலைபாடு பற்றி எதுவுமே அறிய முடியாது போய்விட்டது எனலாம்.

சுதந்திரக் கட்சியின் ஆலோசனைகள் பற்றிய போதாமையும் நிச்சயமின்மையும் பற்றிய அம்சங்களை மீளமீள பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. சிங்களத்துவ குரலின் நிச்சயமான பிரதிபலிப்புகளிலொன்று என்ற வகையில் சுதந்திரக் கட்சி, அதுவும் கடந்த பல வருடங்களாக முன்னிலை ஆட்சி உரிமை கொண்டு வந்துள்ள கட்சி கிராம சபை மட்டத்தில் அதிகார பரவலை மேற்கொள்ளும் மாவட்ட ஆட்சி முறையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்ல வேண்டிய அரசியல் நிர்ப்பந்தம் எவ்வாறு ஏற்பட்டது என்பதுவே அடிப்படைப் பிரச்சினையாக கொள்ளப்பட வேண்டும்.

கடந்த 17 வருட கால, குறிப்பாக 11 வருடகால தென்னிலங்கை அரசியலை நோக்கினால் புலி எதிர்ப்பே பிரதான அரசியல் கோஷமாக இருந்து வந்துள்ளமை தெரியும். ஆனால், இது அரசாங்கத்தினது குரல் மாத்திரமல்ல சிங்களத்துவ குரலின் ஏகோபித்த நிலைப்பாடாகும். குறிப்பாக சிங்கள ஊடகங்கள் இதில் முக்கிய இடம்பெற்றன. அவற்றைவிட சாதாரண சிங்கள மக்களின் புலப்பதிவில் பௌத்த - சிங்கள வாழ்வின் தளமாக அமையும் பிக்குகள் தங்கள் நிறுவனங்கள் மூலமாக புலிவேட்டையை உரத்த குரலிலே வைத்துக் கொண்டன. `வெதும்வாத, திரஸ்தவாத, கொட்டிகளின்' மிலேச்சத்தனம் பற்றி ஒட்டுமொத்தமான `கோரஸ்' ஒன்று தென்னிலங்கையில் ஒலித்துக் கொண்டிருந்தது, ஒலித்துக் கொண்டிருக்கின்றது. (2002 இன் பின்னர் யூ.என்.பி.யின் நிலைப்பாட்டில் ஒரு மாற்றம் உண்டு)

இத்தகையதொரு புலி எதிர்ப்புக்குரல் மேலோங்கி நிற்கின்ற பொழுது அதற்கு அடித்தளமாக தமிழ் மக்களின் குறைபாடுகள் பற்றிய ஆழமான சிந்தனை எதுவுமிருக்கவில்லை. தங்களுடன் சேர்ந்து கொண்ட தமிழ்க் கட்சிகளை கூட புலிவிரோத குரலுக்கு மேலே சென்று அவர்களை பார்க்கவில்லை. அரசாங்கத்தில் அவர்கள் பங்கு கொண்டமை பற்றிக்கூட சிங்கள ஊடகங்களிலே அதிகம் பேசப்படவில்லை. சம்பந்தப்பட்ட தமிழ்க் கட்சிகள் அரசாங்கத்தின் நியாயப்பாட்டை தமிழில் எடுத்துக்கூறிய அளவுக்கு சிங்கள ஊடகங்கள் இவர்களை புலிகளுக்கான மாற்றுத் தலைமையாகவோ மாற்றுக் கோரிக்கையை வைத்திருப்பவர்களாகவோ சிங்கள மக்களுக்கு அழுத்திக் கூறவில்லை. உண்மையில், அரசாங்கத்துடன் இணைந்த தமிழ்க் கட்சிகளும் எந்தவொரு கருத்தொருமைப்பாட்டு அடிப்படையில் சேரவுமில்லை.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறும் பலம் நவலங்கா சமசமாஜக் கட்சி போன்றனவே செய்தன. அப்படிப் பேசிய கட்சிகளுக்கு கூட வட, கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற தமிழர்கள் குறிப்பாக கொழும்பில் வாழ்பவர்கள் வாக்களிப்பதில்லை. இதனால் விக்ரமபாகு கருணாரட்ண போன்றவர்களின் குரல் ஒரு மட்டத்துக்கு மேல் வலுவுடன் செல்ல முடியாமல் போய்விட்டது. லங்கா சமசமாஜகட்சியும் பொதுவுடைமைக் கட்சியும் இதுபற்றி `மூச்சுக் கூட' விடவில்லை.

