Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் இனப்பிரச்சினை என்பதே இல்லை: ஜாதிக ஹெல உறுமய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இனப்பிரச்சினை என்பதே இல்லை: ஜாதிக ஹெல உறுமய

[செவ்வாய்க்கிழமை, 22 மே 2007, 15:38 ஈழம்] [கொழும்பு நிருபர்]

இலங்கையில் இனப்பிரச்சினை என்பதே இல்லை என்ற விடயத்தில் நாங்கள் உறுதியாக முன்வைக்கின்றோம் என்று ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப்பேச்சாளர் நிசாந்த சிறீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:

இனப்பிரச்சினை தீர்வுக்கான யோசனைகளை ஜாதிக ஹெல உறுமய தயாரித்துள்ளது. எமது கட்சியின் யோசனைகள் அடுத்தவாரம் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கு சமர்ப்பிக்கப்படும். தற்போது தீர்வுயோசனைகள் சட்ட நிபுணர்களின் ஆராய்வுக்குட்பட்டு வருகின்றன.

எமது யோசனைகளின்படி ஒற்றையாட்சி என்ற கட்டமைப்பின் கீழேயே நாட்டின் ஆட்சிமுறைமை இருக்கவேண்டும். இந்த நாட்டின் தேசிய உரிமைகள் சிங்கள இனத்தவர்களையே சாரும். நாட்டின் கலை கலாசாரக் கட்டமைப்பை உருவாக்கியவர்கள் சிங்கள மக்கள் என்பதால் சிங்கள மக்களே நாட்டின் தேசிய இனமாகக் கருதப்படவேண்டும், என்பதுடன் அனைத்து விடயங்களிலும் முன்னுரிமை அவர்களுக்கே வழங்கப்பட வேண்டும்.

நாட்டில் இனப்பிரச்சினை என்று ஒன்று இல்லை என்ற விடயத்தை நாங்கள் உறுதியாக முன்வைக்கின்றோம். அத்துடன் தேசிய மதமாக பௌத்த மதம் கணிக்கப்படவேண்டும்.

ஏனைய மதங்களும் இருக்கலாம். ஆனால் பௌத்த மதமே ஏகபோக உரிமை கொண்ட மதமாக இருக்கும். நாட்டில் 10 ஆயிரம் கிராம சபைகள் உருவாக்கப்பட வேண்டும்.

அதேவேளை 200 பிரதேச அதிகார சபைகள் உருவாக்கப்படவேண்டும். மேற்படி 200 பிரதேச அதிகார சபைகளின் தலைவர்கள் நேரடியாக நாடாளுமன்றம் செல்வார்கள். அத்துடன் தேசிய பட்டியல் மட்டத்தில் 40 உறுப்பினர்கள் நாடாளுமன்றம் செல்வார்கள். நாட்டின் தொழிற்சங்கங்கள் 22 உறுப்பினர்களை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யலாம். சிறிய கட்சிகள் 5 உறுப்பினர்களை தெரிவு செய்து அனுப்பலாம்.

அத்துடன் மலே, பறங்கி இனத்தவர்கள் 3 உறுப்பினர்களை அனுப்பலாம். மொத்தமாக நாடாளுமன்றத்திற்கு 270 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறைமை தொடர்ந்து அமுலில் இருக்க வேண்டும். ஆனால் அரச தலைவர் நாடாளுமன்றத்திற்கு பதில் கூறுபவராக இருக்க வேண்டும். அதேவேளை அரச தலைவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யக்கூடிய உரிமை மக்களுக்கு இருக்கவேண்டும்.

அமைச்சர்களின் எண்ணிக்கை 20 தொடக்கம் 25 ஆக இருக்க வேண்டும். இது அரசியலமைப்பில் உள்ளடக்கப்படவேண்டும்.

தேர்தல் என்ற வகையில் அரச தலைவர் தேர்தலும், பிரதேச அதிகார சபைகளுக்கு உறுப் பினர்களை தெரிவு செய்ய தேர்தலுமே இடம் பெறவேண்டும். மேற்கண்ட விடயங்களை பிரதானமாகக் கொண்டே எமது கட்சியின் யோசனைகள் தயாரிக்கப்பட் டுள்ளன. இவை விரைவில் வெளியிடப்படும் என்றார் அவர்.

புதினம்

இலங்கையில் இனப்பிரச்சினை என்பதே இல்லை என்ற விடயத்தில் நாங்கள் உறுதியாக முன்வைக்கின்றோம் என்று ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப்பேச்சாளர் நிசாந்த சிறீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்

உணவுத் தட்டுப்பாடு இனப்பிரச்சனை என விசமிகளால் வதந்தி கட்டப்பட்டுள்ளது?

இனப்பிரச்சினை தீர்வுக்கான யோசனைகளை ஜாதிக ஹெல உறுமய தயாரித்துள்ளது. எமது கட்சியின் யோசனைகள் அடுத்தவாரம் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கு சமர்ப்பிக்கப்படும். தற்போது தீர்வுயோசனைகள் சட்ட நிபுணர்களின் ஆராய்வுக்குட்பட்டு வருகின்றன.

சட்ட நிபுணர்கள் என அழைக்கப்படுபவர்கள் இன்னும் க.பொ.த பரீட்சையில் சித்தியடையாத பெளத்த பிக்குகள்?

