Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிஜப்போரும் நிழல்போரும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிஜப்போரும் நிழல்போரும்

ஆங்கில வார இதழில் பாதுகாப்பு நிலைவரம் பற்றிய விடயங்களை வரையும் பிரபல இராணுவ விமர்சகர் ஒருவர் இலங்கையில் இரண்டு விதமான யுத்தங்கள் கட்டவிழ்ந் திருக்கின்றன எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.

ஒன்று அரசுப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக் கும் இடையில் களத்தில் வெடித்துள்ள போர்.

மற்றது அரசுத் தரப்பு கட்டவிழ்த்து விட்டிருக்கும் பிர சாரப் போர்.

இராணுவ இழப்புகள் பற்றிய உண்மைகளை மறைத்து இந்த ஊடகத்துறைப் போரில் அரசுத் தரப்புச் செய்யும் பிர சாரத் தந்திரோபாயத்தை அவர் கோடிகாட்டியிருக்கின்றார்.

இதற்கு அப்பாலும் இதில் ஒரு விடயம் உள்ளது.

முதலாவது வகைப் போரில் அரசுப் படையினரும், புலி களும், அத்தோடு இடையில் சிக்கி அப்பாவிகளும் உயிரிழக் கின்றார்கள்.

மற்றைய ஊடகப் போரில் சிங்கள, ஆங்கில ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர் என்றால், தமிழ் ஊடகவியலாளர்களோ அந்த அச்சுறுத்தலையும் தாண்டி உயிர்ப்பலி கொடுக்கும் நிலைக்கு ஆளாகின்றனர்.

அதுவும் இந்த ஊடகப் போரில் களப்பலி கொடுத்து, விழுப்புண் கண்ட தமிழ் ஊடகங்களின் வரிசையில் உங்கள் "உதயன்', "சுடர் ஒளி'க்கு முதலாவது இடம். இந்த ஒன்றரை வருட காலத்துக்குள் ஐந்துக்கும் அதிகமான பணியாளர்களின் உயிர்களை இந்நிறுவனங்கள் காவு கொடுத்து விட்டன. பல ஊழியர்கள் படுகாயமடைந்திருக்கின்றனர். சேமிப்புக் களஞ் சியங்கள், தொழில்நுட்பத் தொடர்பாடல் சாதனங்கள், வாக னங்கள் தாக்கப்பட்டு, எரிக்கப்பட்டு, நாசமாக்கப்பட்டுள் ளன. கிழக்கில் பல பிரதேசங்களில் "சுடர் ஒளி' விநியோகம் கருணா குழுவினால் பலவந்தமாக அச்சுறுத்தி தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றது. அது குறித்து பாராமுகமாக இருப் பதன் மூலம் ஊடகத்துக்கு எதிரான இந்த ஆயுத அராஜ கத்துக்கு துணையும் ஒத்துழைப்பும் ஒத்தாசையும் வழங்கு கின்றது அரசு.

"உதயன்' நிறுவன பத்திரிகைத்தாள் களஞ்சியம், இனந் தெரியாதோரின் பெயரால் தீயிட்டு எரிக்கப்பட்டமை ஒரு புறம் என்றால், மறுபுறத்தில் உதயனுக்குத் தேவையான பத் திரிகைத்தாளை எடுத்துச் செல்ல அரச கெடுபிடி, தடை, கட் டுப்பாடு, மட்டுப்படுத்தல்கள், இடைஞ்சல்கள், முட்டுக்கட் டைகள் எல்லாம்.

இவ்வாறு களத்தில் ஆயுதப் போருக்குப் புறம்பாக ஊட கப் போர் ஒன்றும் அரூபக் கரங்களால் கட்டவிழ்த்து விடப் பட்டிருக்கின்றது. அதில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக குறிப்பாகத் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிராக ஆயு தங்களும் தாராளமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

ஒரு பக்கத்தில் சிறுபான்மையினரான தமிழர்களின் நியா யமான உரிமைகளைப் பிடுங்கி, அவர்களை அடக்கி, ஒடுக்கி, அடிமைகளாக்குவதற்காக, அவர்களின் சுதந்திரத் தைப் பிடுங்கும் பேரினவாத அதிகாரப் போக்கு நிலை நிறுத்தப்படுகின்றது என்றால்

மறுபக்கத்தில், அது பற்றிய உண்மைகள் உலகுக்குத் தெரிந்துவிடாமல் தடுக்கும் நோக்குடன் ஊடகங்களின் சுதந் திரத்தைப் பறிக்கும் அடிப்படை உரிமை மீறல் போக்கும் முழு அளவில் மேற்கொள்ளப்படுகின்றது.

