Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காத்தான்குடி தள வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றிய விடயம் அரசியல் பழிவாங்களாகும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எம்.பஹ்த் ஜுனைட்)

காத்தான்குடி தள வைத்தியசாலையை கொரோனா

 

சிகிச்சை நிலையமாக மாற்ற வேண்டிய எந்த அடிப்படை தேவையோ,அவசியமோ அரசாங்கத்திற்கு கிடையாது. நான் அதிகாரத்தில் இருந்திருந்தால் எந்தவொரு சூழலிலும் அதிகாரிகள் காத்தான்குடி தள வைத்தியசாலை விடயத்தில் சிபாரிசு கூட செய்திருக்கமாட்டார்கள். என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

 

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கும் போது.

காத்தான்குடி தள வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டமைக்கு எமக்கு உடன்பாடு இல்லை எம்மால் அனுமதிக்கவும் முடியாது. கிழக்கு மாகாணத்தில் எத்தனையோ வசதிகள் கொண்ட வைத்தியசாலைகள் இருக்கும் போது காத்தான்குடி தள வைத்தியசாலையை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றியது எமது மக்களுக்கு இழக்கப்பட்ட அரசியல் பழிவாங்களாகும்.

 

நான் அதிகாரத்தில் இருந்திருந்தால் அதிகாரிகள் காத்தான்குடி தள வைத்தியசாலையை கொரோனா சிகிச்சை நிலையமாக சிபாரிசு கூட செய்திருக்கமாட்டார்கள். கடந்த வருடம் ஏப்ரல் -21 இல் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலின் பின்னர் நான் வகித்த ஆளுநர் பதவியை அநியாயமாக பெரும்பான்மை இனத்தை சேர்ந்த தீவிரவாதிகள், பெளத்த தீவிரவாதிகள்,சில் பெளத்த மத குருமார்கள் ஒன்று சேர்ந்து அப்போது இருந்த ஜனாதிபதியின் சூழ்ச்சியால் பறிக்கப்பட்டது. இதன் பின்னர் அரசியல் அதிகாரம் இல்லாத சமூகத்தை இன்னும் இன்னல்களுக்கு உள்ளாக்குவது பழிவாங்கும் செயற்பாடாகவே கருதுகிறேன்.

 

காத்தான்குடி குறைந்த நிலப்பரப்பில் அதிகமான மக்கள் செறிந்து வாழும் பிரதேசமாகும். எந்த அளவிற்கு என்றால் காத்தான்குடி தள வைத்தியசாலையின் கழிவுகளை எரியூட்டும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கும் மக்களது வாழிவிடத்திற்கும் இடையிலான தூரம் வெறுமென 22 அடிகள் மாத்திரமே.

 

இவ்வாறான நிலையில் சுகாதார பணிப்பாளரது ஆரம்ப எழுத்து மூலமான அறிக்கையில் கொரோனா பரிசோதனை நிலையமாக ஐந்து வைத்தியசாலைகள் குறிப்பிடப்பட்டிருந்தது அதிலும் ஐந்தாவது இடத்தில்தான் காத்தான்குடி தள வைத்தியசாலை குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது சுமார் 350 கி.கீ தூரத்தில் உள்ள பண்டாரநாயக்க மாவத்தையில் இருந்தும் 410 கி.மீ தூரத்தில் உள்ள பேருவளையில் இருந்தும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அழைத்து வரப்பட்டு காத்தான்குடி தள வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்படுகிறது.410 கி.மீ தூரத்தில் உள்ள பேருவளையில் இருந்து தொற்றுக்குள்ளானவர்களை சுமார் 12 மணித்தியாலங்கள் பயணித்து அழைத்து வரும் வழியில் இடையில் பல மிகப்பெரிய, பெரும் வசதிகள் கொண்ட வைத்தியசாலைகள் இருந்தும் அதனையும் தாண்டி காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு கொண்டுவருவது திட்டமிட்ட பழிவாங்கும் செயற்பாடாகவே நான் கருதுகிறேன்.

