Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா பரவல் வேகம் எதிரொலி; சென்னையின் பல பகுதிகளை சேர்ந்த மக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை: மீறினால் 2 ஆண்டு சிறை என போலீஸ் எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Tamil_News_Apr1_2020__711345851421357.jpg

சென்னை: கொரோனா பரவல் வேகம் அதிகரித்து இருப்பதின் எதிரொலியாக சென்னையில் கொருக்குப்பேட்டை, புதுப்பேட்டை, வேளச்சேரி பிரபல வணிக வளாகம் என 9 முக்கிய இடங்களை தேர்வு செய்து அப்பகுதியில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேற ேவண்டாம் என போலீசார் தடை வித்துள்ளனர். இந்த தடையை மீறினால் 2 ஆண்டு சிறை என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதித்த மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 24ம் தேதி மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை நேற்று மாலை 411 ஆக அதிகரித்தது.

சென்னையில் நேற்று முன்தினம் மாலை வரை மாநிலத்தில் அதிகமாக 45 பேர் கொரோனா பாதிப்பால் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே கொரோனா தாக்கத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கு உத்தரவை மாநிலம் முழுவதும் கடுமையாக்க டிஜிபி. திரிபாதி உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவை தொடர்ந்து மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகம் உதவியுடன் மாவட்ட கண்காணிப்பாளர்கள் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் உத்தரவுப்படி சென்னையில்  மாநகரம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்தாலும், அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்வதாக மக்கள் பைக் மற்றும் கார்களில் வெளியே சுற்றி தான் வருகின்றனர். இதனால்  கொரோனா தொற்று அதிகளவில் ஏற்படும் அபாயம்  உள்ளது.

மேலும், ெசன்னை மாநகராட்சி புளியந்தோப்பு, எண்ணூர், நேதாஜி நகர், முத்தியால்பேட்டை, பள்ளிக்கரணை, சாந்தோம், போரூர், ஆலந்தூர், கோட்டூர்புரம், புதுப்பேட்டை, சைதாப்பேட்டை, கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி சுற்றுப்புறம் மற்றும் பிராட்வே குடியிருப்பு பகுதிகள் தீவிர கண்காணிப்பு பட்டியலில் உள்ள இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் போலீசார் துணையுடன் மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ட்ரோன் மூலம் கிருமி நாசினிகளை அடித்து வருகின்றனர். மேலும், அந்த பகுதி பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்று ஒலிபெருக்கி மூலம் போலீசார் அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களில் கொரோனா தாக்கம் அதி தீவிரமாக பரவி வரும்  புதுப்பேட்டை, கொருக்குப்பேட்டை, வேளச்சேரி வணிக வளாகம் அமைந்துள்ள சுற்று பகுதிகள், மேற்கு மாம்பலம், புரசைவாக்கம், ஆதம்பாக்கம், ஆலந்தூர், தண்டையார்பேட்டை, பள்ளிக்கரணை பகுதிகள் என சுகாதாரத்துறை அதகாரிகள் அடையாளம் கண்டறிந்துள்ளனர்.

இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என்று  அறிவித்துள்ளனர். மேலும், அப்பகுதிகளை முழுவதும் போலீசார் அனைத்து  தெருக்கள் மற்றும் சாலைகளின் இடையே தடுப்புகள் அமைத்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அரசு அனுமதி அளித்த நபர்களின் வாகன பதிவு எண்களை பதிவு செய்தும், அடையாள அட்டைகளை பார்த்த பிறகே சம்பந்தப்பட்டவர்களை வெளியே செல்ல போலீசார் அனுமதிக்கின்றனர். மற்றவர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளனர். கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பகுதிகளை போலீசார் ட்ரோன் மூலம் கண்காணித்து வருகின்றனர். குறிப்பாக, ெசன்னை பழைய வாகன உதிரிபாகங்கள் விற்பனை மையம் என்று கூறப்படும் புதுப்பேட்டை முழுவதும் போலீசார் அனைத்து சாலைகளையும் தடை செய்துள்ளனர்.

அதேபோல், வேளச்சேரியில் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட பிரபல வணிக வளாகம் சுற்றி உள்ள குடியிருப்பு பகுதிகளையும் போலீசார் தடுப்புகள் அமைத்து தங்களது பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். போலீசார் கண்காணிப்பையும் மீறி தேவையில்லாமல் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தால் அவர்கள் மீது 188 மற்றும் 269 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=576568

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.