Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம்கள் சட்டத்தை மதித்து செயற்படவேண்டும் -அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Featured Replies

(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்போதும் கொரோனா வைரஸ் நோய் அறிகுறிகள் தென்படும்பட்சத்திலும் முஸ்லிம்கள் சட்டத்தை மதித்து செயற்படவேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது.

பொலிஸ் தலைமையகம் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஊரடங்குச் சட்டம் அமுலிலிருக்கும் போது வீட்டைவிட்டு வெளியில் செல்வதை முற்றுமுழுதாகத் தவிர்த்துக் கொள்ளவேண்டும். அத்தியவசிய பொருட்களை வீட்டுக்கு விநியோகம் செய்யும் முறையினூடாகப் பெற்றுக் கொள்ளல் அரசு அனுமதித்துள்ள நிறுவனங்களின் பெயர்பட்டியல் ஊடகங்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் அமுலிலிருக்கும் போது வீட்டை விட்டு எவரும் வெளியில் செல்ல முடியாது. மிகவும் இக்கட்டான விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மாத்திரம் உரிய அனுமதியை  குறித்த பிரதேச பொலிஸ் நிலையத்தினூடாக பெற்றுக் கொண்ட பின்னரே வெளியில் சொல்ல முடியும். நிபந்தனைகளுடனே குறித்த அனுமதி வழங்கப்படும்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் எம்மனைவரதும் நலனுக்காகவே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்பதை விளங்கி பொறுப்புணர்வுடன் அதனை முழுமையாக பின்பற்றி நடக்கவேண்டும். அதன் சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும் தற்காலிகமாக ஊரடங்குச் சட்டம் நீக்கப்படுகின்ற காலப்பகுதியில், அத்தியாவசிய பொருட்களை முடிந்தளவு வீட்டுக்கு விநியோகம் செய்யும்.

முறையினூடாகப் பெற்றுக் கொள்ளவேண்டும். முடியாதபோது பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரம் செல்லவேண்டும்.

சிறுவர்களும் வயோதிபர்களும் வெளியில் செல்வதைத் தவிர்த்து வாலிபர்களின் மூலம் வெளித் தேவைகளை பூர்த்தி செய்முயற்சிக்கவேண்டும். வெளியில் செல்பவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்துகொள்ளவேண்டும். வீடு திரும்பியவுடன் கைகளை கழுவி நன்றாக சுத்தம் செய்த பின் அல்லது குளித்து ஆடையை மாற்றிய பின் குடும்ப அங்கத்தவர்களுடன் தொடர்புகளை மேற்கொள்ளவேண்டும்.

சுய தனிமைப்படுதலின் போது பேணப்பட வேண்டிய விடயங்கள்

கடந்த இரண்டு வாரங்களுக்குள் கொரோனா நோயாளி என்றுசந்தேகிக்கப்படும் ஒருவருடன் நேரடித் தொடர்பு வைத்துள்ளீரா? அப்படியாயின் நீர் உடனடியாக சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும்.

நோய் அறிகுறி சம்பந்தமாக அவதானத்துடன் இருக்கவேண்டும். வீட்டிலிருக்கும் ஏனையோரை விட்டும் பிரிந்திருந்து வீட்டிலேயே தரித்திருக்கவும். பிறருடன் நடமாடும் பொழுது ஆகக்குறைந்தது ஒரு மீற்றர் தூரத்தை பேணிக் கொள்ளவேண்டும்.

சுகாதாரமான பாதுகாப்பு முகக் கவசங்களை அணியவேண்டும். இறுமும் போதும் தும்மும் போதும் முகத்தை மூடிக் கொள்ளவும். எந்நேரமும் சவர்க்காரமிட்டு முழுமையாக கைகளைக் கழுவிக்கொள்ளவேண்டும். வீட்டில் பாவிக்கும் பொருட்களை ஏனையவர்களுடன் பரிமாறிக் கொள்வதைத் தவிர்க்கவும்.பாவிக்கும் பொருட்களை நன்றாக சுத்தப்படுத்திக் கொள்ளவும்.

அத்துடன் பாவித்துவிட்டு ஒதுக்கும் பொருட்களை அழித்து விடவும். அகற்றக்கூடிய தட்டில் உணவுகளை எடுப்பதோடு தனிமைப்படுத்தப்பட்ட மலசல கூடம் மற்றும் குளியலறைகளை பயன்படுத்தவும். தனிமைப்படுத்தல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு ஆகக்குறைந்தது 14 நாட்களுக்கு இவ்விடயங்களை பின்பற்றவேண்டும்.

மேலும் இக்கால கட்டத்தில் நோயின் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக கீழ்க்காணும் தொலைபேசி இலக்கங்களான 0112-444480, 0112-444481, 1933 என்ற இலகங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

அத்துடன் ஆன்மீக விடயங்கள் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஏலவே கொடுத்துள்ள வழிகாட்டல்களை முஸ்லிம்கள் பின்பற்றி நடக்கவேண்டும். அதேபோன்று  மஸ்ஜித்களை மையப்படுத்தி நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும்போது அதற்கான அனுமதியை குறித்த பிரதேசத்தின் பொலிஸ் நிலையத்தில் பெற்றுக் கொள்ளவேண்டும்.

https://www.virakesari.lk/article/78915

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.