Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கர்ப்பிணி நர்ஸ் உயிரைப்பறித்த கொலைகார கொரோனா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கர்ப்பிணி நர்ஸ் உயிரைப்பறித்த கொலைகார கொரோனா

கொரோனா வைரசுக்கு எதிராக களத்தில் நின்று போராடும் பலர் தங்கள் விலை மதிக்க முடியாத உயிரை இழக்கிற சோக சம்பவங்களும் நிகழ்ந்துவிடுவது, நெஞ்சை நொறுக்கி சுக்கு நூறாக்கி விடுகின்றன.

கொரோனா வைரசுக்கு எதிராக களத்தில் நின்று போராடுகிற உண்மையான வீரர்கள், வீராங்கனைகள் யார்? என்றால் அவர்கள் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ சார்பு பணியாளர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

அவர்கள்தான் உண்மையிலேயே உயிரைப்பணயம் வைத்து தங்கள் கடமையை... இல்லை சேவையை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் அவர்களுடைய உயிருக்கு சவால்களும், சோதனைகளும் தொடர்கின்றன. ஆனாலும், “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்று அவர்கள் புனிதப் பணியை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த களத்தில் பலர் தங்கள் விலை மதிக்க முடியாத உயிரை இழக்கிற சோக சம்பவங்களும் நிகழ்ந்துவிடுவது, நெஞ்சை நொறுக்கி சுக்கு நூறாக்கி விடுகின்றன.

அப்படி ஒரு சம்பவம்தான் இப்போது இங்கிலாந்து நாட்டில் நடந்து இருக்கிறது.

லண்டன் மாநகரில் இருந்து 35 கி.மீ. வடக்கேயுள்ள லூட்டன் நகரில் உள்ள லூட்டன் அண்ட் டன்ஸ்டபிள் பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் கடந்த 5 ஆண்டுகளாக நர்சாக சேவை செய்து வந்தவர், 28 வயதேயான மேரி அகியேவா அகியா போங். இவர் ஆப்பிரிக்க நாடான கானாவை சேர்ந்தவர். கர்ப்பிணி.

ஆனாலும் தன் வாழ்வையே இங்கிலாந்தில் என்.எச்.எஸ். என்று சொல்லப்படக்கூடிய தேசிய சுகாதார பணிகள் துறைக்கு அர்ப்பணித்து விட்டார்.

கர்ப்பத்தின் கடைசி மாதங்களில் கூட இவர் அங்கு 12-வது வார்டில் இடைவிடாது தனது சேவையைத் தொடர்ந்து வந்தார். இந்த வார்டுதான், அந்த ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகிற வார்டு ஆகும். மார்ச் 12-ந் தேதிவரை பணியில் தொடர்ந்து இருந்திருக்கிறார்.

இப்படி கொரோனா வைரஸ் தொற்றுநோயாளிகளுக்காக சேவையாற்றிக் கொண்டிருந்த மேரியையும் ஈவிரக்கமில்லாத கொரோனா வைரஸ் தொற்றிக் கொண்டதுதான் பரிதாபம்.

ஏப்ரல் 5-ந் தேதி அவருக்கு கொரோனா தொற்றிக் கொண்டது மருத்துவ பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டது.

அடுத்த 2 நாளில் அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். முதலில் அவரது உடல்நிலை தேறுவது போல காணப்பட்டது. அவர் பிழைத்து விடுவார் என்று டாக்டர்கள் நம்பினர். ஆனால் அடுத்த ஓரிரு நாளிலேயே அவரது நிலை மோசம் அடைந்தது. கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமானது.

என்ன செய்வது என்று மூளையைக் கசக்கிய டாக்டர்கள், மேரிக்கு அவசர அவசரமாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையை முதலில் காப்பாற்றி விடுவோம் என கருதினர். அதையே செய்தனர். சிசேரியனில் மேரிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு மேரி என்றே பெயர் சூட்டி இருக்கிறார்கள்.

ஆனால் ஏசுபிரான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை நாளில், நர்ஸ் மேரி உயிரை விட்டிருக்கிறார். இது அவரது குடும்பத்தினருக்கும், உடன் சேவையாற்றி வந்த டாக்டர்களுக்கும், நர்சுகளுக்கும் தீராத சோகத்தை தந்திருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக பாவம், அந்தக் குழந்தை மேரி, தன் வாழ்நாளெல்லாம் தாயின்றி வாழ வேண்டியதிருக்கிறது.

அதேநேரத்தில் என்.எச்.எஸ். டிரஸ்டின் தலைமை அதிகாரி டேவிட் கார்ட்டர், “மேரி ஒரு அற்புதமான நர்ஸ். இந்த துறை எதற்காக செயல்படுகிறது என்பதற்கு அவர் மிகப்பெரிய உதாரணமாக திகழ்ந்தார். இந்த இருளான தருணத்தில், இந்த குழந்தைதான் நம்பிக்கை வெளிச்சம் அளிக்கிறது” என்று உருக்கமுடன் குறிப்பிட்டுள்ளார்.

