Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வன்முறையை முடிவுக்கு கொண்டு வர இலங்கைக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வன்முறையை முடிவுக்கு கொண்டு வர

இலங்கைக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

மே 25, 2007

வாஷிங்டன்: இலங்கையில் தற்போது அதிகரித்து வரும் வன்முறை மற்றும் சண்டையை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை அரசை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் அருகே நெடுந்தீவு கடற்படை முகாமில் விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் 35 கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாம் கேஸி இதுகுறித்துக் கூறுகையில்,

அமைதியாகவும், ஜனநாயக பூர்வமாகவும் வாழ இலங்கையில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உரிமை உள்ளது. ஆனால் தொடரும் வன்முறையால் இந்த உரிமைக்கு பங்கம் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் இலங்கை துணை வெளியுறவு அமைச்சர் ரிச்சர்ட் பெளச்சர் இலங்கை சென்று அங்கு அரசு நிர்வாகத்துடன் பேச்சு நடத்தினார். அப்போது வன்முறைக்கு விரைவில் முடிவு கட்டப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அனைத்துத் தரப்பு மக்களும் ஒருங்கிணைந்து, சம உரிமைகளுடன் அமைதியான சூழலில் வாழ வழி செய்யப்பட வேண்டும் என இலங்கை அரசை வலியுறுத்தினார்.

இலங்கையில் அமைதி நிலவச் செய்ய முயற்சித்து வரும் இலங்கை அரசு, நார்வே அமைதிக் குழுவுடன் இணைந்து அமெரிக்காவும் அமைதி ஏற்பட முயற்சிக்கும் என்றார் கேஸி.

http://thatstamil.oneindia.in/news/2007/05/25/lanka.html

ஆயுதத்தை கொடுங்கோ வன்முறை நிறுத்துங்கோ எண்டு அறிக்கை விடுங்கோ நல்ல இரு இரயில் தண்டவாளங்கள்.

ஒருக்காலும் இணையாது.

உலக ஜனங்களே நீங்கள் முட்டாள்கள் இல்லை அமெரிக்கர்களை தவிர......................................................

தொடரட்டும் புஸ்சின் தத்துவ கோட்பாடு

வெள்ளி 25-05-2007 16:42 மணி தமிழீழம் [தாயகன்]

சிறீலங்காவில் இடம்பெறும் வன்முறைகள் துரதிஸ்டவசமானவை - அமெரிக்கா கவலை

விடுதலைப் புலிகளின் நேற்றைய தாக்குதல், மற்றும் ஏனைய வன்முறைகள் பற்றிக் கருத்துக்கூறும்போதே அமெரிக்க வெள்ளைமாளிகை துணைப் பேச்சாளர் ரொம் கசெ இந்தக் கவலையை வெளியிட்டார்.

சிறீலங்கா அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு முன்வர வேண்டும் எனவும் அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு, சிறீலங்கா அரசு, சமாதான அனுசரணையாளர்களான நோர்வே, மற்றும் இணைத்தலைமை நாடுகளுடன் தமது அரசு தொடர்ந்தும் பங்காற்றும் எனவும் வொசிங்ரன் டி.சியில் நடைபெற்ற ஊடகர் மாநாட்டில் ரொம் கசே கூறினார்.

சிறீலங்காவிற்கு அண்மையில் பயணம் மேற்கொண்ட அமெரிக்காவின் மத்திய-தெற்காசிய விவகாரங்களுக்கான துணை இராஜாங்கச் செயலாளர் றிச்சட் பௌச்சர், அரசாங்கத் தரப்பினர், மற்றும் பொது அமைப்புகளைச் சந்தித்து அதிகாரப் பரவலாக்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியதாகவும் ரொம் கசே மேலும் தெரிவித்தார்.

செய்தி மூலம்: பதிவு, நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்கின்றது.

இவ்வளவு நாளும் கெடும்வரைக்கும் எங்கிருந்தது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.