Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள்: ஜப்பானும் உன்னிப்பாக அவதானிக்கின்றது

Featured Replies

இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள்: ஜப்பானும் உன்னிப்பாக அவதானிக்கின்றது சமாதானத் தூதுவர் யசூசி அகாஷி தகவல்

ரோக்கியோ, மே 24

இலங்கையில் மனித உரிமை மீறல் கள் தமிழீழ விடுதலைப் புலிகளாலோ அரசாங்கத்தாலோ அல்லது வேறு எந்த தரப்பினராலோ எவரால் செய்யப் பட்டாலும் ஜப்பான் அதனை கவ னித்தே வருகின்றது. கவலைப்படவும் செய்கிறது.

இவ்வாறு தெரிவித்துள்ளார் இலங் கைக்கான ஜப்பானிய சமாதானத் தூது வர் யசூசி அகாஷி.

டோக்கியோவில் வைத்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அகாஷி, இலங் கையில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை உன்னிப்பாக அவ தானித்தே வருகின்றோம். இதை இலங்கை அரசும் அவதானத்தில் கொள் ளும் என்று கருதுகின்றோம் என்று கூறினார்.

மனித உரிமை மீறல்கள் தொடர் பாக விசாரிப்பதற்கு நியமிக்கப்பட் டுள்ள சுயேச்சை அமைப்பின் செயற் பாடுகளை ஜப்பான் உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. இலங்கை யில் சட்ட ஒழுங்குகள் நிலைநாட்டப் படுவதை இந்த அமைப்பு தமது பணி களை விரைவாக முடித்து உறுதிசெய் யும் என்று எதிர்பார்க்கின்றோம்.

இலங்கைக்கு அமெரிக்காவும் பிரிட் டனும் உதவிகளை இடைநிறுத்தியிருப் பதன் பின்னணியில் நிலைமைகளை ஜப்பான் உன்னிப்பாகக் கவனித்து வரு கின்றது.

நிதி உதவிகள் குறித்து

மீளாய்வு செய்யக்கூடும்

இலங்கைக்கான உதவிகளைக் குறைத்துவிடும் நோக்கம் ஏதும் இருக் கிறதா என்று கேட்கப்பட்டபோது

அதைப் பற்றி இப்பொழுது நாம் சிந்திக்கவில்லை. எதிர்காலம் பற்றி ஒன்றும் சொல்ல முடியாது என்றார்.

எதிர்காலத்தில் ஜப்பான் தனது இலங்கைக்கான உதவிகள் பற்றி மீள ஆய்வு செய்யக்கூடும் என்பதை அவர் சூசகமாகத் தெரிவித்தார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஜப்பான் பெரும் அளவில் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடாக இருந்து வரு கின்றது.

இலங்கையில் உள்ளக இடம்பெயர்ந் தோர் தொடர்பாக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை அகாஷி குறை கூறி னார்.

நிலைமைகள் சரிவந்தவுடன் இடம்பெயர்ந்த மக்களுக்கு தன்னா லான உதவி களைச் செய்யப்போவதாக அரசு கூறு கிறது. ஆனால் இடம்பெயர்ந்த மக்கள் வசதிகள் அற்ற நிலையில் மீளக் குடிய மர்த் தப்படுகிறார்கள் என்று அரச சார் பற்ற நிறுவனங்கள் கூறுகின்றன என் றார் அவர்.

யாழ்ப்பாணத்தில் மனித உரிமை நிலைமைகள் குறித்து கருத்துத் தெரி வித்த ஜப்பானிய சமாதானத் தூதுவர், சிறிதளவு முன்னேற்றம் காணப்பட்டா லும் அதுவும் கடினமாகவே உள்ளது. அங்கே இடம்பெற்றுவரும் ஆள் கடத் தல்கள், காணாமற்போதல் குறித்த செய்தி கள் தொடர்பாகவும் நாங்கள் கவலை கொண்டுள்ளோம் என்றார். (ப)

உதயன்

இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள்: ஜப்பானும் உன்னிப்பாக அவதானிக்கின்றது

அது சரி நல்ல உன்னிப்பாக அவதானித்துவிட்டு காசை அள்ளிக்கொடுங்கோ... அவங்கள் ஆயுதம் வாங்கி எம்மை கொல்லட்டுக்கும். :unsure::o:D

இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள்: ஜப்பானும் உன்னிப்பாக அவதானிக்கின்றது சமாதானத் தூதுவர் யசூசி அகாஷி தகவல்

அவர்கள் உன்னிப்பாக கவனிப்பதன் நோக்கம், தமக்கும் எதிர்காலத்தில் இப்படி பிரச்சனைகள் வந்தால் எப்படி பொதுமக்களை கொல்லலாம் என்று சிறீ லங்காவிடம் பாடம் படிக்கின்றார்கள். முன்பு யப்பான் செய்த அட்டகாசங்கள் எல்லாருக்கும் தெரியும்தானே?

Edited by கலைஞன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.