Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமானப்பயணிகளின் உயிருடன் விளையாடுவது தொடர்கின்றது- இது 1988 சம்பவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிஎன்என்

தமிழில் வீரகேசரி இணையம் 

ஈரானில், யுத்தம் குறித்த அச்சங்களிற்கு  மத்தியில் உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்படுவதற்கு இரண்டு நாட்களிற்கு முன்னர் ஈரான் ஜனாதிபதி 1988 இல் இடம்பெற்ற சம்பவத்தை உலகம் மறக்ககூடாது என வேண்டுகோள் விடுத்தார்.

1988 ம் ஆண்டு அமெரிக்க கடற்படை கப்பலொன்றின் தாக்குதலில் 290 பேருடன் பயணித்த ஈரானின் விமானம் வீழ்ந்து நொருங்கிய சம்பவத்தையே அவர் நினைவுகூர்ந்தார்.

ஈரானின் எயர்பிளைட் 655 எனும் எயர்பஸ் 300 ரக விமானம் 290 பேருடன் பயணித்துக்கொண்டிருந்தவேளை  அமெரிக்காவின் யுஎஸ்எஸ் வின்செனஸ்  என்ற போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை அந்த விமானத்தை தாக்கியது.

Vincennes_returns_to_San_Diego_Oct_1988.

1988 ம் ஆண்டு  யூலை 3 ஆம் திகதி துபாயிலிருந்து ஈரானிற்கு பாராசீக வளைகுடா ஊடாக பயணித்துக்கொண்டிருந்த விமானத்தையே அமெரிக்க போர்க்கப்பல் சுட்டு வீழ்த்தியிருந்தது.

ஈரான் ஜனாதிபதி ஜனவரி ஆறாம் திகதி வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவில் 290 என்பதை குறிப்பிட்டிருந்தது.

52 என்ற இலக்கத்தை  சுட்டிக்காட்டுபவர்கள் 290 என்பதையும் நினைவில் வைத்திருக்கவேண்டும். ஈரானை ஒருபோதும் அச்சுறுத்த நினைக்கவேண்டாம் என அவர் டுவிட்டரில் பதிவு செய்திருந்தார்.

ஜனவரி மூன்றாம் திகதி அமெரிக்க தாக்குதலில் கசேம் சொலைமானி கொல்லப்பட்டமை அமெரிக்காவிற்கும் ஈரானிற்கும் இடையிலான பதட்டத்தையும் அதிகரித்துள்ளது.

இதேபோன்றதொரு பதட்டமான நிலையே 1988 ல் காணப்பட்டது.

Iran_Air_655_Strait_of_hormuz_80.jpg

1980 முதல் 88 வரையான ஈரான் ஈராக் யுத்தத்தின் ஒரு பகுதியாக பாரசீக வளைகுடாவில் இடம் பெற்ற எண்ணெய் கப்பல் யுத்தத்திலிருந்து  குறிப்பிட்ட பகுதியில் பயணிக்கும் வர்த்த கப்பல்களை பாதுகாப்பதற்காக நடவடிக்கைகளில் அமெரிக்க கடற்படையினர் ஈடுபட்டிருந்த தருணத்திலேயே  அந்த சம்பவம் இடம்பெற்றது.

பராசீக வளைகுடா ஊடாக ஈராக்கிற்கு விநியோகங்கள் செல்வதை தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட ஈரான் கடல்கண்ணிவெடிகளை பயன்படுத்தியதுடன் கப்பல்கள் மீது ரொக்கட் தாக்குதல்களை மேற்கொண்டு வந்தது.

இவ்வாறான சூழ்நிலையில் 1987 ஆம் ஆண்டு ஈரானின் எண்ணெய் கப்பல் என நினைத்து அமெரிக்காவின்  யுஎஸ்எஸ் ஸ்டார்க் மீது ஈராக்கின் போர் விமானங்கள் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் 37 கடற்படை மாலுமிகள் கொல்லப்பட்டனர்.

இதன் பின்னர் 1988 ஏப்பிரல் 14 ஆம் திகதி யுஎஸ்எஸ் சாமுவெல் பி ரொபேர்ட்ஸ் என்ற கடற்படைகப்பல் ஈரானின் கடற்கண்ணி வெடியில் சிக்கி மோசமான சேதத்தை எதிர்கொண்டது.

இதற்கு நான்கு நாட்களின் பின்னர் அமெரிக்கா கப்பலொன்றின் ஏவுகணை தாக்குதல் காரணமாக ஈரானிய கப்பலொன்று மூழ்கடிக்கப்பட்டது.