எமது யோசனைகளின்படி ஒற்றையாட்சி என்ற கட்டமைப்பின் கீழேயே நாட்டின் ஆட்சிமுறைமை இருக்கவேண்டும். இந்த நாட்டின் தேசிய உரிமைகள் சிங்கள இனத்தவர்களையே சாரும். நாட்டின் கலை கலாசாரக் கட்டமைப்பை உருவாக்கியவர்கள் சிங்கள மக்கள் என்பதால் சிங்கள மக்களே நாட்டின் தேசிய இனமாகக் கருதப்படவேண்டும், என்பதுடன் அனைத்து விடயங்களிலும் முன்னுரிமை அவர்களுக்கே வழங்கப்பட வேண்டும்.

யார் சிங்களவர்கள் என்ற குழப்பம் நாட்டில் ஏற்படாதிருக்க அனைத்து சிங்களவர்களும் (ஆண்கள்)மொட்டையடிக்க வேண்டும். பெண்களாயின் நெற்றியில் சுழழும் சக்கரவடிவத்தில் பச்சை குத்திக்கொள்ள வேண்டும்?

நாட்டில் இனப்பிரச்சினை என்று ஒன்று இல்லை என்ற விடயத்தை நாங்கள் உறுதியாக முன்வைக்கின்றோம். அத்துடன் தேசிய மதமாக பௌத்த மதம் கணிக்கப்படவேண்டும்.

மேலும், தேசிய உடையாக காவி உடை அறிவிக்கப்படவேண்டும்?

ஏனைய மதங்களும் இருக்கலாம். ஆனால் பௌத்த மதமே ஏகபோக உரிமை கொண்ட மதமாக இருக்கும். நாட்டில் 10 ஆயிரம் கிராம சபைகள் உருவாக்கப்பட வேண்டும்.

மேலும், ஒவ்வொரு கிராமசபையிலும் ஆகக்குறைந்தது ஒரு விகாரையாவது இருக்கவேண்டும்?

அதேவேளை 200 பிரதேச அதிகார சபைகள் உருவாக்கப்படவேண்டும். மேற்படி 200 பிரதேச அதிகார சபைகளின் தலைவர்கள் நேரடியாக நாடாளுமன்றம் செல்வார்கள். அத்துடன் தேசிய பட்டியல் மட்டத்தில் 40 உறுப்பினர்கள் நாடாளுமன்றம் செல்வார்கள். நாட்டின் தொழிற்சங்கங்கள் 22 உறுப்பினர்களை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யலாம். சிறிய கட்சிகள் 5 உறுப்பினர்களை தெரிவு செய்து அனுப்பலாம்.

நாடாளுமன்றத்திற்கு யார் போவது, யார் போகக்கூடாது என்பதை பிக்குகளின் தலைவர் சித்திரா பெளர்ணமி தினத்தன்று ரூபவாகினியில் நேரடியாக அறிவிப்பார்?

அத்துடன் மலே, பறங்கி இனத்தவர்கள் 3 உறுப்பினர்களை அனுப்பலாம். மொத்தமாக நாடாளுமன்றத்திற்கு 270 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

பறங்கி இனத்தவர் சார்பாக இளவரசர் சார்ல்ஸ் அல்லது வில்லியம்ஸ் தெரிவுசெய்யப்படுவார்?

நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறைமை தொடர்ந்து அமுலில் இருக்க வேண்டும். ஆனால் அரச தலைவர் நாடாளுமன்றத்திற்கு பதில் கூறுபவராக இருக்க வேண்டும். அதேவேளை அரச தலைவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யக்கூடிய உரிமை மக்களுக்கு இருக்கவேண்டும்.

கேள்வி கேட்பவர்களாக பிக்குகள் மட்டும் இருக்க வேண்டும்?

அமைச்சர்களின் எண்ணிக்கை 20 தொடக்கம் 25 ஆக இருக்க வேண்டும். இது அரசியலமைப்பில் உள்ளடக்கப்படவேண்டும்.

இவர்கள் அனைவரும் பிக்குகளாகவும் இருக்கவேண்டும்?

தேர்தல் என்ற வகையில் அரச தலைவர் தேர்தலும், பிரதேச அதிகார சபைகளுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்ய தேர்தலுமே இடம் பெறவேண்டும்.

எஞ்சிய பதவிகளை கட்டுமஸ்தான உடலைக்கொண்ட பிக்குகள் தம்மிடையே சண்டைபிடித்து பறித்துக் கொள்வார்கள்?

பிக்குகள் புரிந்து பேசுகிறார்களா அல்லது புரியாமல் பேசுகிறார்களா?

இவர்கள் முன்வைக்கும் தீர்வு யோசனைதானே இனப்பிரச்சனையின் ஆணிவேர்.

இதையே தீர்வு என்றால் எப்படி ?

ஏதோ செய்தினு வந்தேன்.

வடிவேலூ (நடிகர்) அசட்டுதனத்தைவிட மகா கேவலமாக இருக்கிறது.

இப்படிதான் எதயாவது சொல்லி கருத்தெலுத வச்சிடுறாங்க.

இப்படி ஒண்டை இலங்கையிலும் தொடங்கீ சோமபானம் குடியூங்கோ மொட்டைகளே

301705661_a7838bc0a4_o.jpg

301705659_4a16dbd9cf_o.jpg

DSCN1989.jpg

ஈழவ இது என்ன வேலை எதற்க்கு அவர்களை இப்படி அவமதிக்கிறீர்கள்...........?

அவர்கள் அடிப்பதெல்லாம் கசிப்பும் கஞ்சாவும்தான், அப்படி பட்டவர்களை இப்படி கேவலம் கெடுக்காலாம?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.