Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தேவைப்படும் இந்தியாவின் உதவி

Featured Replies

பிரதமர் மஹிந்த ராஜபக் இந்தியாவைப் பயன்படுத்தி, பொருளாதார நெருக்கடிகளில் இருந்து தப்பிக் கொள்வதற்கான, முயற்சிகளில் இறங்கி யுள்ள நிலையில், அவர் நாட்டின் பெயரைக் கெடுத்து விட்டார் என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை சுமத்த ஆரம்பித்திருக்கின்றன.

இந்தியாவிடம் பெறப்பட்ட கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான தவணைக் காலத்தை 3 ஆண்டுகளுக்கு நீடிப்புச் செய்து தருமாறு இந்தியாவிடம் கோரியிருப்பதாகவும், அதற்கு சாதகமான பதில் கிடைக்கும் என்று நம்புவதாகவும், பிரதமர் மஹிந்த ராஜபக் இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியில் கூறியிருந்தார்.

கடனை திருப்பிச் செலுத்துவதற்கு இயலாமல் உள்ளது, அதற்கு மேலதிக காலஅவகாசம் தர வேண்டுமென்று பிரதமர் மஹிந்த ராஜபக் இந்தியாவிடம் கோரவில்லை.

“இந்தியா இதற்கு ஒத்துக் கொண்டால், ஜப்பானிடம் பெறப்பட்ட கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீடித்துக் கொள்ள முடியும். அதனை பயன்படுத்தி சீனாவிடம் பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு காலஅவகாசத்தையும் கோர முடியும்” என்றே அவர் கூறியிருக்கிறார்.

இந்தியாவை பயன்படுத்தி, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிடம் பெறப்பட்ட கடன்களை, திருப்பிச் செலுத்துவதற்கு காலஅவகாசம் பெறுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறது.

இந்த ஆண்டில், 4.8 பில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் இலங்கை அரசாங்கம் இருக்கிறது. இது தற்போதைய அரசாங்கத்துக்கு மிகப் பெரிய சிக்கலாக உள்ளது.

புதிய அரசாங்கம் கடன் நெருக்கடிகள் மற்றும் பொருளாதார சிக்கல்களினால், திட்டமிட்டவாறு பொருளாதார திட்டங்களை முன்னெடுக்க முடியாமல் இருக்கிறது.

வரும் மே மாதத்துக்கு முன்னர், பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலும், பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததாலும், பொருளாதார நெருக்கடிகளாலும், அரசாங்கத்தினால், எந்த திட்டத்தையும் செயற்படுத்த முடியாதுள்ளது.

பொதுத்தேர்தலுக்குப் பின்னர், புதிய அரசாங்கம் தனது திட்டங்களை நடை முறைப்படுத்துவதற்கு பெரியளவில் நிதி தேவைப்படும். இவ்வாறான நிலையில், 4.8 பில்லியன் டொலரை மீளச் செலுத்தும் போது, அரசாங்கம் பெரிய நெருக்கடியை சந்திக்கும்.

கடந்த அரசாங்கமும் கூட, தனது இறுதிக் காலகட்டத்தில் கடுமையான நெருக்கடிகளை சந்திக்க நேரிட்டது. கடந்த ஆண்டில் 5.6 பில்லியன் டொலர் கடன்தொகை திருப்பிச் செலுத்தப்பட்டது. இந்த ஆண்டில் 4.8 பில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்தும் நிலை ஏற்பட்டால், புதிய அரசாங்கத்தின் இயலாமையை மக்களுக்கு வெளிப் படுத்தி விடும். அது அரசாங்கத்தின் மீது ஆரம்பக் கட்டத்திலேயே வெறுப்பை ஏற்படுத்தும்.

வரும் தேர்தல்களில் அரசாங்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பதாலும், தனது திட்டங்களை செயற்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும் தான், எப்படியாவது கடன் திருப்பிச் செலுத்தும் கால எல்லையை நீடிக்க முற்படுகிறது.

இந்த ஆண்டில் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன்களில், இந்தியாவிடம் பெறப்பட்டது, 120 மில்லியன் டொலர் தான். அதற்கான வட்டிகளையும் சேர்த்து. 169.7 மில்லியன் டொலரை செலுத்த வேண்டியுள்ளது. இந்த ஆண்டில் திருப்பிச் செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகையான 4.8 பில்லியன் டொலரில், 28இல் ஒரு பங்கு தான் இது.

அடுத்த ஆண்டில், 182 மில்லியன் டொலரையும், 2022 இல், 168 மில்லியன் டொலரையும் இந்தியாவுக்கு திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது.

ஜப்பானுக்கு இந்த ஆண்டில் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தொகையான, 190 மில்லியன் டொலர் கூட, ஒப்பீட்டளவில் சிறியது தான்.

சீனாவிடம் பெறப்பட்ட 500 மில்லியன் டொலர் கடனும், வங்கிகள் மூலம் திரட்டப் பட்ட 1.4 பில்லியன் டொலர் கடனும் இந்த ஆண்டில் திருப்பிச் செலுத்த வேண்டிய முக்கியமான கடன்களாகும். இதில் வங்கிகள் மூலம் திரட்டப்பட்ட கடன்களை திருப்பிச் செலுத்துவதை தவிர்க்க முடியாது. அதனை கொடுத்து தான் ஆக வேண்டும்.

