Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா அல்லது சீன வைரஸ் உலக ஒழுங்கை மாற்றியமைக்குமா? - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா அல்லது சீன வைரஸ் உலக ஒழுங்கை மாற்றியமைக்குமா? - யதீந்திரா 


கொரோனா – இன்றைய சூழலில் பாரபட்சமில்லாமல் அனைவரையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு பெயர். முதல் பார்வையில் இது ஒரு மனிதாபிமான பிரச்சினை. இதனை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதே அனைவருக்கும் முன்னாலுள்ள கேள்வி. இலங்கை அரசாங்கம் இதனை கட்டுப்படுத்துவதற்கு காத்திரமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திருக்கின்றது. இதில் இராணுவம் பிரதான பங்கு வகித்துவருகின்றது. இந்த பின்புலத்தில் நோக்கினால் இலங்கை இராணுவம் மனிதநேயப் பணியில் தன்னை முற்றிலுமாக அர்ப்பணித்திருக்கின்றது. எந்த இராணுவத்தின் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதோ, அந்த இராணுவமே இன்று கொரோனாவை எதிர்த்துப் போராடுவதில் முற்றிலுமாக தன்னை ஈடுபடுத்தியிருக்கின்றது. இலங்கையில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளிலும் அந்தந்த நாடுகளின் படைத்தரப்புக்களே அதிகம் இந்தப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். அமெரிக்காவில, இன்னும் அதிகமாக இராணுவத்தை ஈடுப்படுத்த வேண்டும் என்றவாறான கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறான நெருக்கடிகளின் போது, இராணுவத்தினால்தான் அதிகம் பணியாற்ற முடியும். ரம் நிர்வாகம் இராணுவத்தை ஈடுபடுத்துவது போதாது என்று எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினர் விமர்சித்துவருகின்றனர். இலங்கையை பொறுத்தவரையில் அனைத்து தரப்புக்களும் இப்போது அரசாங்கத்துடன் இணைந்து இதற்காக பணியாற்ற வேண்டியிருக்கின்றது ஏனெனில் வைரஸ் இனம் பார்த்து தொற்றுவதில்லை.

முதல் பார்வையில் இது ஒரு மனிதநேயப் பிரச்சினையாக இருந்தாலும் கூட, இன்னொரு புறம் இது ஒரு உலகளாவிய அரசியல் நெருக்கடியாகவும் – பொருளாதார யுத்தமொன்றிற்கான புதிய களமாகவும் பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் கொரோனா விவகாரம் உலக அரசியலில் பல்வேறு விவாதங்களை ஊக்குவித்திருக்கின்றது. அரசியல் – பொருளாதாரம் – பாதுகாப்பு என்று பல்வேறு விடயங்களிலும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆரம்பத்தில் சீனாவின் பொருளாதார நகர்வுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்று, பின்னர் படிப்படியாக ஜரோப்பா முழுவதையும் பாதித்திருக்கின்றது. அமெரிக்க பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டிருக்கின்றது. மொத்தத்தில் உலகம் முழுவதும் பொருளாதார ரீதியான நெருக்கடியை சந்திருக்கின்றது.

