Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜீவ்காந்தி கொலை வழக்கு – ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்: முதலமைச்சர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Edappady-Palanisamy.jpg

ராஜீவ்காந்தி கொலை வழக்கு – ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்: முதலமைச்சர்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைவாசிகளாக இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டசபையில் வரவு செலவு திட்டத்தின் மீது நேற்று (புதன்கிழமை) விவாதம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது இடம்பெற்ற விவாதம் வருமாறு…

துரைமுருகன் – ராஜீவ்காந்தி கொலை வழக்கு சிறைவாசிகள் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக செயற்படுகிறது. தர்மபுரி பேருந்து எரிப்பு விவகாரத்தில் அ.தி.மு.க. கட்சிக்காரர் மாட்டிக்கொண்ட விவகாரத்தில் அவர்களின் விடுதலைக்கு உடனடியாக அரசு செயற்பட்டது.

அமைச்சர் சி.வி.சண்முகம்:- 7 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது இந்த அரசின் கொள்கை. அவர்கள் விடுதலைப் பற்றி ஆளுநர் முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதுமே காலதாமதம் செய்யாமல் அமைச்சரவையைக் கூட்டி, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை இந்த அரசு அனுப்பி வைத்தது.

அவர்களின் விடுதலைக்காக மாநிலத்திற்கு இருக்கும் அதிகாரம் முழுவதுமாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் இதில் ஆளுநர் முடிவெடுப்பதற்கான கால நிர்ணயம் எதுவும் இல்லை. அதற்கான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் இல்லை. அரசியல் சாசனத்திலும் காலக்கெடு நிர்ணயிக்கப்படவில்லை. அதன்படி ஆளுநரின் நல்ல முடிவை அரசு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.

ஆனால், இதே பேரறிவாளனின் கருணை மனு உங்கள் ஆட்சியில் தரப்பட்டபோது நளினி தவிர ஏனைய 6 பேரையும் தூக்கிலிடலாம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினீர்கள் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்:- அமைச்சரின் விளக்கத்தை ஏற்கிறேன். ஏன் ஆளுநர் முடிவெடுக்கவில்லை? என்ற கேள்வியைக் கேட்க அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கருத்து கூறியிருக்கிறது. அந்த அடிப்படையில் ஆளுநரிடம் இந்த அரசு கேட்டிருக்கிறதா? அவரை வலியுறுத்தும் சூழ்நிலையை எடுத்தீர்களா?

அமைச்சர் சி.வி.சண்முகம்:- அதில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவில்லை. குறிப்பிட்ட காலத்துக்குள் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநரிடம் கேட்க சொல்லவில்லை. ஆளுநரின் அதிகாரத்தைப் பற்றி நாங்கள் பேசவிரும்பவில்லை என்றும் இதுபற்றி ஆளுநரிடம் கேட்டு எங்களிடம் தெரிவியுங்கள் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

துரைமுருகன்:- 28 ஆண்டுகளாக சிறையில் வாடுகிறார்கள். எனவே மனிதாபிமான அடிப்படையில், அரசு தனது அதிகாரத்தை, செல்வாக்கை பயன்படுத்தி, முதலமைச்சரோ அல்லது அவரது சார்பில் அதிகாரிகளையோ ஆளுநரிடம் அனுப்பி பேசி, விடுதலை செய்ய வேண்டும்.

எங்களுக்கு அக்கறை இருப்பதால்தான் அவர்களை பரோலில் வெளியே அனுப்பினோம். அதற்கு முன்பு யாருமே அவர்களை பரோலில் விடவில்லை. அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

http://athavannews.com/ராஜீவ்காந்தி-கொலை-வழக்க-3/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.