Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கான உதவிகளை முடக்க ஜப்பானும் சுவீடனும் தயாராகின்றன

Featured Replies

இலங்கைக்கான உதவிகளை முடக்க

மற்றும் பல வெளிநாடுகள் முஸ்தீபு!

ஜப்பானும் சுவீடனும் தயாராகின்றன

இலங்கைத் தமிழர்களோடு அதிகாரத்தைப் பகிர்ந்து, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு மறுத்து வருவதுடன், மனித உரிமை மீறல்களைத் தடுத்து நிறுத்துவதற்கும் தவறி வரும் கொழும்பு அரசுக்கு எதிராக பூர்வாங்க நடவடிக்கையாக அந்நாட்டுக்கான தமது உதவித் திட்டங்களை முடக்கும் நடவடிக்கைகளில் மேலும் பல வெளிநாடுகள் தயாராகி வருகின்றன என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜேர்மன், பிரிட்டன், அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளைத் தொடர்ந்து ஜப்பான் மற்றும் சுவீடன் போன்ற நாடுகள் இத்தகைய செயற்பாட்டில் ஈடுபடவிருக்கின்றன எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் மோசமாக இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச மட்டத்தில் ஆழ்ந்த கரிசனையும், கவனிப்பும் இப்போது ஏற்பட்டிருக்கின்றது. தனது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் மனித உரிமைகளை முழு அளவில் கொழும்பு அரசு பேணினால் மட்டுமே அதற்கு உதவிகளை அளிக்க வேண்டும் என மனித உரிமை விவகாரங்களில் அதிக ஈடுபாடுள்ள அமைப்புகள் சர்வதேச நாடுகளை வலியுறுத்திக் கேட்டுவருகின்றன.

மனித உரிமைகளைப் பேணும் பெறுபேறுகளுடன் உதவித் திட்டங்களைத் தொடர்புபடுத்த வேண்டும் என்ற மனித உரிமை ஆர்வலர்களின் இந்த அழுத்தத்தை ஏற்றுச் செயற்பட ஜப்பான் தயாராகி வருவதாக தமது பெயரினைக் குறிப்பிட விரும் பாத இராஜதந்திரி ஒருவர் கூறினார்.

இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் தரப்பில் முன்னணியில் முதல் இடத்தில் இருக்கும் ஜப்பான் இத்தகைய முடிவை எடுப்பது கொழும்புக்குப் பெரும் பின்னடைவான விவகாரம் என இராஜதந்திரிகள் சுட்டிக்காட்டுகின்ற னர்.

இந்த விடயத்தில் கூடுதல் பொறுப்புணர்வுடனும் கடப்பாட்டுடனும் செயற்படும்படி அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் (ஏதட்ச்ண கீடிஞ்டtண் ஙிச்tஞிட) ஜப்பானை வலியுறுத்திக் கேட்டிருக்கின் றது.

""மனித உரிமை மீறல்களுக்கு முடிவு

கட்டுமாறு இலங்கை அரசை உந்தித் தள்ளும் நடவடிக்கையில் முன்னணிப் பங்கு வகிக்குமாறு ஜப்பானை நாம் வலியுறுத்துகிறோம்'' என நியூயோர்க்கை மைய மாகக் கொண்ட அந்த அமைப்பின் பேச்சாளர் தெரிவித்தார்.

இலங்கையில் மனித உரிமைகள் விவகாரம் மோசமாகி வருகின்றமை குறித்து கடந்த வாரம் இலங்கை வந்திருந்த அமெரிக்காவின் மத்திய மற்றும் தென்னாசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சரும் கவ லையும், விசனமும் வெளியிட்டமை குறிப் பிடத்தக்கது.

