Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்வெறிப் போக்கால் பொருளாதாரச் சீரழிவு!

Featured Replies

போர்வெறிப் போக்கால் பொருளாதாரச் சீரழிவு!

மீண்டும் ஒரு தடவை கடந்த வெள்ளிக்கிழமை யன்று சத்தம் சந்தடியின்றி எரிபொருள்களின் விலை யைக் கூட்டியிருக்கின்றது இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம்.

ஆறு வார காலத்துக்குள் மூன்றாவது எரிபொருள் விலை அதிகரிப்பு இது.

இது மாத்திரம் அல்ல. எரிபொருள் விவகாரத்தில் இன் னும் விலை அதிகரிப்புகள் வரிசையாக வருவதற்குக் காத்தி ருக்கின்றன என்ற குண்டையும் தூக்கிப் போட்டிருக்கின்றார் பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் அஸந்த டி மெல்.

மோசமடைந்து, அதலபாதாளத்துக்குள் வீழ்ந்து கொண் டிருக்கும் இலங்கைத் தீவின் பொருளாதார நிலைவரத்தால் தொடர்ச் சங்கிலி நிகழ்வுகளாக இன்னும் பல மோசமான பின்னடைவுகள் இடம்பெறப் போகின்றன என்பதை பொரு ளியல் நிபுணர்கள் முன்கூட்டியே எச்சரித்து அறிவித்து விட் டனர்.

ஏற்கனவே ஏற்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பின் விளைவாக போக்குவரத்துச் சேவை (பஸ், ரயில், ஓட்டோ) கட்டணங்கள் அதிகரிப்பு, எரிவாயுக்களின் விலை உயர்வு, பால்மா போன்ற அத்தியாவசியப் பொருள்களின் விலை யேற்றம் என்பன வரிசையாக இடம்பெறத் தொடங்கிவிட் டன. ஏற்கனவே உச்சத்தைத் தொட்டு நிற்கும் மின்சாரக் கட்டணமும் இந்த எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து மீண்டும் எகிறப் போகின்றது என உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒருபுறம் அந்நிய முதலீடுகளில் பெரு வீழ்ச்சி. பங்குச் சந்தையில் பணப்புழக்கம் சரிவு. சந்தைப் பெறுமதி இடறி வீழ்ந்துகொண்டிருக்கிறது.

மறுபுறத்தில் வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிரான ரூபாவின் பெறுமதியும் ஒரேயடியாகக் கவிழ்ந்து வருகின் றது.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்ற சமயத்தில் ஓர் அமெரிக்க டொலருக்கு இலங்கைப் பணம் நூறு ரூபா சமனாகவிருந் தது. இன்றோ ஓர் அமெரிக்க டொலருக்கு சமனான இலங் கைப் பணம் நூற்றிப்பதினொரு ரூபா என்றாகிவிட்டது.

இலங்கைப் பணத்தின் பெறுமதி தொடர்ந்து சரிந்து வருவதால், உலகச் சந்தையில் தான் கொள்வனவு செய்யும் எரிபொருளை உள்ளூர்ப் பணத்தில் விற்பனை செய்யும் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு உள்ளூ ரில் அதன் விலையை அதிகரிப்பதைத் தவிர வேறு என்ன தான் மார்க்கம்?

எரிபொருளின் விலை அதிகரிப்பு, அதன் தொடர் நிகழ் வாக, அடுத்து எல்லா அம்சங்களிலும் அனைத்துப் பொருள்களிலும் எல்லா சேவைகளிலும் தாக்கத்தை ஏற் படுத்தி, அவற்றின் கட்டணங்களையும் அதிகரிக்கச் செய் யப்போகின்றது. அதன் விளைவாக வாழ்க்கைச் செலவு கட்டுமட்டில்லாத அளவுக்கு மேலும் எகிறும் ஏது நிலைகள் தென்படுகின்றன.

எரிபொருள் விலை அதிகரிப்பால் ஏற்பட்டு வரும் இழப்புகளுக்கு உரிய மானியத்தை வழங்குவதற்கு அரசு முன்வராவிட்டால் அடுத்தமாத முற்பகுதியிலிருந்து மின் சாரக்கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர வேறு மார்க்கம் ஏதுமில்லை என்று இலங்கை மின்சார சபையும் திட்ட வட்டமாக அறிவித்து விட்டது.

நாட்டின் பொருளாதாரம் இவ்வாறு மோசமாகப் படுத்து வருவதற்குக் காரணம் என்ன?

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசின் திமிர்த்தனமான அரசியல், இராணுவ அணுகுமுறைகளும், அவற்றால் ஏற் பட்ட விபரீத விளைவுகளுமே நாட்டின் இத்தகைய மோச மான பொருளாதார நெருக்கடிக்குப் பிரதான காரணங்க ளாகும்.

நாட்டின் தேசிய இனப்பிரச்சினையை அமைதி வழியில் சமாதான முறைகளில் சமரச இணக்கத்தின் மூலம் தீர்த்துவைக்கும் விருப்பமோ, மனத் தாராளமோ, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையோ இல்லாத மஹிந்தரின் அரசு, போரியல் போக்குமூலம் இராணுவ நடவடிக்கைகள் மூலம் விவகாரத்தை, தீர்த்து, தனது எதேச்சாதிகாரத்தை நிலைநிறுத்த கங்கணம் கட்டி நிற்பதே இத்தகைய இக் கட்டு நிலைமை உருவாகப் பிரதான காரணமாகும்.

மஹிந்த அரசின் இராணுவத் தீவிர வெறிப்போக்கை நிறைவு செய்வதற்காக நாட்டின் பொருளாதார வளம் இரா ணுவச் செலவினத்துக்குப் பெருமளவில் திருப்பி விடப் படுகின்றது.

இந்தப் போக்கின் விளைவாக போர் வெடித்து, நாடு போரழிவுகளையும்,பேரிழப்புகளை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.