Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆயிரத்தை கடந்தது இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

Featured Replies

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1020 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இன்றைய தினம் புதிய கொரோனா தொற்றாளர்களாக 28 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த 28 புதிய தொற்றாளர்களும் ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமைச் சேர்ந்தவர்களாவர்.

இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 569 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 442 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

135 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு, கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் 9 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2020-05-19_1.png

 

https://www.virakesari.lk/article/82362

  • தொடங்கியவர்

1021 ஆக அதிகரித்தது இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை : 590 முப்படையினருக்கும் தொற்று

(எம்.எப்.எம்.பஸீர்)
 

கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.
இன்றிரவு 10 மணியுடன் நிறைவடைந்த 12 மணி நேரத்தில் 29 கொரோனா தொற்றளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இலங்கையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் எண்ணிக்கை 1021 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த 1021 தொற்றாளர்களில், 578 கடற்படை வீரர்களும், கடற்படை வீரர்களின் உறவினர்கள் 37 பேரும் உள்ளடங்குகின்றனர்.

இந்த கடற்படை வீரர்களுடன் சேர்த்து இலங்கையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் 590 பேர் முப்படைகளை சேர்ந்தவர்களாவர்.

இன்றிரவு 10 மணியுடன் நிறைவடைந்த 12 மணி நேரத்தில் அடையாளம் காணப்பட்ட புதிய தொற்றாளர்கள் 29 பேரும் கடற்படை வீரர்களாவர்.

இதனிடையே இலங்கையில் அடையாளம் காணப்பட்ட வயது கூடிய தொற்றாளர்காக கருதப்படும் பெண் இன்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், 96 வயதான அப்பெண் நேற்று வீடு திரும்பியதாக அங்கொடை தேசிய தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலையின் விஷேட உடற் கூற்று வைத்திய நிபுணர் தமயந்தி தெரிவித்தார்.

பேருவளையைச் சேர்ந்த குறித்த பெண், அவர் வசித்த பகுதியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் காரணமாக கந்தகாடு தனிமைப்படுத்தல் முகாமிற்கு, தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளார்.
அங்கு வைத்தே, தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளார். இந்நிலையில் வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள போது, அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளது. அதனையடுத்தே அவர் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த பெண் அதிக வயிற்றோட்ட நிலைமையில் இருந்ததாகவும் அவருக்கு சிகிச்சையளிக்க வைத்தியர்கள் மிகக் கடுமையாக உழைத்ததாகவும் அங்கொடை தேசிய தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலையின் விஷேட உடற் கூற்று வைத்திய நிபுணர் தமயந்தி குறிப்பிட்டார்.

இந் நிலையிலேயே சுமார் ஒரு மாத சிகிச்சையின் பின்னர் அந்த பெண் நேற்று பூரண குணமடைந்து வெளியேறியுள்ளார். அவருடன் சேர்த்து இன்று மட்டும் 10 தொற்றாளர்கள் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அதன்படி இதுவரை 569 தொற்றாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். அவர்களில் 209 பேர் கடற்படை வீரர்கள் என கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாணடர் இசுரு சூரிய பண்டார கூறினார்.

இந்நிலையில் இலங்கையில் இதுவரை கொரோனாவால் இலங்கையில் 9 மரணங்கள் பதிவாகியுள்ளன. 442 தொற்றாளர்கள் தொடர்ந்தும் அங்கொடை தேசிய தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலை, வெலிகந்த, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகள், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, மினுவங்கொடை வைத்தியசாலை, கடற்படை வைத்தியசாலை மற்றும் சிலாபம் - இரணவில் வைத்தியசாலை, ஹோமாகம ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அத்துடன் மேலும் 135 பேர் கொரோனா சந்தேகத்தில் 29 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/82374

Image

  • தொடங்கியவர்

கொரோனாவின் 9வது மரணம் என அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்த பெண்ணுக்கு கொரோனா இல்லை..!

பிழையை திருத்திக் கொள்ளவும் இல்லை..! பல்கலைக்கழக ஆய்வுக் கூடம் ஆடும் பைத்தியம்..!

58 வயதான மோதரை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண் தான் உயிர் இழப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அதாவது மே மாதம் மூன்றாம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 48ம் இலக்க வாட்டில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐந்தாம் திகதி அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என  PCR பரிசோதனை செய்ய அவருடைய மாதிரி கொழும்பு பல்கலைக்கழக ்ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனோடு சேர்த்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதி ஒருவர் உள்ளிட்ட நால்வரின் மாதிரிகளும் கொழும்பு பல்கலைக்கழக ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த PCR பரிசோதனையின் முடிவில் அன்றைய தினமே அனைவருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பரிசோதனை ஆய்வு கூடம் அறிவித்தது. இதனை அடுத்து குழப்பமடைந்த கொழும்பு தேசிய வைத்தியசாலை அதிகாரிகள் உடனடியாக குறித்த பெண்ணை அங்கொட தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அன்றைய தினமே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.  

அதன் பின்னர் குறித்த பெண்ணின் இறுதிக் கிரியைகள் கொரோனா மரணம் தொடர்பான சர்வதேச பரிந்துரைகளின் படி முன்னெடுக்கப்பட்டது. அதேவேளை குறித்த பெண்ணின் மாதிரி ஒன்று PCR பரிசோதனைக்காக அங்கொடை தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலையில் பெறப்பட்டு அங்குள்ள ஆய்வு கூடத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதன்போது குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. எனினும் இதனை உறுதிப்படுத்துவதற்கு மீண்டும் குறித்த பெண்ணிடம் மாதிரி பெறப்பட்டு கொழும்பு வைத்திய பரிசோதனை நிறுவனத்திற்கு (MRI) அனுப்பி வைக்கப்பட்டு அங்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதன் போதும் குறித்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் இல்லை என்பது மேலும் உறுதி செய்யப்பட்டது. 

கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஆய்வுகூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதி ஒருவர் உள்ளிட்ட நால்வரின் மாதிரிகள் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை மற்றும் வைத்திய பரிசோதனை ஆய்வு கூடம் ஆகியவற்றில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவர்களுக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதி ஒருவர் உள்ளிட்ட நால்வருக்கும் கொரோனா என செய்தி வெளியானதை அடுத்து கொழும்பு தேசிய வைத்தியசாலையிலா ஒருவகை குழப்பம் நிலவி வருகின்ற நிலையில் அவர்களுக்கு குழந்தை இல்லை என்பது உறுதியாகி உள்ளது. ஆனாலும் கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் ஒன்பதாவது மரணம் பதிவாகியுள்ளதாக கடந்த 5 ஆம் திகதி அரசாங்கம் உத்தியோகபூர்வமாக வெளியிட்ட தகவலை மீளப் பெற்றுக் கொண்டு பிழையை சரி செய்ய இன்னும் முன்வரவில்லை.

https://www.lankaenews.com/news/313/ta

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.