இதற்கிடையில்

இலங்கைக்கான உதவித் திட்டங்களை முடக்குவது குறித்து சுவீடனும் ஆராய்ந்து வருவதாகக் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

"சீடா' அமைப்பின் மூலம் அல்லாமல் வேறு வழியில் வழங்கப்படும் உதவித் திட்டங்களையே சுவீடன் முடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையில் மனித உரிமைகள் பேணப்படவேண்டும் என்பது குறித்து பல வருடங்களாக முன்னணியில் நின்று வலியுறுத்தி வரும் முக்கிய நாடுகளில் பிரதான இடம் சுவீடனுக்குரியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மனித உரிமைகளைப் பேணும் விடயத்தில் இலங்கை அரசுத் தலைமையும் பாதுகாப்பு அமைச்சும் தொடர்ந்தும் விட் டேத்தியாகச் செயற்படுமானால், சர்வதேச அழுத்தம், உதவித் திட்டங்களை முடக்கும் நிலைக்கு அப்பால் வேறு பல வடிவங்களை எடுக்கக் கூடும் என்றும் இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன.

uthayan

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவுக்கான உதவிகளை வேறு நாடுகளும் நிறுத்தலாம்?

[திங்கட்கிழமை, 14 மே 2007, 08:34 ஈழம்] [பா.பார்த்தீபன்]

சிறிலங்கா அரசாங்கம் சிறுபான்மைத் தமிழர்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளத் தவறியமை மற்றும் சட்டவிரோதப் படுகொலைகளை நிறுத்துவதற்குத் தவறியதன் காரணமாக அந்த நாட்டுககான நிதி உதவியை மேலும் பல நாடுகள் இடைநிறுத்திக்கொள்ளலாம் என இராஜதந்திர வட்டாரங்களும், அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவும், பிரித்தானியாவும் சிறிலங்காவுக்கான தமது நிதி உதவியில் ஒரு பகுதியைத் தடுத்து வைத்திருக்கும் அதேவேளையில் மேலும் பல நாடுகள் இதனைப் பின்பற்றலாம் என அனைத்துலக செய்தி நிறுவனமான ஏ.எஃப்.பி. தெரிவித்திருக்கின்றது.

இது தொடர்பில் அந்த செய்தி நிறுவனத்தின் அறிக்கையில் மேலும் முக்கியமாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

சிறிலங்காவுக்கான நிதி உதவியை மனித உரிமை விவகாரத்துடன் தொடர்புபடுத்துமாறு கோரும் மனித உரிமை ஆர்வலர்களுடன் ஜப்பான் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக இராஜதந்திரி ஒருவர் தெரிவித்திருக்கின்றார்.

சிறிலங்காவுக்கு ஜப்பானே அதிகளவு நிதி உதவிகளை வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. சிறிலங்கா விவகாரத்தில் மேலும் அதிகளவு பங்களிப்பை வழங்குமாறு அனைத்துலக மனித உரிமை அமைப்பு ஜப்பானைக் கேட்டிருக்கின்றது.

சிறிலங்கா அரசு மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை கொடுக்கும் முன்னணிப் பங்களிப்பை ஜப்பான் மேற்கொள்ளும் என எதிர்பார்ப்பதாக அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்திருக்கின்றது.

சிறிலங்காவுக்கு உதவி வழங்கும் சமூகத்தின் கவலையை அமெரிக்கப் பிரதி வெளிவிவகார அமைச்சர் ரிச்சர்ட் பெளச்சரும் தன்னுடைய கொழும்புப் பயணத்தின் போது வெளிப்படுத்தியிருந்தார்.

மக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர். அதிகளவு நெருக்கடிகளை அவர்கள் எதிர்கொள்வதாக அவர் குறிப்பிட்டிருந்தார். சிறிலங்காவின் மனித உரிமை நிலைமையில் ஒட்டுமொத்தமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். 700-க்கும் அதிகமானவர்கள் காணாமல் போன யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கும் பெளச்சர் பயணம் செய்திருந்தார்.

அதேவேளையில், சிறிலங்காவின் தற்போதைய நிலைமை தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டதுடன், அனைத்துலக மனித உரிமை கண்காணிப்பு குறித்து வேண்டுகோள்களும் விடுக்கப்பட்டன. ஜேர்மனியைத் தொடர்ந்து சில வாரங்களுக்கு முன்னர் பிரித்தானியாவும், சிறிலங்காவுக்கான தனது உதவிகளைக் குறைத்துக்கொண்டிருக்கின்ற

  • தொடங்கியவர்

இலங்கைக்கான உதவிகளை பல நாடுகள் நிறுத்தும் சாத்தியம்?