புலிகளுக்கு எதிராக அரசும் படைத்துறையும் முன்னெ டுக்கும் பிரசார யுத்தத் தந்திரோபாயத்துக்கு ஒத்துழைக்காத அல்லது மற்றப்பக்க உண்மைகளை அம்பலப்படுத்து வதன் மூலம் அந்தத் தந்திரோபாய நகர்வுகளுக்கு முட்டுக் கட்டை போடுகின்ற ஊடகவியலாளர்கள் அல்லது போடு கின்ற ஊடகங்கள் என்று கருதப்படுகின்ற தரப்புகளே இந்தப் பிரசாரப் போரில் பெரும் பாதிப்புக்கு இலக்காகின்றன.

சமூகப் பிரக்ஞையுடன், சமூக விடுதலைக்காக உழைக் கும் ஊடகவியலாளன் அதன் மூலம் தனது இருப்பிற்கும் மற்றவர்களது வாழ்விற்கும் அர்த்தத்தைக் கொடுக்கிறான். அதுவும் அவலத்தில் சிக்குண்டு தவிக்கும் ஓரினத்துக்காகக் குரல் எழுப்பும் ஊடகவியலாளன் அந்த இனத்தின் விடு தலைக்கும் சுபீட்ச வாழ்வுக்கும் வழிகாட்டும் ஒளியாகின் றான்.

ஓர் ஊடகவியலாளன் தான் வாழும் சமூகத்தையும், அந்த சமூகத்தின் வாழ்நிலைப் பிரச்சினைகளையும், தனது மக் களின் அவலத்தையும், அபத்தத்தையும், நெருக்கடிகளை யும், நோவுகளையும், துன்பங்களையும், துயரங்களையும் உதாசீனம் செய்து விலக முடியாது. வரலாற்று செல்நெறி யிலிருந்து அவன் விலகி ஓட முடியாது.

அபத்தமான கட்டுகளிலிருந்து, அவலமான அடிமைத்தளையிலிருந்து தனது மக்களுக்கு நியாயத்தையும், நீதியை யும் சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் கௌரவத்தையும் சுய அடையாளத்தையும் மீட்டுக் கொடுக்கும் பணியில் ஊடகவியலாளனின் பொறுப்பும் கடமையும் ஒரு போரா ளிக்கு போர் வீரனுக்கு ஒப்பானது; நிகரானது; ஒரு வகை யில் அதை விடவும் மேலானது.

இந்த உன்னத நோக்கத்தை உயரிய விழுமியத்தை அடைவதற்காக சில சமயங்களில் ஒரு போராளி போல தன்னையே ஆகுதியாக்க வேண்டியவனாக அவன் ஆகி விடுகின்றான். அதைத்தான் இலங்கைத் தமிழ் ஊடகவியலா ளர்கள் இன்று எதிர்கொண்டு, சந்தித்து வருகின்றார்கள்.

அதிகாரச் சங்கிலிகளால் அடிப்படை உரிமைகளைப் பிணைத்து, நிஜவுலக நிர்ப்பந்தங்களால் மனிதனைக் கட் டுப்படுத்தி, அவனது சிந்தனையை மனவுலகச் சுவர் களுக்குள் அடைத்து, அவனின் சுதந்திரத்தைப் பறித்து, அவனை அடிமைச்சிறைக்குள் தள்ளும் எதேச்சாதிகாரக் கெடுபிடித்தனத்துக்கு எதிராக சுதந்திரக்குரல் எழுப்பி, சமூக மாற்றத்திற்கும், மனித விழிப்புணர்வுக்கும், சுதந்திர எழுச் சிக்கும் தூண்டுகோலாக அமையும் ஊடகவியலாளன் தனது வரலாற்றுக் கடமையை நிறைவு செய்தவனாகின்றான்.

அந்தப் பெரும் பொறுப்பை நிறைவேற்றும் சுமையோடு முன்நகருகின்றது தமிழ் ஊடகவியல்துறை.

இந்த வரலாற்றுப் பெரும் பொறுப்பை நிறைவு செய்வ தற்காக அது சுமக்கவேண்டிய பாடுகள் இன்னும் எவ்வ ளவோ உள்ளன.

அவை சகிக்க முடியாமல் தகிக்கக் கூடியவை. ஆனாலும் சுட்டெரிக்கும் அந்தத் தீக்கடலைத் தனது சமூகத்துக்காக நீந் திக் கடக்கவேண்டியவனாகின்றான் ஊடகவியலாளன்.

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.