(பொதுவுடைமைக் கட்சியின் உயர் பீடத்திலுள்ள சில தமிழர்கள் இலங்கை இடதுசாரிகளின் தமிழ் விரோத அரசியல் பற்றி தமிழகத்திலுள்ள இடதுசாரிக் கட்சிகளுக்கு முறையிட்டுக் கொண்டன.) இடதுசாரிக் கட்சிகளுக்கு அவர்கள் நிலைப்பட்ட அரசியல் ஆதரவு சிங்கள மக்களிடையேயும் ஏற்படவில்லை.

இவை காரணமாக சிங்கள மக்களிடையே தமிழரின் அரசியல் தேவைகள் குறித்த விழிப்புணர்வே இருக்கவில்லை. உண்மையில் `ராவய' போன்ற பத்திரிகைகள் கூட தமிழரின் அரசியல் மனக்குறைபாடுகள் என அழுத்திற்றே தவிர இலங்கைத் தமிழரின் அரசியற் தேவைகள் என்று கூறியதாக சொல்ல முடியாது. மனக்குறைகள் என்று சொன்னதற்காகவே ராவயவுக்கு எதிராக சிங்கள எதிர்ப்பு கிளப்பப்படல் ஆயிற்று.

இத்தகையதொரு சூழலிலே தான் யுத்த நிறுத்தத்தின் பின்னர் (2002) மேற்கொள்ளப்பட வேண்டிய அரசியல் நடவடிக்கைகள் பற்றிய நிச்சயமின்மைகள் தென்னிலங்கையில் தோன்றின. சமாதானத்துக்கான ஆலோசனைகளிலும் பார்க்க புலிகளுக்கு எதிரான யுத்தம் தொடரப்பட வேண்டும் என்ற அரசியல் படிப்படியாக மேலோங்க தொடங்கிற்று. மகிந்த ராஜபக்ஷவின் அரசியற் பலவீனங்கள் இதற்கு பெரிதும் உதவின. அவரும் தம்மை ஒரு வீத வாக்கு வித்தியாசத்துடன் கிடைத்த வெற்றியை சிங்கள மக்களின் ஏகோபித்த கருத்தாக சிங்கள ஊடகங்கள் காட்டின. பதவியேற்ற மிகச் சிறிய காலத்தினுள் பதவித் தொடர்ச்சி பற்றிய சிந்தனை மேலோங்கவே ஒட்டுமொத்த மகிந்த சிந்தனை ஒருபுறமாக மறுபுறத்தில் ராஜபக்ஷ பிறதேர்ஸ் ஸ்தாபிதமாகி நிறுவனமயப்படுத்தப்பட்டது. குறிப்பாக பாதுகாப்புத் துறையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் கிழக்கில் படையாட்சியை நிறுவிவிட்டதாகவே பேசிக் கொள்ளப்பட்டது.

அரசாங்கத்தின் வெற்றி பரந்துபட பேசப்படலாயிற்று. எப்பொழுதுமே உச்ச கட்டங்களே வீழ்ச்சியின் தொடக்க நிலைகளாக மாறும் ஆபத்து உண்டு. இது வரலாறு காட்டும் உண்மை. சமாதான தீர்வுக்கான ஆலோசனையை முன்வைக்க வேண்டிய தேவையேற்பட்டது. இதுவொரு முக்கிய நிகழ்ச்சியாயிற்று. அதாவது சிங்கள மக்கள் ஆதரிக்கும் முறையில் அமையும் தீர்வாகியிருத்தல் வேண்டும். (யூ.என்.பி.யின் ஆலோசனையை நாட்டின் காட்டிக்கொடுப்பு என்று கூறியாகிவிட்டதே!)

