Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி கோத்தாபயவின் கருத்து இலங்கைக்கே ஆபத்து ; மாவை சேனாதிராஜா

Featured Replies

(எம்.நியூட்டன்)

ஜனாதிபதி கோத்தாபயவின் கருத்து இலங்கைக்கே ஆபத்தாக அமையும் எனத் தெரிவித்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற பாராளுமன்றத் தேர்தலில் முழுமையான வெற்றிக்காகத்தான் இத்தகைய கருத்தைத் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் உரை தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தல் பரப்புரையின் போது தனி சிங்கள வாக்குகளை குறிவைத்து செயற்பாட்டார். பௌத்த சிங்கள இனவாதத்தையே கக்கினார். அத்தகைய வாக்குகளைப் பெற்றே வெற்றியும் பெற்றார்.

வெற்றி பெற்ற பின்னரும் இந்த நாட்டில் இனப்பிரச்சினை இருக்கின்றது அதற்கு தீர்வு காணவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இல்லை.

அத்தகைய நிலையில் தான் பாராளுமன்றத் தேர்தலை இலக்காக் கொண்டு தீவிரவாத பேரினவாதத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக அவரின் உரை அமைந்துள்ளது. இறுதி யுத்தத்தில் இடம் பெற்ற பொறுப்புக்கூறலை கனேடிய பிரதமர் முதல் கொண்டு ஐ.நா.மனித உரிமைகள் சபையின் முன்னாள் ஆணையாளர் உள்ளிட்டவர்கள் வரை வலியுறுத்தி வரும் நிலையில் அதனை உதாசீனம் செய்து தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.

சர்வதேச அமைப்புக்கள் நிறுவனங்களிலிருந்தும் வெளியிடும் என்று அவர் விடுத்துள்ள எச்சரிக்கை இலங்கைக்குத்தான் அது ஆபத்தாகும் கொரோனா நிலையில் இலங்கைக்கு கிடைக்கும் உதவிகளையும் அது பாதிக்கும் பொருளாதார ரீதியில் நாடு ஏற்கனவே பின்னடைவைச் சந்தித்துள்ளது இப்படியான சூழலில் இலங்கை சர்வதேச அமைப்பு வெளியேறுவது இலங்கைக்குத்தான் ஆபத்து, ஜனாதிபதியின் இந்த அறிவிப்பை தமிழ் மக்கள் சரியாகப் பயன்படுத்தவேண்டும் இனப்பிரச்சினைக்கு நியயமான தீர்வு கிடைக்கவேண்டும் என்ற சர்வதேசத்தின் எதிர்பார்ப்பை இலங்கை அரசு உதாசீனம் செய்யும் போது சர்வதேச சமூகத்தை தமிழர்கள் பற்றிப்பிடிக்கவேண்டும் எமது மண்ணில் நாங்கள் ஆளும் நிலைமையை உருவாக்குவதற்கு சர்வதேசத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு இது பொருத்தமான தருணம் எமது நியாயப்பாடுகளை சர்வதேசம் மீண்டும் ஒருமுறை உணர்ந்துகொள்வதற்கு இது வாய்ப்பாக அமையும் என்றார்.

https://www.virakesari.lk/article/82488
<p></p>

  • தொடங்கியவர்
7 minutes ago, ampanai said:

ஜனாதிபதியின் இந்த அறிவிப்பை தமிழ் மக்கள் சரியாகப் பயன்படுத்தவேண்டும்

இனப்பிரச்சினைக்கு நியயமான தீர்வு கிடைக்கவேண்டும் என்ற சர்வதேசத்தின் எதிர்பார்ப்பை இலங்கை அரசு உதாசீனம் செய்யும் போது சர்வதேச சமூகத்தை தமிழர்கள் பற்றிப்பிடிக்கவேண்டும் எமது மண்ணில் நாங்கள் ஆளும் நிலைமையை உருவாக்குவதற்கு சர்வதேசத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு இது பொருத்தமான தருணம் எமது நியாயப்பாடுகளை சர்வதேசம் மீண்டும் ஒருமுறை உணர்ந்துகொள்வதற்கு இது வாய்ப்பாக அமையும் என்றார்.

இதைத்தானே நீங்கள் செய்வீர்கள் என மக்கள் 11 ஆண்டுகளாக எதிர்பார்த்து இருக்க... 

நீங்கள் இதையே இன்றும் சொல்லியவண்ணமே உள்ளீர்கள். 

உங்களால் முடியாவிட்டால் விட்டு விலகுங்கள், ஏமாற்றாதீர்கள் 🙏

  • தொடங்கியவர்

கூட்டமைப்பு மீண்டும் தனது அரசியல் வங்குரோத்தை நிரூபித்துள்ளது. 

- எப்படி மகிந்த / கோத்தாவை அரசியல் ரீதியாக கையாள்வது ? தெரியாது 
- கோத்தா சனாதிபதியாகிய பின்னர் கூட்டமைப்பின் மத்திய குழு என்ன செயல் திட்டத்தை வடிவமைத்தது ? ஒன்றும் இல்லை !
- நாள் பாராளுமன்ற தேர்தலில் 2/3 பெரும்பான்மை கிடைத்தால் எவ்வாறு உங்கள் அரசியல் நகர்வுகள் அமையும்? அதைப்பற்றி யோசிக்கவே இல்லை  

==================================
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.