உலகில் பெரும் அதிர்வை ஏற்படுத்தும் ஒவ்வொரு விடயங்களும் அரசியல் ரீதியில் புதிய விவாதங்களை தோற்றுவிப்பதுண்டு. அதே போன்று கொரோனாவும் புதிய வகையான அரசியல் விவாதங்களை தோற்றுவித்திருக்கின்றது. இந்த விவாதத்தை சீனாவே ஆரம்பித்து வைத்திருக்கின்றது. சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கொரோனா தொடர்பில் சச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டிருக்கின்றார். இது சீனாவில் உருவான வைரஸ் அல்ல. இதனை அமெபரிக்க இராணுவமே சீனாவிற்குள் விதைத்திருக்கின்றது என்னும் ஒரு குற்றச்சாட்டை சீனா பரப்பிவருகின்றது. ஈரானும் இதனை ஒரு உயிரியல் தாக்குதல் என்றே, குறிப்பிடுகின்றது. அதாவது, கடந்த ஆண்டு ஒக்டோபரில் ஏழாவது, உலக இராணுவ விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் வூகான் மானிலத்தில் இடம்பெற்றிருந்தது. நான்கு வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெறும் உலக இராணுவ விளையாட்டுப் போட்டிகள் முதல் முதலாக சீனாவில் இடம்பெற்றிருந்தது. இந்த போட்டிகளுக்காக 300 அமெரிக்க இராணுவத்தினர் வூகான் மானிலத்திற்கு சென்றிருந்தனர். இவர்களின் ஊடாகவே வூகான் மான்னிலத்திற்குள் கொரோனா வைரஸ் பரப்பப்பட்டதான ஒரு கதையையே சீனா கூறுகின்றது. சீன அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் சமூக ஊடகங்களின் வழியாக சீனா முழுவதும் இவ்வாறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. இதனை கடுமையாக ஆட்சேபித்திருக்கும் அமெரிக் ராஜாங்கத் திணைக்களம், இது தவறான கருத்துக்களை பரப்புவதற்கான நேரமல்ல மாறாக, அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து இந்த பொது அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான நேரமாகும் என்று குறிப்பிட்டிருக்கின்றது. இது தொடர்ப்பில் பதிலளித்திருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ரம், இது சீனாவில் உருவாகிய வைரஸ் அந்தவகையில் இது ஒரு ‘சீன வைரஸ்’ என்று குறிப்பிட்டிருக்கின்றார். அமெரிக்க ராஜாங்கச் செயலர் பம்பியோ இதனை ‘வூகான் வைரஸ்’ என்று குறிப்பிட்டிருக்கின்றார். சீனா, அமெரிக்காவின் மீதும், அமெரிக்க, சீனாவின் மீதும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவருகின்றது. இது இரு நாடுகளுக்கும் இடையில் ராஜதந்திர நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கின்றது. கனடாவின் கியூபக் மானிலத்தை தளமாகக் கொண்டு இயங்கிவரும் உலகமயமாக்கல் தொடர்பான ஆய்வு நிலையம் சீன மருத்துவ ஆய்வாளர்களின் தகவல்களை மேற்கோள் காட்டி இது ‘அமெரிக்காவில் உருவாகிய வைரசா’ என்னும் தலைப்பில் ஒரு கட்டுரையை இம்மாதம் நான்காம் திகதி வெளியிட்டிருந்தது. சீன ஊடகங்களினால் வெளியிடப்பட்ட கருத்துக்களை மட்டுமே இந்தக் கட்டுரை உiசாத்துணையாகக் கொண்டிருக்கிறது. அமெரிக்க ஊடகங்களின் பார்வையில் இந்தத் தளம், சூ10ழ்ச்சிக் கோட்பாடுகளை பரப்பும் ஒரு தளமாகவே நோக்கப்படுகின்றது அதே வேளை, இந்த நிறுவனம் முற்றிலும் ஒரு ரஸ்ய சார்பான தளமாகவும் நோக்கப்படுகின்றது. இந்தத் தளத்தில் இடம்பெறும் எழுத்துக்களை நோக்கினால் அவ்வாறுதான் தெரிகின்றது. இந்தத் தளத்தின் பார்வையில் அமெரிக்கா ஒரு புதிய பொருளாதார யுத்தத்திற்கான களத்தை திறந்திருக்கின்றது. அதன் விளைவே கொறானா.