இலங்கை அரசாங்கம் சிறுபான்மை தமிழர்களுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள தவறியமை மற்றும் சட்டவிரோத படுகொலைகளை நிறுத்துவதற்கு தவறியதன் காரணமாக அந்த நாட்டிற்கான நிதியுதவியை மேலும் பல நாடுகள் இடைநிறுத்தலாமென அதிகாரிகளும் இராஜதந்திரிகளும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சர்வதேச செய்தி நிறுவனமொன்று (ஏ.எவ்.பி.) கூறுகையில்,

அமெரிக்காவும் பிரிட்டனும் இலங்கைக்கான தமது நிதியுதவியை குறைத்துள்ள நிலையில், மேலும் பல நாடுகள் இதே முடிவை எடுக்கலாமென தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கான நிதியுதவியை மனித உரிமை விவகாரத்துடன் தொடர்புபடுத்துமாறு கோரும் மனித உரிமை ஆர்வலர்களுடன் ஜப்பான் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக இராஜதந்திரியொருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அதிகளவான நிதியுதவியை ஜப்பான் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இலங்கை விவகாரத்தில் மேலும் அதிகளவிலான பங்களிப்பை வழங்குமாறு சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு ஜப்பானை கேட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களை முடிவிற்கு கொண்டுவருவதற்கான அழுத்தத்தை கொடுக்கும் முன்னணி பங்களிப்பை ஜப்பான் மேற்கொள்ளும் என எதிர்பார்ப்பதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு உதவி வழங்கும் சமூகத்தின் கவலையை அமெரிக்க பிரதி வெளிவிவகார அமைச்சர் ரிச்சர்ட் பௌச்சரும் வெளியிட்டிருந்தார்.

மக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர். அதிகளவு நெருக்கடிகளை எதிர்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இலங்கையின் மனித உரிமை நிலைவரத்தில் ஒட்டுமொத்தமாக வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

700 இற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போன யாழ். குடாநாட்டிற்கும் பௌச்சர் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இலங்கையின் தற்போதைய நிலைவரம் பிரிட்டிஷ் பாராளுமன்றத்திலும் சமீபத்தில் எதிரொலித்ததுடன், சர்வதேச மனித உரிமை கண்காணிப்பு குறித்து வேண்டுகோள்களும் விடுக்கப்பட்டுள்ளன.

ஜேர்மனியை தொடர்ந்து சில வாரங்களுக்கு முன்னர் பிரிட்டனும் இலங்கைக்கான தனது உதவியை குறைத்துக் கொண்டது.

எனினும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம மூன்று மில்லியன் டொலர்கள் என்பது கவலைப்படுவதற்கு மிகச் சிறியது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரசியல் தீர்வுத் திட்டம் குறித்து வெளிநாடுகளில் வெளிவிவகார அமைச்சர் அளித்த வாக்குறுதிகள் அவருக்கு தற்போது நெருக்கடியை அளிக்கத் தொடங்கியுள்ளன.

பெப்ரவரியில் இந்தியத் தலைவர்களிடம் ஏப்ரலில் அதிகாரப் பகிர்வு யோசனைகள் முன்வைக்கப்படுமென அவர் தெரிவித்திருந்தார். பின்னர் அமெரிக்க வெளிவிவகார அமைச்சரிடமும் இதனைத் தெரிவித்திருந்தார்.

எனினும், இதுவரை உறுதியான யோசனைகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. மே முதலாம் திகதி ஆளும் கட்சி முன் வைத்த யோசனைகளை அரசாங்கத்தின் சகாக்களும் தமிழர்களும் உடனடியாக நிராகரித்திருந்தனர்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அமெரிக்க அமைச்சருடன் இது பற்றி கலந்துரையாடியதாக குறிப்பிட்டுள்ள அதிகாரிகள் இறுதித் தீர்விற்கான திகதி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

தினக்குரல்

ஏதோ இப்போதுதான் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதுபோல் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் ஓவர் அக்டிங் குடுக்கிறார்கள்.

புலிகளின் பலம் குறைந்துவிட்டதென்று நினைத்திருந்த இந்நாடுகள், புலிகளின் வான் தாக்குதல்களினால் விழித்தெழுந்துள்ளன. நாளுக்கு நாள் சிதைந்துகொண்டிருக்கும் இலங்கை போன்ற ஒரு நாட்டில் யார்தான் முதலீடு செய்வார்கள் !

பலமுள்ளவனே புவி ஆள்வான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.