Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குணமடைந்த ஒருவருக்கு மீண்டும் கொரோனா

Featured Replies

கொரோனா  வைரஸ் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சையின் பின்னர் குணமடைந்த ஒருவருக்கு, மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஜா-எல பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே, இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

67 வயதுடைய குறித்த நபருக்கு, கடந்த மார்ச் 17 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, கொழும்பு ஐ.டீ.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையில், சிகிச்சையில் குணமடைந்து கடந்த மாதம் 17 ஆம் திகதி அவர் வீடு திரும்பியுள்ளார். 

வீட்டுக்கு வந்து 14 தினங்கள் தனிமைப்படுத்தலில் இருந்த அவர், கடந்த 30 திகதி நெஞ்சு வலி காரணமாக கொழும்பு  தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட திடீர் பீ.சீ.ஆர் பரிசோதனையில்,  அவருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 

http://www.tamilmirror.lk/செய்திகள்/குணமடைந்த-ஒருவருக்கு-மீண்டும்-கொரோனா/175-249619

  • தொடங்கியவர்

இலங்கையில் முதன் முறையாக கண்டுபிடிப்பு ; குணமடைந்த கொரோனா தொற்றாளருக்கு மீளவும் தொற்று - இதுவரை 700 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

(எம்.எப்.எம்.பஸீர்)
 

கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, பூரண குணமடைந்ததாக வீட்டுக்கு அனுப்பப்பட்ட நபர் ஒருவர் மீள அந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்ட சம்பவம் ஜா - எல பகுதியில் பதிவாகியுள்ளது.

67 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கொரோனாவால் மீளவும் பாதிக்கப்பட்டுள்ளதாக  ஜா எல நகர சபையின் பிரதான பொது சுகாதார பரிசோதகர் அனுர அபேரத்ன தெரிவித்தார்.

கடந்த மார்ச் 17 ஆம் திகதி குறித்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியான நிலையில் அவர் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

அங்கு அவருக்கு ஒரு மாத காலம் சிகிச்சையளிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 17 ஆம் திகதி அவர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
 

அதன் பின்னர் அவர் வீட்டில் மேலும் 14 நாள் சுய தனிமைப்படுததல் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ள நிலையில், கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி, ஏற்கனவே தனக்கிருந்த நெஞ்சு வலி தொடர்பில் சிகிச்சைகளுக்காக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

இந் நிலையில் அங்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் போதே அவருக்கு கொரோனா தொற்று மீள உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் உடனடியாக அங்கொடை தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
 

சிறுநீரக பிரச்சினை, நீரிழிவு நோய் காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ள குறித்த தொற்றாளருக்கு ஆரம்பத்தில் இத்தாலியில் இருந்து வந்த உறவினர் ஒருவர் ஊடாக தொற்று ஏற்பட்டிருந்தது.
 

இந் நிலையில் குணமடைந்த ஒருவருக்கு மீள கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட சம்பவம் முதன் முதலாக இலங்கையில் பதிவாகியுள்ள நிலையில் அது குறித்து சுகாதார அதிகாரிகளின் அவதானம் திரும்பியுள்ளது.
 

இந் நிலையில் இன்று 10 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இலங்கையில் பதிவாகாத நிலையில், 10 தொற்றாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியிருந்தனர்.
 

இது வரை இலங்கையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 700 ஆகும். அதில் 296 பேர் வெலிசறை கடற்படையினர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களாவர் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.
 

இதுவரை இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 172 ஆக உயர்ந்துள்ளது.
 

இந் நிலையில் மேலும் 511 தொற்றாளர்கள் தொடர்ந்தும் அங்கொடை தேசிய தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலை, வெலிகந்த, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகள், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, மினுவங்கொடை வைத்தியசாலை, கடற்படை வைத்தியசாலை மற்றும் சிலாபம் - இரணவில் வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
 

அத்துடன் கொரோனா சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 179 ஆகும். அவர்கள் நாடளாவிய ரீதியில் 29 வைத்தியசாலைகளில் கொரோனா சந்தேகத்தில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/81231

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.