Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐரோப்பாவில் தடை செய்யப்பட்ட Face recognition தொழில்நுட்பம்... இந்தியாவில் அறிமுகம்... ஏன்?

Featured Replies

பெங்களூரு விமான நிலையத்தில் பயணிகளின் அடையாளங்களைச் சோதனை செய்யும் செக்கிங் பாய்ன்ட்களில் Face Recognition தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். 'Digi Yatra' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை 'டிஜிட்டல் இந்தியா' முழக்கத்தின் ஒரு பகுதியாக நடைமுறைப்படுத்தியிருக்கிறது சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம்.

பயணிகள் விமானப் பயணங்களை மேற்கொள்வதற்கு முன்னர், செக் பாய்ன்ட்களை விரைவாகக் கடக்கவும், அதே நேரம் பாதுகாப்பு அம்சங்களில் எந்தத் தவறும் ஏற்படாமல் இருக்கவும் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாக விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால், பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை. ஆனால், முதலில் ஆன்லைனில் Digi Yatra தளத்தில் நமது பெயர், மொபைல் எண், ஆதார் எண் ஆகியவற்றைக் கொடுத்து பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர், விமான நிலையத்தில் நமது Digi Yatra அடையாளத்தை உறுதி செய்த பின்னர் நமது தகவல்கள் அனைத்தும் Digi Yatra-வுக்கென இயங்கும் சர்வரில் பதிவு செய்யப்படும். அவ்வளவுதான் இனி விமான பயணங்களை மேற்கொள்ளும்போது செக் பாய்ன்ட்களில் நிற்கத் தேவையில்லை. நீங்கள் பயணம் மேற்கொள்ள உங்கள் முக அடையாளங்களே போதும்.

பெங்களூர் கெம்பிகௌடா சர்வதேச விமான நிலையத்தில் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தத் திட்டத்தைப் பற்றி மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "இந்தத் திட்டத்தின் செயல்பாடுகளைப் பார்க்க ஆர்வமாக உள்ளேன். உங்கள் முகமே உங்களது அடையாள அட்டையாக மாறியுள்ளது. இது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும். General Data Protection Regulation-ன் படி பயணிகள் தகவல்கள் பாதுகாக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார். மேலும், இத்திட்டத்தைச் செயல்படுத்திய முதல் நாடு இந்தியாதான் எனத் தன் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார். கலிபோர்னியாவில் இந்த முறையைப் பயன்படுத்தக் கூடாது என மூன்றாண்டுகள் தடையும், ஐரோப்பிய யூனியன் ஐந்தாண்டுகள் தடையும் விதித்துள்ளன.

உலகளவில் பல நாடுகளிலும் Facial Recognition தொடர்பாகக் கேள்விகளும் விவாதங்களும் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த முறையை யாரும் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம், இதை முறைப்படுத்த உலகளாவிய சட்டங்களும் வரையறைகளும் தேவை என ஆல்பபெட்டின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை முதல் மைக்ரோசாஃப்ட்டின் தலைவரான பிராட் ஸ்மித் வரை அனைவரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

அமைச்சர் சின்ஹாவின் ட்வீட்டுக்கு ரிப்ளை செய்து கேள்வியெழுப்பியிருந்தனர் நெட்டிசன்கள். 'இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும்போது நாம் எப்போதும் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோமோ என்ற உணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும்'. அதேபோல் 'General Data Protection Regulation என்பது ஐரோப்பியர்களுக்காக அவர்கள் உருவாக்கிய சட்டம். அதனால் இந்தியாவில் எப்படித் தகவல்களைப் பாதுகாக்க முடியும்', 'மற்ற நாடுகள் இதைத் தடை செய்துகொண்டிருக்கிற நிலையில் இந்தியா மட்டும் ஏன் அவசரகதியில் இந்தத் திட்டத்தை நடைமுறைபடுத்துகிறது' என்ற கேள்விகளை ட்விட்டரில் எழுப்பியிருந்தனர். The Inter Freedom Foundation அமைப்பும் சின்ஹாவின் ட்வீட்டுக்கு 'Digi Yatra திட்டம் சம்பந்தமான தனியுரிமை கொள்கைகளை அரசு வெளியிட வேண்டும்' எனக் கோரிக்கை விடுத்திருந்தனர்.

https://www.vikatan.com/technology/tech-news/india-uses-facial-recognition-in-airports-for-air-travellers

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.