உண்மையில் சிங்கள மக்களைப் பொறுத்த வரையில் இலங்கைத் தமிழர் பிரச்சினையின் ஆழ அகலம், அதன் பாரதூரத் தன்மை இன்னும் சரியாகவே எடுத்துக் கூறப்படவில்லை. தமிழ் விரோதம் புலி வேட்டையாக மாறி அந்த வேட்டை ஜனநாயகத்துக்கான யுத்தமாக மாற்றப்பட்ட நிலையிலும் தமிழர்களை - இலங்கைத் தமிழர்களை இலங்கையின் ஓர் அங்கமாக ஏற்றுக் கொள்ளும் ஒரு அரசியல் மனப்பக்குவம் அண்மைக் காலங்களில் ஏற்படுத்தப்படவில்லை. இதனாலேயே தான் கிராம சபை மட்டங்களிலும் மாவட்டங்கள் மட்டத்திலும் அதிகாரப் பரவலாக்கல் செய்தால் போதும் என்ற நிலைமை ஏற்பட்டது. இதனுள்ளும் ஒரு ஆழமான மொழிப் பிரச்சினையுள்ளது. சிங்களத்தில் Devolution of Power என்பதனை `பலய பெதீம' (அதிகாரத்தை பிரித்துக் கொடுத்தல்) என்ற சொற்றொடர் கொண்டே குறிப்பிடுகின்றனர். தமிழிலே தான் அதிகாரப் பகிர்வு (Chairing of Power) என்ற தொடர் பயன்படுத்தப்படுகின்றது.

சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் அரசாங்க அதிகாரத்தை பிரித்துக் கொடுக்கும் மனநிலையிலில்லை. ஏனெனில் ஒற்றையாட்சி இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும் எதையும் செய்யக்கூடாது என்பது சிங்கள மொழிபெயர்ப்பு ஏற்படுத்தும் நிலைப்பாடாகும்.

ஜனாதிபதியின் ஓட்டமோ இன்னொரு தடத்தில் நடைபெறுகின்றது. அமைச்சரவையின் தொகை 105 என்றாலென்ன 106 என்றாலென்ன அமைச்சின் அதிகாரங்களே ஜனாதிபதியின் கையுள்ளே தான் இருக்கின்றனவென்று சிரேஷ்ட அமைச்சர்களே கவலை தெரிவிக்கின்றார்களாம். ராஜபக்ஷ சகோதரர்களின் மேலாண்மை சுதந்திரக் கட்சிக்குள்ளேயே பிளவை ஏற்படுத்திவிட்டது. ஜனாதிபதி அவர்கள் தமிழர் பிரச்சினை பற்றி பேசாமலிருக்கலாம். ஆனால் மங்கள சமரவீர பற்றி பேசாமலிருக்க முடியாது.

இந்தப் பிரச்சினைகள் யாவற்றுள்ளும் தமிழ் மக்களை உறுத்திக் கொண்டிருக்குமொரு முக்கிய விடயம், ஜே.வி.பி. இன்னும் தான் அரசாங்கத்தின் மனிதவுரிமை மீறல்களையோ அண்மையில் நடந்த ஆட்கடத்தல்கள் பற்றியோ எதுவும் பேசவில்லை. ஆனால், அவர்களுக்குள்ள பெரிய வாய்ப்பு என்னவென்றால் இராமலிங்கம் சந்திரசேகரன் தமிழில் எப்படியாவது சமாளித்துக் கொள்வார்.

http://www.thinakkural.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.