“நர்ஸ் மேரிதான் இந்தத்துறையில் அனைவருக்கும் வரமாக வந்து அமைந்திருக்கிறார். அவரது அன்பு, கவனிப்பு, நேர்மை ஈடுசெய்ய முடியாதது. நீங்கள் என்றென்றும் எங்கள் இதயங்களில் இருப்பீர்கள் மேரி... உங்கள் நினைவுகள் எங்களுடன் எப்போதும் இருக்கும்... நாங்கள் மீண்டும் உங்களை சந்திக்கும்வரை உங்கள் நினைவைப்போற்றிக் கொண்டிருப்போம்” என்று உருகுகிறது, அவருக்காக, அவரது நினைவைப்போற்றி குடும்பத்தின் நலனைக் காக்க உருவாக்கப்பட்டுள்ள ‘கோ பண்ட் மீ’ இயக்கம்.

குட்டி மேரி... அதான், மேரியின் மகள் நன்றாக இருக்கிறாள், ஆரோக்கியமாக இருக்கிறாள் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். அந்தக் குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருக்கிறதா என்பது இதுவரை தெரியவில்லை. ஆனால் குழந்தையின் தந்தை தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் சொல்கின்றன.

மேரியின் மரணம், சில கேள்விகளையும் எழுப்பி இருக்கிறது.

* மார்ச் 12-ந் தேதி வரை கொரோனா வார்டு பணியில் இருந்தபோதே மேரிக்கு கொரோனா வைரஸ் தொற்றிக் கொண்டிருந்ததா?

* மேரி, சுய பாதுகாப்பு உடைகளையும், உபரணங்களையும் அணிந்து கொண்டு பணியாற்றினாரா? இந்தக் கேள்விக்கு முக்கிய காரணம், அந்த ஆஸ்பத்திரியில் முன் வரிசை வீரர்களுக்கான கவச உடைகள், பாதுகாப்பு உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், முக கவசங்களே ரேஷன் அடிப்படையில்தான் வழங்கப்பட்டு வந்ததாகவும் வெளியாகி உள்ள தகவல்கள்தான் இந்த கேள்வியை எழுப்ப வைத்துள்ளன.

மேரியின் மரணம் தவிர்க்கப்பட்டிருக்கக்கூடிய ஒன்று என்று ஆணித்தரமாக சொல்கிறது, கர்ப்பிணிகளின் நலனுக்காக செயல்படுகிற அமைப்பின் நிறுவனர் ஜோலி பிரர்லே.

4 வார கர்ப்பத்துக்கு உட்பட்டவர்கள் நர்ஸ் பணியில் தொடரலாம் என்கிற விதியை மாற்ற வேண்டும் என மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர்களுக்கான ராயல் கல்லூரிக்கு கோரிக்கை வலுத்து இருக்கிறது.

கொரோனா வைரசுக்கு இதுவரை இங்கிலாந்தின் தேசிய சுகாதார பணிகள் துறையில் பணியாற்றுகிற டாக்டர்கள், நர்சுகள், சார்பு மருத்துவ பணியாளர்கள் என 45 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

‘சூப்பர் ஹீரோ’ என அழைத்து வரப்பட்ட 62 வயது டாக்டர் பீட்டர் டன் ரீடிங் நகரில் உள்ள ராயல் பெர்க்‌ஷயர் ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் தாக்கி இறந்திருக்கிறார்.

3 குழந்தைகளுக்கு தந்தையான மருத்துவ சார்பு பணியாளர் அடே ரேமண்ட், லண்டன் நார்த் மிடில்செக்ஸ் ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்திருக்கிறார்.

இப்படி இறந்தோர் பட்டியல் நீளுகிறது.

இப்படி டாக்டர்களும், நர்சுகளும், சுகாதாரப் பணியாளர்களும் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் உயிரிழப்பதற்கு முடிவு கட்ட வேண்டுமானால், அவர்களுக்கு தேவையாக கவச உடைகளும், உபகரணங்களும், மருத்துவ ரீதியிலான முக கவசங்களும் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும் என்ற குரல் இங்கிலாந்தில் வலுத்து வருகிறது.

இங்கிலாந்து அரசு இதில் தனிப்பட்ட கவனத்தை செலுத்தினால்தான், இப்படிப்பட்ட சுகாதார சேவையாளர்கள் கொரோனா வைரஸ் தாக்கியவர்களை காப்பாற்ற முடியும். இவர்களையே காப்பாற்ற வழியற்றுப்போனால், கொரோனா வைரஸ் தாக்கிய மற்றவர்களை யார்தான் காப்பாற்றுவது?

Image may contain: 1 person, hat and closeup
Image may contain: fire
Image may contain: flower, plant and text
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள் 

 

தமிழ் நாட்டில் இரண்டு வைத்தியர்களை அடக்கம் செய்யவே விடவில்லை ஊர் மக்கள் அப்படி ஒரு மனித நேயம்🙄

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.