US and China 1

உலக அரசியல் விவாதங்களில் சூழ்ச்சிக் கோட்பாடுகள் அவ்வப்போது தலைநீட்டுவது ஆச்சரியமான ஒன்றல்ல. பொதுவாக உலகில் இடம்பெறும் ஒவ்வொரு விடயங்களுக்கும் அமெரிக்காவை திரும்பிப் பார்க்கின்ற ஒரு போக்கு இன்று நேற்று ஆரம்பித்த ஒன்றல்ல. சோவியத் – அமெரிக்க பனிப்போர் முடிவுற்று, அமெரிக்கா ஒரேயொரு உலக வல்லரசாக நிமிர்ந்த காலத்திலிருந்து, இவ்வாறான ஒரு போக்கும் தொடர்கின்றது. 2015இல் இலங்கையில் மகிந்த ராஜபக்ச தேர்தலில் தோல்வியடைந்த போதும் அமெரிக்க உளவுத்துறையின் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. அமெரிக்காவை மையப்படுத்தி, பல்வேறு சூழ்சிக் கோட்பாடுகள் கடந்த காலத்தில் பரப்பப்பட்டிருக்கின்றன. தமிழர்கள் மத்தியிலும் இவ்வாறான சூச்சிக் கோட்;பாடுகள் அவ்வப்போது சிலரால் முன்வைக்கபடுவதுண்டு. அது எப்போதும் இந்திய உளவுத்துறையான றோவை மையப்படுத்தியதாக இருக்கும். இவ்வாறான வாதங்கள் எப்போதும் ஒரு திகில் நாவலை படிப்பது போன்ற உணர்வை ஒருவருக்கு ஏற்படுத்தக் கூடியது. ஆளும் அரசாங்கங்கள், அரசியல் கட்சிகள் இவ்வாறான சூழ்சிக் கோட்பாடுகளை தங்களது அதிகாரங்களை பாதுகாப்பதற்காக பயன்படுத்துவதுண்டு. மக்கள் மத்தியில் ஏற்கனவே ஒரு நாட்டின் மீது அல்லது மதத்தின் மீது அல்லது இனத்தின் மீது வெறுப்புணர்வு இருக்கும்போது, அதனை தூண்டிவிட்டு, தங்களின் அதிகாரங்களை பாதுகாப்பதற்கு இவ்வாறான சூழ்ச்சிக் கோட்டுபாடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனை சில அரசாங்கங்களும் அரசியல் பிரிவினரும் வெற்றிகரமாக பயன்படுத்துகின்றனர். உதாரணமாக ஈரான் மக்கள் மத்தியில் அமெரிக்க எதிர்ப்புணர்வு உண்டு. தற்போது கொரோனா – வைரஸ் அச்சத்தில் உறைந்துள்ள மக்கள், முதலில் ஆளும் அரசாங்கத்தின் மீதே கோபப்படுவர். அவர்களின் கோபம் ஒரு எல்லையை மீறும் போது ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் அவர்கள் திரும்பலாம். இவ்வாறான சூழலில் இந்த நிலைமை அமெரிக்காவினால்தான் நிகழ்ந்தது, இதற்கு பின்னால் அமெரிக்காதான் இருக்கின்றது என்று கூறும் போது, ஏற்கனவே அமெரிக்க எதிர்ப்புணர்வினால் வழிநடத்தப்பட்ட மக்கள், அரசாங்கத்தை விட்டுவிட்டு அமெரிக்காவையே திட்டுவர். அதன் மீதே தங்களின் வெறுப்பை காண்பிப்பர்.

இவ்வாறான விவாதங்களுக்கு அப்பால், கொரோனா வைரஸ் உலகளவில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பது உண்மை. சீனா அதிகம் அச்சத்துடன் பார்க்கப்படும் ஒரு உலக நிலைமை தோன்றியிருக்கின்றது. இது சீனாவின் பொருளாதார மற்றும் சர்வதேச உறவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். உலகம் மேலும் அதிகம் துருவப்படுவதற்கான ஒரு புதிய களத்தை கொரோன உருவாக்கியிருக்கின்றது. இது ஒரு புதிய உலக ஒழுங்கை உந்தித்தள்ளுமா என்பதுதான் இப்போதுள்ள கேள்வி? ஏனெனில் இன்றைய நிலையில் இந்த விடயம் உலகின் பெரும்பாலான நாடுகளை பாதித்திருந்தாலும் கூட, கொரோனாவை அடிப்படையாக் கொண்டு அரசியல் ரீதியில் சீனாவும் அமெரிக்காவுமே சொற்ககளால் மோதிக் கொள்கின்றன.
 

http://www.samakalam.com/செய்திகள்/கொரோனா-அல்லது-சீன-வைரஸ்-உ/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.