Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சௌபாக்கியா வீட்டுத் தோட்டம் ஆரம்பித்து வைப்பு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விவசாயிகளுக்கு இலவசமாக உரம் விநியோகம்

களுத்துறை மாவட்ட விவசாயிகளுக்கு இன்று (20) முதல் தடவையாக இலவசமாக உரம் வழங்கப்பட்டுள்ளது. 

பேருவளை- பாதாகொட விவசாய சேவை மத்திய நிலையத்தினால் உரம் வழங்கப்பட்டுள்ளதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.

பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு, அரசாங்கத்தினால் இலவசமாக உர விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் தொடர்ந்து ஊரடங்கு அமுலில் உள்ள படியால், சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிததவாறு விவசாயிகள் உரத்தை பெற்றுக்கொள்ள சென்றிருந்தனர்.
 

http://www.tamilmirror.lk/மேல்-மாகாணம்/வவசயகளகக-இலவசமக-உரம-வநயகம/95-248985

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செய்கையாளர்களுக்கு பயிர் விதைகள் வழங்கி வைப்பு

image_834d7b37ce.jpg

 

ஜனாதிபதியின் எண்ணக்கருக்கமைவாக, 10 இலட்சம் வீட்டுத்தோட்டத்தை உருவாக்கும் வேலைத்திட்டத்துக்கமைவாக, 'சௌபாக்கியா வீட்டுத் தோட்டத்துக்கான விதைகள் வழங்கும் நிகழ்வு,   நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சவளக்கடை விவசாய விரிவாக்கல் நிலையத்தால் முதல்கட்டமாக ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்ட வீட்டுத் தோட்டம், வேளாண்மை செய்கையில் ஈடுபடும் 610 பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டு, அவர்களுக்கான பயிர் விதைகள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

சவளக்கடை விவசாய விரிவாக்கல் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.சசிகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன், உதவி பிரதேச செயலாளர் என்.நவநீதராஜா, விவசாய போதனாசிரியர் எம்.எஸ்.எம்.ஜெனித்கான், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கான பயிர் விதைகள் அடங்கிய பொதிகளை வழங்கி வைத்தனர்.

வீட்டுத்தோட்டச் செய்கையாளர்கள் 200 பேர், நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கான வரம்புப்பயிர்ச் செய்கையாளர்கள் 410 பேர் இதன்மூலம் நன்மையடையவுள்ளனர்.

http://www.tamilmirror.lk/அம்பாறை/சயகயளரகளகக-பயர-வதகள-வழஙக-வபப/74-249328

 

விவசாயிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி

ஊரடங்கு நேரத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கான மரக்கறி மற்றும் பழவகைகளின் மொத்த மற்றும் சில்லறைக் கொள்வனவு, விற்பனை, சந்தைப்படுத்தல் தொடர்பாக வவுனியா கமநல சேவைத் திணைக்களம் விவசாயிகளுக்கு அறிவித்தல் ஒன்றினை வழங்கியுள்ளது.

இது குறித்த தகவலை வவுனியா கமநல சேவைத் திணைக்கள உதவி ஆணையாளர் இ.விஜயகுமார் வெளியிட்டுள்ளார்.

வவுனியாவில் ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் மரக்கறிகளை வீடுகளில் இருந்த படி கொள்வனவு செய்யக்கூடிய வகையில் வீடுகளுக்கு நேரடியாக மரக்கறி வியாபாரம் மேற்கொள்ளுவதற்காக வியாபாரிகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோன்று விவசாயிகளிடம் இருந்து பிற மாவட்டங்களுக்கு மரக்கறி மற்றும் பழவகைகளைக் கொள்வனவு செய்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தபட்டுள்ளன.

பிற மாவட்டங்களுக்கு பொருட்களை சந்தைப்படுத்த விரும்பும் விவசாயிகளின் நலன்கருதி பொருட்கள் சந்தைப்படுத்தும் இடங்கள் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு அனுமதிக்கபட்ட வாகனங்கள் தொடர்பான விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்லேடி பப்பாசி பழத்திற்கான ஆகக்குறைந்த கொள்வனவு விலை ரூபாய் 20 ஆகும். ஒரு கிலோ ரூபாய் 20 க்கு குறைந்த விலையில் கொள்வனவு செய்யும் வியாபாரிகள் தொடர்பான முறைபாடுகள் கிடைக்குமிடத்து ஊரங்கு நேர போக்குவரத்து அனுமதி செல்லுபடியற்றதாக்கப்படும் எனவும்,

வீடுகளுக்கு நேரடியாக பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் கூடிய விலைகளில் விற்பனை செய்வது தொடர்பாக கிடைக்கபெறும் முறைப்பாடுகளின் அடிப்படையில் ஊரடங்கு நேர வியாபார அனுமதி செல்லுபடியற்றதாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

பொது மக்கள் இது தொடர்பான முறைப்பாடுகளை 024 2225511 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறையிட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/142332

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.