Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துணை முதல்வருக்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பு நீக்கம் – மத்திய அரசு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

panner-chelvam-720x450.jpg

துணை முதல்வருக்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பு நீக்கம் – மத்திய அரசு!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.

பாதுகாப்பு முக்கியத்துவம் கருதி  முக்கிய தலைவர்களுக்கு இசட் பிளஸ், இசட், எக்ஸ், வை ஆகிய பிரிவுகளின் கீழ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

குடியரசுத் தலைவர், துணை குடியரசுத்  தலை வர், பிரதமர், நீதிபதிகள், மத்திய அமைச்சர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

தவிர பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள தனி நபர்களுக்கும் அவர்கள் தகுதிக்கு ஏற்ப பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

தேசிய பாதுகாப்பு படை  கமாண்டோக்கள், டெல்லி பொலிஸார் அல்லது இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்புப் படையினர், மத்திய ரிசர்வ் பொலிஸ் படை வீரர்கள் பாதுகாப்புப்  பணிக்காக நியமிக்கப்படுவர்.

இதற்கிடையே, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைக்குப் பின்னர் முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்துக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு அளிக்கப்பட்டு வரும் இசட் பிரிவு பாதுகாப்பு நாளையில் இருந்து விலக்கிக்  கொள்ளப்படுவதாக தமிழக அரசுக்கு சி.ஆர்.பி.எப். கடிதம் எழுதியுள்ளது.

மத்திய அரசின் பாதுகாப்புப் பட்டியலில் இருந்து துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் பெயர் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிற அமைச்சர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு ஓ.பன்னீர் செல்வத்துக்கு தொடரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் வி.ஐ.பி.க்களுக்கான பாதுகாப்பு தொடர்பாக மத்திய – மாநில அரசுகளின் முடிவுகளின்படி, நாடு முழுவதும் பல்வேறு தலைவர்களுக்கான பாதுகாப்பு படிநிலைகளை குறைப்பது, அதிகரிப்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளிட்டவையை கருத்தில்  கொண்டு பாதுகாப்பு படி நிலைகள், குறைப்பது அல்லது கூட்டுவது தொடர்பாக உள்துறை அமைச்சகம் இத்தகைய முடிவுகளை எடுத்து வருகிறது.

http://athavannews.com/துணை-முதல்வருக்கு-வழங்கப/

###########    ###########   ###########  ##########

stalin-2.jpg

துணை முதலமைச்சரை தொடர்ந்து ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட ”இசட் பிரிவு” பாதுகாப்பு நீக்கம்!

துணை முதலமைச்சரை தொடர்ந்து தி,மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த “இசட் பிரிவு” எனப்படும் மத்திய ரிசர்வ் பொலிஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள பல்வேறு முக்கிய தலைவர்களுக்கு அச்சுறுத்தலின் அடிப்படையில் மத்திய  உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு வழங்குகிறது.

இந்தநிலையில்,   கடந்த 6-ம் திகதி  தமிழக காவல் துறை அதிகாரிகளுடன்,  மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் நடத்திய ஆலோசனையில்,  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்ற அடிப்படையில் அவருக்கான பாதுகாப்பு திரும்ப பெறப்படுகிறது.

அவருக்கு மாநில பொலிஸ்  சார்பில் துப்பாக்கி ஏந்திய “லு” பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதேபோன்று,  தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட ‘இசட் பிரிவு’ பாதுகாப்பும் திரும்பப் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/துணை-முதலமைச்சரை-தொடர்ந்/

துணை முதல்வர் பன்னீர்ச்செல்வத்துக்கோ எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கோ  சட் பிரிவு பாதுகாப்புத் தேவையில்லை. இவர்களுக்கு புலிகளிடம் இருந்து உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்ற காரணத்தைக்  காட்டியே இவர்களுக்கு இந்த சட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. இவர்களுக்கு மட்டுமல்ல சோனியா காந்தி, இராகுல் காந்தி போன்ற அரசியல் தலைவர்களுக்கும் இந்தப் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

ஜெயலலிதாக்கு  சட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. அதுமட்டுமல்ல வெளியில் போகும் போது குண்டு துளைக்காத கவசமும் அணிந்திருந்தார்.

அண்மைக் காலமாக இப்படியான சட் பிரிவு பாதுகாப்பை வைத்திருத்தல் ஒரு கௌரவமாகவே கருதப்பட்டது.