1988 ஆம் ஆண்டு யூலை மூன்றாம் திகதி அந்த சம்பவம்இடம்பெற்றவேளை இதேபோன்றே பாரசீக வளைகுடா பதட்டமானதாக காணப்பட்டது.

அன்றையதினம் ஈரானின் எயர் பிளைட் 655 பண்டர் அபாஸ் என்ற இராணு-பயணிகள் விமானநிலையத்திலிருந்து புறப்பட்டது.

800px-A300_Iran_Air_EP-IBT_THR_May_2010.

அவ்வேளை அமெரிக்க கடற்படையினர் ஈரான் தனது எவ் 14 ரக போர் விமானங்களை குறிப்பிட்ட விமான நிலையத்திற்கு மாற்றிவிட்டதாக கருத தொடங்கியிருந்தனர்.

குறிப்பிட்ட எவ்14 விமானங்களில் ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன, அவற்றை பயன்படுத்தி அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் மீது தாக்குதல்கள் இடம்பெறலாம் எனவும் கடற்படையினருக்கு தகவல்கள் கிடைத்திருந்தன.

இதற்கு முதல் நாள் தனக்கு அருகில் வந்த எவ் 14 விமானத்தை நோக்கி அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஹேல்சே எச்சரிக்கை வேட்டுகளை தீர்த்திருந்தது.

இவ்வாறான பின்னணியில் அன்று காலை பாக்கிஸ்தானின் எண்ணெய் கப்பலை அச்சுறுத்திய ஈரானின் கடற்படை கலங்கள் மீது அமெரிக்காவின் வின்செனெஸ் மோதலில் ஈடுபட்டிருந்தவேளை ஈரான் எயர் 655 விமானம் வழமையை விட தாமதமாக பண்டர் அபாசிலிருந்துபுறப்பட்டது.

பின்னர் இடம்பெற்ற விசாரணைகளின் போது குறிப்பிட்ட விமானம் தன்னை தெளிவாக அடையாளம் காண்பித்தபடி அனுமதிக்கப்பட்ட வான் பகுதி ஊடாக பயணித்துக்கொண்டிருந்தமை தெரியவந்தது.

அவ்வேளையில் யுஎஸ்எஸ் வின்செனஸ் கப்பலின் கப்டனிற்கு இனந்தெரியாத விமானமொன்றை ராடார் தொடர்புகொண்டபோதிலும்அந்த விமானம் உரிய பதில்களை வெளியிடவில்லை என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தவிமானம் ஈரானின் எவ் 14 விமானமாகயிருக்கலாம் என்ற தகவலும்அவருக்கு சொல்லப்பட்டமை பின்னர் தெரியவந்துள்ளது.

குறிப்பிட்ட விமானம் ஏவுகணைகளுடன் தனது கப்பலை நோக்கிவருகின்றதா என்பது தெரியாத நிலையில் தனது கப்பலிற்கு ஆபத்தா என்பதை உறுதி செய்ய முடியாத நிலையில்  வின்செனசின் கப்டன் காணப்பட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் முன்னைய சம்பவங்களை தொடர்ந்து தனக்கு வழங்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் அவர் இனந்தெரியாத அந்த விமானத்தை தாக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

800px-CAPT_Will_C._Rogers_III_1988.jpg

புறப்பட்டு ஏழு நிமிடங்களின் பின்னர் ஈரானின் எயர்பஸ் ஏ 300  அமெரிக்க கப்பலில் இருந்து மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை தாக்குதலிற்கு இலக்காகியது.

அமெரிக்கா பின்னர் இது துன்பியல் நிகழ்வு கவலைக்குரிய விபத்து என குறிப்பிட்டிருந்தது.

இதன் பின்னர் இந்த சம்பவம் தொடர்பில் ஈரான் சர்வதேச நீதிமன்றில் ஈரானிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தது.

1988_iran_plane_shot.jpg

1996 ஆம் ஆண்டு இரு நாடுகளும் இந்த வழக்கை முடித்துக்கொள்வதற்கு இணங்கின, அமெரிக்கா பாதிக்கப்பட்டவர்களிற்கு நஸ்ட ஈட்டை வழங்க முன்வந்தது.

https://www.virakesari.lk/article/73058

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கட்டுரை என்ன சொல்ல வருகுது ஈரான் தன்ட  ஆட்கள் பயணம் செய்த விமானத்தை அமெரிக்காவை பழி  வாங்குவதற்காக சுட்டு விழுத்தினத்தாமா :unsure:
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.