 

இந்த காத்தான்குடி தள வைத்தியசாலை அரசாங்கம் கட்டிய வைத்தியசாலை அல்ல இந்த வைத்தியசாலை அப்போது இருந்த நோர்வே நாட்டின் தூதுவர் ஜோன்விஸ்பக் அவர்களுக்கும் எனக்கும் இடையிலான நல்லுறவின் காரணமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் காலத்தில் 09 மில்லியன் டாலர்கள் நிதியில் நோர்வே அரசாங்கத்தின் உதவியுடன் கட்டி முடிக்கப்பட்டது. வைத்தியசாலைக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் காத்தான்குடி மக்களின் பங்களிப்புடன் பெறப்பட்டதுடன் ICU,ETU போன்ற பிரிவுகள் சவூதி அரேபியாவை சேர்ந்த சகோதர்களின் 13 கோடி ரூபாய் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டது. இலங்கை அரசாங்கத்தினால் அவ்வப்போது அம்பியூலன்ஸ் வாகனம் போன்ற உதவிகளே வழங்கப்பட்டது.

 

இவ்வாறு காத்தான்குடி மக்களினால் அமைக்கப்பட்ட வைத்தியசாலையில் திடீரென அத்துமீறி இரானுவத்தின் மூலம் கையகப்படுத்தி கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றுவது மிகப்பெரும் அத்துமீறலாகும்.

கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் கூறுவது போன்று கிழக்கு மாகாணத்திற்கு கொரோனா சிகிச்சைக்காக தனியாக ஒரு வைத்தியசாலை தேவை என்றால் காத்தான்குடி தள வைத்தியசாலையைவிட பெரும் வசதிகள் கொண்ட வைத்தியசாலைகள் பல இருக்கின்றன அவைகளை எடுத்து இருக்கலாம். பல வசதிகளுடன் கட்டப்பட்டு மூடப்பட்ட வைத்தியசாலைகளும் கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற குறிப்பாக அமெரிக்காவின் நிதியுதவியுடன் பல வசதிகளுடன் கரடியனாறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வைத்தியசாலை மூடப்பட்டுள்ளது அப்பகுதியில் மக்களின் வாழ்வதாரம் எதுவும் இல்லை இந்த வைத்தியசாலையை கொரோனா சிகிச்சை நிலையமாக தேர்ந்தெடுத்து அதற்கு தேவையான உபகரணங்களை ஏனைய வைத்தியசாலைகளில் இருந்து பெறப்பட்டு கரடியனாறு வைத்தியசாலையை கிழக்கு மாகாணத்திற்கான கொரோனா சிகிச்சை வைத்தியசாலையாக அமைத்திருக்கலாம்..

 

 

அரசியல் அதிகாரம் எதுவும் இல்லாத நிலையில் மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கும் இக்காரியத்தை மேற்கொண்டவர்ளை இறைவனிடம் பொறுப்பாக்கிவிட்டு தற்போது காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ள நோயாளர்கள் எமது சகோதரர்கள் அவர்கள் விரைவில் குணமடைந்து வீடுகளுக்கு மகிழ்ச்சியாக திரும்ப வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திப்போம். 

 

 

கடந்த காலங்களில் பல்வேறு பழிவாங்களுக்கும்,துரோகங்களுக்கும் முகம் கொண்டு அதனை முறியடித்த வெற்றி கண்ட காத்தான்குடி மண் இந்த துரோகத்தையும் இறைவனின் உதவியுடன் முறியடித்து வெற்றிபெறுவோம். 

 

 

என முன்னாள் கிழக்குமாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

 

https://www.madawalaenews.com/2020/04/blog-post_748.html

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் 2000 ஏக்கர் காணி வாங்கினது...வவுனியாவில் வாங்கினது ..கிழக்கில் தமிழர் பகுத்யெங்கும் அடாத்தாக காணிபிடித்தது..கோயிலை இடித்து சந்தை கட்டினது..இப்படிப்பல..இதுஎல்லாம் உங்கள் அதிகாரத்தைப் பாவித்த்ஹுச் செய்தது.....அதற்கு இப்ப அனுபவிகிறியள்....  இன்னும் இருக்கு அனுபவிக்க..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.