சீனாவிடம் பெறப்பட்ட கடன் மற்றும் அதற்கான வட்டியுடன் சேர்த்து, இந்த ஆண்டில் 674.4 மில்லியன் டொலரை செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது அரசாங்கம். எனவே, தான் சீனா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளிடம் பெறப்பட்ட கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு மேலதிக காலஅவகாசத்தைக் கோர முடிவு செய்யப்பட்டுள்ளது.

சீனாவுக்கே அதிகளவு கடன்களை திருப்பிக் கொடுக்க வேண்டியுள்ள நிலையில், காலஅவகாசம் தருமாறு அந்த நாட்டிடமே முதலில் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் சீனப் பயணத்தின் போது, இதற்கான கோரிக்கை விடுக்கப்படும் என்று அரசாங்க வட்டாரங்கள் கூறியுள்ளன.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் சீனப் பயணம் ஜனவரி மாதம் இடம்பெற்றிருக்க வேண்டும். பல்வேறு இழுபறிகளாலும், கொரோனா வைரஸ் பீதியாலும் அந்தப் பயணம் பிற்போடப்படும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் தான், இந்தியாவிடம் பிரதமர் மஹிந்த ராஜபக் கடனை திருப்பிச் செலுத்தும் கால அவகாசத்தை நீடிக்குமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இந்த கடன்தொகையை மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் திருப்பிச் செலுத்தினால் போதும் என்று ஒப்புக்கொண்டால், அதனைப் பயன்படுத்தி, சீனாவிடமும், ஜப்பானிடமும், இந்தியாவை முன்மாதிரியாக காட்டி தப்பித்துக் கொள்ளலாம் என்று அரசாங்கம் நினைக்கிறது. சீனாவைப் பொறுத்த வரையில், வணிக கடன்கள் விவகாரத்தில் ஏற்கனவே செய்து கொண்ட உடன்பாடுகளை மீளாய்வு செய்வதற்கு அவ்வளவாக விரும்புவதில்லை. ஏற்கனவே செய்து கொண்ட இணக்கப்பாடுகளின் படி செயற்பட வேண்டும் என்று எதிர்பார்க்கும் நாடு அது.

ரணில்மைத்திரி கூட்டு அரசாங்கத்தின் காலத்தில், சீனாவே இலங்கையை கடன் பொறிக்குள் தள்ளியது என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அத்துடன், இலங்கைக்கு வழங்கிய கடன்களுக்கான வட்டியை குறைக்க வேண்டும் என்று பீஜிங் வரை சென்று போராடி பார்த்தார் அப்போதைய நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க.

ஆனால், சீனா இது இருதரப்பு வணிக உடன்பாடு என்றும், இரண்டு நாடுகளுக்கும் நன்மையளிக்கும் வகையில், ஒப்புக் கொள்ளப்பட்ட உடன்பாட்டிலிருந்து விலக முடியாது எனவும் சீனா திட்டவட்டமாக கூறியிருந்தது.

சீனாவின் இந்த நிலைப்பாட்டினால், அப்போதைய அரசாங்கத்துக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளிலும் விரிசல்கள் ஏற்பட்டன.

அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டை மீளாய்வு செய்யப்போவதாக தற்போதைய அரசாங்கம் அறிவித்த போதும், சீனா அதனை விரும்பவில்லை. அதற்குப் பின்னரே, அந்த முடிவிலிருந்து பின்வாங்கியது.

எனவே தான், கடன் திருப்பிச் செலுத்தும் காலஎல்லையை நீடிக்குமாறு முதலில் சீனாவிடம் வாய் வைக்கவில்லை.

இந்தியா அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால், அதனை காரணமாக வைத்து, சீனா, ஜப்பானிடமும் அதே வேண்டுகோளை முன்வைக்க திட்டமிட்டுள்ளது அரசாங்கம். இது இந்தியாவை துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தித் தப்பிக் கொள்ளும் யுக்தியாகவே கூறலாம்.

இந்தியாவுக்கு இது ஒன்றும் பெரிய சிக்கலான விடயமல்ல. ஏனென்றால், இந்தியா கொடுத்துள்ள கடன் மிகப் பெரியதல்ல. ஆனால் சீனா கொடுத்துள்ள கடன், இந்தியா கொடுத்த கடன்களை விட நான்கு மடங்கு அதிகம்.

எனவே இந்தியாவின் முன்னுதாரணத்தை சீனா பின்பற்றுமா என்பது சந்தேகத்துக்குரியது தான்.

எவ்வாறாயினும், பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவினதும் அவரது அரசாங்கத்தினதும் இந்தக் கோரிக்கையை ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி போன்றன கடுமையாக விமர்சித்திருக்கின்றன.

உள்நாட்டு விவகாரங்களை பிற நாடுகளிடம் கொண்டு செல்வதை நாட்டு மக்கள் விரும்பவில்லை என்றும், இவ்வாறான நிலையில், இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க இந்தியா, சீனா போன்ற நாடுகளை நாடியிருப்பது பொருத்தமானது அல்ல என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

ஆனாலும், நாட்டு மக்களின் நலனுக்காக விடுக்கப்பட்ட கோரிக்கை தான் இது என்று சமாளிக்க முனைந்திருக்கிறது அரசாங்கம்.

ஆட்சியைப் பிடித்திருந்தாலும், தற்போதைய அரசாங்கம் அதனை கொண்டு நடத்துவதற்காக, பிற நாடுகளின் தயவுக்காக, குறிப்பாக இந்தியாவின் தயவுக்காக காத்திருக்க வேண்டியிருக்கிறது என்பதே உண்மை.

- ஹரிகரன்

https://www.virakesari.lk/article/75833

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.