Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு முழுவதும் இரண்டு மணி நேரம் மின் விநியோகம் துண்டிப்பு

Featured Replies

நாடு முழுவதும் மாறி மாறி இரண்டு மணி நேரங்களுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு தேவையான எரிபொருளை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் விநியோகிக்காமையே இதற்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

நீர்மின் உற்பத்தி நிலையங்களில் மின்சார உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் அனல் மின் உற்பத்தி நிலையங்களே தேவைப்படும் மின்சாரத்தை விநியோகித்து வருகிறது.

இன்று முதல் எரிபொருள் விநியோகிக்கப்படும் வரை கீழ் காணப்படும் நேரங்களில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட உள்ளது.

A :   08.30 - 10.30

B :   10.45 -12.45

C : 12.45 - 14.45

D : 14.45 - 16.45

ஆகிய நேரங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட உள்ளது. மின் விநியோக கட்டமைப்பை பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம் எனவும், கடந்த சில வருடங்கள் அதிகரித்த மின்சார தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கான புதிய மின் உற்பத்தி திட்டங்கள் செயற்படுத்தப்படவில்லை என்பதால் அடுத்த சில மாதங்களில் கடும் மின்சார நெருக்கடி ஏற்படும் எனவும் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

https://www.tamilwin.com/community/01/237737?ref=home-top-trending

 

Edited by போல்

  • தொடங்கியவர்

அமைச்சரின் தலையீட்டால் மின்சாரத் துண்டிப்பு இடைநிறுத்தம்

நாளாந்தம் 2 மணித்தியாலயத்திற்கு மின்சார விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு மின்சார சபை தீர்மானித்திருந்தது. இலங்கை மின்சார சபைக்கு எரிபொருள் விநியோகத்திற்காக வழங்கப்பட்டிருந்த கடன் தொகை வரையறைக்கு மேலதிகமாக அதிகரித்ததன் காரணமாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்றைய தினம் கரவலப்பிட்டிய அனல் மின் நிலையத்திற்கு விநியோகிக்கப்படும் எரிபொருளை இடைநிறுத்துவதற்கு தீர்மானித்தது.

இதற்கு அமைவாக கரவலப்பிட்டிய அனல் மின் நிலையத்தின் மின்சார உற்பத்தி தடைப்பட்டது.

இதன் காரணமாக நாளாந்தம் 2 மணித்தியாலங்கள் மின் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு மின்சார சபை தீர்மானித்தது. இருப்பினும் இது தொடர்பில் உடனடியாக தலையிட்ட போக்குவரத்து முகாமைத்துவ மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அமைச்சரவையின் அங்கீகாரத்துக்கு உட்பட்ட வகையில் மின்சார சபைக்கு எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு ஆலோசனை வழங்கினார்.

இதற்கு அமைவாக மீண்டும் எரிபொருளை விநியோகிப்பதற்கு பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்தது.

இதன் காரணமாக மின்சார சபையினால் திடீரென ஏற்பட்ட நிலைமையின் அடிப்படையில் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்ட 2 மணித்தியாலத்திற்கு மின்சாரத்தை இடைநிறுத்துவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக மீண்டும் தொடர்ச்சியாக மின்சாரத்தை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

https://www.virakesari.lk/article/74828

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.