Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் உள்ளூராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

votes.jpg

தமிழகத்தில் உள்ளூராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்

தமிழகத்தில் உள்ளூராட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிஆரம்பமாகியது.

இன்று (வியாழக்கிழமை) காலை, தேர்தல் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள  அறைகள் சீல் உடைக்கப்பட்டு திறக்கப்பட்டன.  பின்னர் காலை 8 மணிக்கு வாக்கு பெட்டிகள் அனைத்தும் பொதுவான வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்பட்டு, வாக்கு எண்ணிக்கை  ஆரம்பமாகியது.

மேலும் வாக்கு  எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 30 மேஜைகளில்  வாக்கட்டைகள் கொட்டப்பட்டு எண்ணப்படுகின்றன.

அந்தவகையில் ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கண்காணிப்பாளர் மற்றும் 3பேர் வாக்கட்டைகள் எண்ணும் பணியில் உள்ளனர்.

மேலும் 8 தடவைகள் வாக்குகள் எண்ணும் பணி நடக்கும். இதனால் வாக்கு அட்டைகளை பிரிக்கும் பணி இன்று பகல் 1 மணிக்கு மேல் வரை நீடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

வாக்குகளை எண்ணும் பணியில் சுமார் 2 இலட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் பலத்த பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/தமிழகத்தில்-உள்ளூராட்ச-5/

  • கருத்துக்கள உறவுகள்

அதிமுக-திமுக மாறும் முன்னிலை: இரவும் தொடரும் வாக்கு எண்ணிக்கை!

60.jpg

 

வாக்கு எண்ணிக்கை இரவு முழுவதும் தொடரும் என தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வாக்குப் பதிவு ஆரம்பித்த சில மணி நேரத்தில் தேர்தல் ஊழியர்களுக்கு காலை உணவு வழங்கவில்லை என்று சில இடங்களில் பிரச்சினை ஏற்பட்டது. சில இடங்களில் வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றிபெற்றவர்களை அறிவிக்க மறுக்கிறார்கள் என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக பல இடங்களில் போராட்டங்களும் நடந்து வருகின்றன.

ஆரம்பம் முதல் அதிமுகவும், திமுகவும் மாறி மாறி முன்னிலையில் இருந்துவருகின்றன. மாலை 6.30 மணி நிலவரப்படி 515 இடங்களுக்கான மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவியிடங்களில் அதிமுக கூட்டணி 165 இடங்களிலும், திமுக கூட்டணி 158 இடங்களிலும், பிற கட்சிகள் 2 இடங்களிலும் முன்னிலையில் இருந்துவருகின்றன. ஒன்றிய குழு உறுப்பினர் பதவியிடங்களைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 5090 பதவியிடங்களில் அதிமுக கூட்டணி 566 இடங்களிலும், திமுக கூட்டணி 685 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. அமமுக 32 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் இன்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி, “வாக்கு எண்ணிக்கை நாளைவரை தொடர வாய்ப்பு உள்ளது. வாக்கு எண்ணும் ஊழியர்களை சுழற்சி முறையில் ஈடுபடுத்துவது பற்றி தேர்தல் அலுவலர் முடிவெடுப்பார். இரவு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடரும்” என்று அறிவித்துள்ளார்
 

 

https://minnambalam.com/politics/2020/01/02/60/leading-status-in-local-body-election

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Madras-High-Court.jpg

உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் – உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு

உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் செய்வதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. முறைப்பாடு செய்துள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாக சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநிலத் தலைமை தேர்தல அலுவலகத்தில் தேர்தல் ஆணையர் பழனிசாமியை நேரில் சந்தித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று முறைப்பாட்டினை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், அறிவிக்கப்பட வேண்டிய தேர்தல் முடிவுகளை கூட அறிவிக்காமல் இருக்கிறார்கள் என்றும் மாவட்ட அளவில் முறைப்பாடுகளை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்தேன் என்று விளக்கமளித்தார்.

இந்நிலையில் உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் செய்வதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இம்மனுவை அவசர வழக்ககாக இன்று விசாரிக்க மறுத்த நீதிமன்றம் நாளை காலை முறையிட அறிவுறுத்தியுள்ளது.

இதையடுத்து இம்மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://athavannews.com/உள்ளூராட்சித்-தேர்தல்-மு/

  • கருத்துக்கள உறவுகள்


 

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: மாவட்ட ரீதியாக முன்னிலை நிலவரம்!

 

41.jpg

தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (ஜனவரி 2) காலை 8 மணிக்குத் துவங்கி,24 மணி நேரத்தையும் கடந்து தற்போது வரை நீடித்து வருகிறது. பல இடங்களில் திமுக முன்னிலை பெற்றதை அறிவிக்காமலும், வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்காமலும் இழுத்தடித்து வருவதாக திமுக குற்றம்சாட்டி வருகிறது.