உண்மையில் இவர்களுக்குப்  பாகாப்பு அச்சுறுத்தல் இருந்தால் அது உள்நாட்டு வெளிநாட்டு முஸ்லிம் தீவிரவாதிகளிடம் இருந்தே வரும் சாத்தியம் இருக்கிறது.

பொது மக்களுடைய வரிப்பணம் வீணாகச் செலவழிக்கக் கூடாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

24 படை வீரர்கள்

இனி எந்த விஐபிக்கும் கருப்பு பூனை படை இல்லை.. மொத்தமாக என்எஸ்ஜி விடுவிப்பு.. மத்திய அரசு அதிரடி

கருப்பு பூனை படை என்று அழைக்கப்படும் என்எஸ்ஜி கமாண்டோக்களை விஐபிக்களை பாதுகாக்கும் பணியில் இருந்து முழுமையாக நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திரா காந்தி 1984ம் ஆண்டு பாதுகாவலரால் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு 20 ஆண்டுகளுக்கு மேலாக பயங்கரவாத எதிர்ப்பு படையாக கருப்பு பூனை கமாண்டோக்கள் விஐபிகளுக்கு பாதுகாப்பு கடமையை செய்து வந்தனர்.

சுமார் 26 ஆண்டுகளுக்கு பிறகு அந்த பணியில் இருந்து தங்களது இயல்பான பணியான பயங்கரவாத தடுப்பு பணியில் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து என்எஸ்ஜி கமாண்டோக்கள் பணியாற்ற போகிறார்களாம்.

தேசிய பாதுகாப்பு படை 'அதிநவீன தாக்குதல் ஆயுதங்களை ஏந்திய கமாண்டோக்களை நாட்டில் இசட் + 'பிரிவின் கீழ் உள்ள 13' உயர்-ஆபத்து 'வி.ஐ.பி-க்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறது, அவை ஒவ்வொன்றிற்கும் சுமார் 24 பணியாளர்களைக் கொண்டது. இந்த பணியினை இனி துணை ராணுவப்படை மேற்கொள்ளும் என தெரிகிறது.

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு பாதுகாப்பு வழங்குவது உள்ளிட்ட என்.எஸ்.ஜி.யின் பாதுகாப்பு கடமைகள் விரைவில் துணை ராணுவப் படைகளுக்கு மாற்றப்படும் என்று பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் முன்னாள் முதல்வர்கள் மாயாவதி, முலாயம் சிங், சந்திரபாபு நாயுடு, பிரகாஷ் சிங் பாதல் மற்றும் பரூக் அப்துல்லா, அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால், பாஜக தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான எல் கே அத்வானி ஆகியோரையும் இனி தேசிய பாதுகாப்பு படைக்கு பதில் துணை ராணுவமே பாதுகாக்கும்.

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கடத்தல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் குறிப்பிட்ட பணிகளைக் கையாளுவது தேசிய பாதுகாப்பு படையின் (என்.எஸ்.ஜி) அதன் உண்மையான பணி என்றும் அதில் தான் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அதிக ஆபத்துள்ள வி.ஐ.பி-களைப் பாதுகாக்கும் பணி என்பது கூடுதல் சுமையாக மத்திய உள்துறை அமைச்சகம் "கருதுகிறது" என்றும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

பாதுகாப்பு அதிகாரி

"என்.எஸ்.ஜி அதன் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கடத்தல் எதிர்ப்பு கடமைகளுக்கு திரும்பிச் செல்ல வேண்டும். இதுதான் சமீபத்திய நடவடிக்கைக்கு காரணம்" என்று பாதுகாப்பு துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

என்.எஸ்.ஜி.யில் இருந்து வி.ஐ.பி பாதுகாப்பு கடமைகளை நீக்குவதால் சுமார் 450 கமாண்டோக்கள் விடுவிக்கப்படுவார்கள், அவர்கள் நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள ஐந்து மையங்களில் பரவியிருக்கும் பாதுகாப்பு படையில் செயல்படுவார்கள் என்றும், டெல்லிக்கு அருகிலுள்ள குருகிராமில் தலைமையாக கொண்டு நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.

Read more at: https://tamil.oneindia.com/news/delhi/government-decides-to-withdraw-nsg-from-vip-security-tasks-373957.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.