Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டிஎம் கிருஷ்ணா எழுதிய மிருதங்கம் செய்வோர் பற்றிய நூல் வெளியீடு: கலாக்ஷேத்ராவில் அனுமதி மறுப்பு

Featured Replies

கலாக்ஷேத்ராவில் டிஎம் கிருஷ்ணாவிற்கு அனுமதி மறுப்பு

மிருதங்கம் செய்யும் கலைஞர்கள் குறித்து Sebastian & Sons என்ற பெயரில் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டிஎம் கிருஷ்ணா எழுதியுள்ள புத்தகத்தின் வெளியீட்டு விழாவிற்கு அளித்த அனுமதியை கலாக்ஷேத்ரா திரும்பப் பெற்றுள்ளது. புத்தகத்தில் சர்ச்சைக்குரிய பகுதிகள் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மிருதங்கம் செய்யும் கலைஞர்கள் குறித்து டி.எம். கிருஷ்ணா Sebastian & Sons என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகம் மிருதங்கம் செய்யும் கலைஞர்களுக்கும் மிருதங்கம் வாசிக்கும் கலைஞர்களுக்கும் இடையிலான சங்கடமான உறவு குறித்து விரிவாகப் பேசுகிறது. மிருதங்கம் பெரும்பாலும் மாட்டுத் தோலில் செய்யப்படும் நிலையில், மிருதங்கம் வாசிப்பவர்கள் பெரும்பாலும் மாட்டைப் புனிதமாகக் கருதுவதால், இந்த உறவு மிகச் சிக்கலான ஒன்றாகவும் இருக்கிறது.

செபாஸ்டியன் என்பவரை முன்னிறுத்தி, மிருதங்கம் செய்யும் கலை, மிருதங்கம் செய்பவருக்கும் வாசிப்பவருக்கும் இடையிலான உறவு, வாசிப்பவர் கொண்டாடப்படும் நிலையில், செய்பவர் ஒடுக்கப்பட்டவராக, அங்கீகாரமற்றவராக இருப்பது ஆகியவை குறித்து இந்த புத்தகத்தை எழுதியிருந்தார் டி.எம். கிருஷ்ணா.

இந்தப் புத்தகம் வரும் பிப்ரவரி 2ஆம் தேதியன்று சென்னையிலுள்ள கலாக்ஷேத்ரா ஃபவுண்டேஷனில் உள்ள ருக்மிணி அரங்கத்தில் வெளியிடப்படுவதாக இருந்தது. இந்த புத்தக வெளியீட்டு விழாவில் வரலாற்றாசிரியர் ராஜ் மோகன் காந்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் பங்கேற்பதாக இருந்தது.

கலாக்ஷேத்ராவில் டிஎம் கிருஷ்ணாவிற்கு அனுமதி மறுப்பு

இந்த நிலையில், இந்தப் புத்தகம் குறித்து இன்று ஆங்கில நாளிதழ் ஒன்றில் அறிமுகக் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார் கிருஷ்ணா. அதில் புத்தகம் மாட்டுத் தோலால் செய்யப்படுவது குறித்தும், பல்வேறு இசைக் கலைஞர்கள் அதனால் எதிர்கொண்ட மன ரீதியான சிக்கல்கள் குறித்தும் விவரிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்தப் புத்தகத்தை வெளியிட கொடுக்கப்பட்டிருந்த அனுமதியை கலாக்ஷேத்ரா ரத்து செய்துள்ளது. இது தொடர்பாக, டி.எம். கிருஷ்ணாவுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், "இது ஒரு அரசு நிறுவனமாக இருப்பதால் அரசியல் ரீதியாக, கலாச்சார ரீதியாக, சமூக ரீதியாக ஒற்றுமையைக் குலைக்கும் எந்த நிகழ்வையும் இங்கே அனுமதிக்க முடியாது.

இன்றைய செய்தித் தாள்களில் வெளிவந்த புத்தக மதிப்புரைகளில் சில பகுதிகளைப் பார்த்தால், இந்தப் புத்தகம் சர்ச்சைக்குரிய விஷயங்களைத் தொட்டுச் செல்வது தெரிகிறது. மேலும் நிறைய அரசியல் கருத்துகளும் உள்ளன. புத்தக வெளியீட்டு விழாவிற்காக அரங்கத்தை அளிக்க ஒப்புக்கொண்டபோது, இந்த விவகாரத்தைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் குறித்து எங்களுக்குத் தெரியாது.

ஆகையால் புத்தக வெளியீட்டு விழாவிற்காக எங்கள் அரங்கத்தை பயன்படுத்திக்கொள்ள அளிக்கப்பட்ட அனுமதியை ரத்துசெய்கிறோம்" எனக் கூறப்பட்டிருந்தது.

"காலையில் அவர்களுக்கு போன் செய்யச் சொன்னதாகச் சொன்னார்கள். ஆனால், அதற்குள் மின்னஞ்சலில் அனுமதி ரத்து குறித்த கடிதம் வந்துவிட்டது. முடிவெடுத்துவிட்ட நிலையில், அவர்களிடம் நான் விவாதிக்க விரும்பவில்லை" என பிபிசியிடம் கூறினார் டி.எம். கிருஷ்ணா.

"இந்த நிகழ்வு என்பது மிருதங்கம் செய்பவர்களைக் கொண்டாடும் நிகழ்வு. இதற்கு அனுமதி மறுப்பது வருத்தம் அளிக்கிறது. இந்தப் புத்தகம் மிருதங்கம் செய்பவர்களின் நிதர்சனம் குறித்துப் பேசுகிறது. நீங்கள் நாதம், நாதம் என்று சொல்கிறீர்களே.. அந்த நாதம் மாட்டைக் கொன்று அதன் தோலை எடுத்து மிருதங்கம் செய்தால்தான் கிடைக்கும். இந்த வேலையைச் செய்பவர்கள் பற்றி உங்கள் கருத்து என்ன?" எனக் கேள்வி எழுப்புகிறார் டி.எம். கிருஷ்ணா.

தற்போது புத்தக வெளியீட்டு விழா நிகழ்வு ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசத்தில் உள்ள அரங்கிற்கு மாற்றப்பட்டுள்ளது.

"இந்தப் புத்தகத்திற்காக நான் நான்கு வருடங்கள் வேலை பார்த்தேன். மிருதங்கம் செய்வது மிகவும் கடினமான காரியம். மாட்டைக் கொல்லலாமா என்று நீங்கள் பேசும்போது, மாட்டைக் கொன்றால்தான் மிருதங்கம் கிடைக்கும் என்ற நிதர்சனத்திற்கு என்ன பதில்? இனிமேல் மிருதங்கமே வேண்டாம் என முடிவெடுத்துவிடப்போகிறோமா? மிருதங்கம் செய்யும் கலைஞர்களை கௌரவப்படுத்தும் நிகழ்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டது மிகுந்த வருத்தமளிக்கிறது" என்றார் அவர்.

இந்த விவகாரம் தொடர்பாக கலாக்ஷேத்ராவின் கருத்தை அறிய மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

https://www.bbc.com/tamil/india-51311077

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.