தற்போது வரை மாவட்ட வார்டு உறுப்பினர் பதவியிடங்களில் திமுகவும், அதிமுகவும் மாறி மாறி முன்னிலை வகித்துவருகின்றன. ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் அதிகளவில் முன்னிலையில் இருந்து வருகிறார்கள். 12 மணி நிலவரப்படி திமுக 2,285, அதிமுக 2,148, அமமுக 90, நாம் தமிழர் 1 ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.

அரியலூர்

மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்களைப் பொறுத்தவரை அரியலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 12 பதவியிடங்களில் 11 இடங்களில் ஆளுங்கட்சியான அதிமுக முன்னிலையில் இருந்துவருகிறது. ஒரு இடத்தில் மட்டுமே திமுக முன்னிலை வகித்து வருகிறது. இங்கு அரசு கொறடா ராஜேந்திரன் மாவட்டச் செயலாளராக இருந்துவருகிறார்.

திருமானூர் ஒன்றியத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சில் வார்டு எண் 8, 9, மாவட்ட கவுன்சில் திருமானூர் மேற்கு ஆகியவற்றின் முடிவுகளை அறிவிக்காமல் இருப்பது குறித்தும், ஜெயங்கொண்டம் ஒன்றியம் கல்லாத்தூர் ஒன்றிய கவுன்சில் முடிவை மாற்றி அறிவித்ததாக குற்றம்சாட்டிய அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர், நேற்றிரவு மாவட்ட ஆட்சியர் ரத்னாவை சந்தித்து புகார் அளிக்கச் சென்றுள்ளார்.

 

ஆனால், மாவட்ட ஆட்சியர் சந்திக்க மறுப்பு தெரிவித்துவிட்டதாகக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு

ஈரோட்டில் மொத்தமுள்ள 19 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் இடங்களில் அதிமுக கூட்டணி 14 இடங்களிலும், திமுக 5 இடங்களிலும் முன்னிலை வகித்துவருகிறது.

கடலூர்

கடலூரில் மொத்தமுள்ள 29 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவியிடங்களில் அதிமுக கூட்டணி 15 இடங்களில் முன்னிலையில் இருந்துவருகிறது. அதற்கு சரிசமமாக திமுக கூட்டணி 14 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

கரூர்

கரூர் மாவட்டத்தில் உள்ள 12 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவியிடங்களில் அதிமுக கூட்டணி அதிகபட்சமாக 9 இடங்களில் முன்னிலையில் உள்ளது. திமுக கூட்டணி 3 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.

இங்கு ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களுக்குப் போட்டியிட்ட திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற்றுவிட்டதாகவும், ஆனால் வெற்றியை மாற்றி அதிமுக வேட்பாளர்கள் வெற்றிபெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்துவிட்டதாகவும் கூறி கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி, கரூர் எம்.பி ஜோதிமணி உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பும் ஏற்பட்டது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 11 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களில் அதிமுக கூட்டணி 6 இடங்களிலும், திமுக கூட்டணி 5 இடங்களிலும் முன்னிலையில் இருந்துவருகின்றன.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள 23 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவியிடங்களில் திமுக கூட்டணி 15 இடங்களில் முன்னிலையில் பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி 8 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

கோவை

கோவையைப் பொறுத்தவரை 17 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவியிடங்கள் உள்ளன. அதில், அதிமுக கூட்டணி 12 இடங்களிலும், திமுக கூட்டணி 5 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

சிவகங்கை

சிவகங்கையிலுள்ள 16 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவியிடங்களில் 8 இடங்களில் அதிமுகவும் 8 இடங்களிலும் திமுக என சம அளவில் முன்னிலை வகித்து வருகின்றன.

சேலம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சேலத்தில் மொத்தம் 29மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் உள்ளன. அதில், 20 இடங்களில் ஆளும் அதிமுக கூட்டணியே முன்னிலையில் இருந்து வருகிறது. 3 இடங்களில் திமுக முன்னிலையில் இருந்துவருகிறது.

தஞ்சாவூர்

தஞ்சாவூரில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினருக்கான 28 பதவியிடங்களில் 21 இடங்களில் எதிர்க்கட்சியான திமுக முன்னிலையில் இருந்துவருகிறது. ஆளும் அதிமுக கூட்டணி 5 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

தருமபுரி

தருமபுரியில் மொத்தமுள்ள 18 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவியிடங்களில் 12 இடங்களில் அதிமுகவும், 6 இடங்களில் திமுகவும் முன்னிலையில் உள்ளன.

திண்டுக்கல்

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் சொந்த மாவட்டமான திண்டுக்கலில் மொத்தம் 23 மாவட்ட வார்டுகள் உள்ளன. அங்கு, எதிர்க்கட்சியான திமுக 16 இடங்களிலும், ஆளுங்கட்சியான அதிமுக கூட்டணி 7 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. இது திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமியின் மாவட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி

திருச்சி மாவட்டத்திலுள்ள 24 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களில் திமுக கூட்டணி 14 இடங்களில் முன்னிலையில் இருந்துவருகிறது. இங்கு திமுக மாவட்டச் செயலாளராக, அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கே.என்.நேரு உள்ளார். வெல்லமண்டி நடராஜன், வளர்மதி என இரண்டு அமைச்சர்கள் இருந்தும் அதிமுக 5 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.

திருப்பூர்

திருப்பூரிலுள்ள 17 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவியிடங்களில் அதிமுக 12 இடங்களிலும், திமுக 5 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

திருவண்ணாமலை

முன்னாள் அமைச்சரும், திமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவருமான எ.வ.வேலுவின் சொந்த மாவட்டமான திருவண்ணாமலையில் மொத்தமுள்ள 34 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களில் திமுக 24 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் மாவட்டமான திருவண்ணாமலையில் அதிமுக வெறும் 9 இடங்களையே கைப்பற்றியுள்ளது.

திருவள்ளூர்

திருவள்ளூரிலுள்ள 24 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவியிடங்களில் திமுக 18 இடங்களிலும் அதிமுக 6 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. இங்கு அதிமுக சார்பாக மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின் என இரு அமைச்சர்கள் பதவி வகித்து வருகிறார்கள்.

திருவாரூர்

திருவாரூரில் மொத்தமுள்ள 18 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் இடங்களில் திமுக கூட்டணி 14 இடங்களில் முன்னிலையில் இருந்துவருகிறது. உணவுத் துறை அமைச்சர் காமராஜின் சொந்த மாவட்டமான திருவாரூரில் அதிமுக 3 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இங்கு திமுக மாவட்டச் செயலாளராக பூண்டி கலைவாணன் இருந்துவருகிறார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மொத்தமுள்ள 17 மாவட்ட வார்டுகளில் அதிமுக 12 இடங்களிலும், திமுக கூட்டணி 5 இடங்களிலும் முன்னிலையில் இருந்துவருகிறது. இங்கு அதிமுக மாவட்டச் செயலாளராக இருப்பவர் அமைச்சர் கடம்பூர் ராஜு.

தேனி

பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் 10 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் உள்ளன. அதில், அதிமுக 8 இடங்களில் முன்னிலையில் இருந்துவருகிறது. திமுக 2 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

நாகை

நாகையிலுள்ள 21 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவியிடங்களில் 15 இடங்களில் திமுக முன்னிலையில் உள்ளது. மாவட்டத்தின் அதிமுக அமைச்சரான ஓ.எஸ்.மணியன் தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்றபோதே அவருக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில் நாகையில் அதிமுக கூட்டணி 6 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

நாமக்கல்

மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணியின் சொந்த மாவட்டமான நாமக்கலில் அதிமுக கூட்டணி 13 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவியிடங்களில் முன்னிலையில் உள்ளது. திமுக 4 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இங்கு மொத்தம் 17 வார்டுகள் உள்ளன.

நீலகிரி

நீலகிரியில் மொத்தமுள்ள 6 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் 5இல் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. 1 இடத்தில் மட்டும் அதிமுக முன்னிலையில் உள்ளது. இங்கு மக்களவை உறுப்பினராக திமுகவின் ஆ.ராசா பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் மொத்தமுள்ள 22 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் திமுக 13 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த ஊரான இங்கு அதிமுக 9 வார்டுகளில் முன்னிலையில் உள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூரில் மொத்தமுள்ள 8 மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர் பதவியிடங்களில் திமுக கூட்டணி 7 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இது முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளருமான ஆ.ராசாவின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு அதிமுக 1 இடத்தில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

மதுரை

மதுரையைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 23 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களில் திமுக 13 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மதுரை மாவட்டத்தில் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் என இரண்டு அமைச்சர்கள் உள்ள போதிலும் அதிமுக கூட்டணி 9 இடங்களில் மட்டும் முன்னிலை பெற்றுள்ளது.

ராமநாதபுரம்

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களில் ராமநாதபுரத்தைப் பொறுத்தவரை திமுக 11 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. அதிமுக 6 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இங்கு மொத்தம் 17 வார்டுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

விருதுநகர்

அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் சொந்த மாவட்டமான விருதுநகரில் மொத்தம் 20 வார்டுகள் உள்ளன. அதில் 10 வார்டுகளில் அதிமுக கூட்டணியும், 7 வார்டுகளில் திமுக கூட்டணியும் முன்னிலை பெற்றுள்ளன.

பிற்பகலுக்குப் பிறகு இறுதி முடிவுகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://minnambalam.com/k/2020/01/03/41

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.