Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உளுத்துப் போன திட்டங்கள் தீர்வு யோசனை வடிவத்தில்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உளுத்துப் போன திட்டங்கள் தீர்வு யோசனை வடிவத்தில்!

இலங்கையில் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் இலங்கை அரசுப் படைகள், தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பினருமே தத்தமக்கு இராணுவ வெற்றி கிட்டும் என்பதில் அதீத நம்பிக்கை உடையவர்களாக இருக்கின்றார்கள். அதனால் இலங்கையில் வரும் வாரங்களில் வன்முறை கட்டவிழ்ந்து, போர் வெடித்து, இரத்த ஆறு ஓடுவது நிச்சயம்.

இலங்கை நிலைவரம் குறித்து இராஜதந்திரிகள் இவ்வாறு கணிப்பீடு செய்திருக்கின்றார்கள் என்று கூறப்படுகின்றது.

ஒரு பக்கத்தில் போர் முரசம் அறையப்படுகையில், மறுபக்கத்தில், அமைதித் தீர்வுக்கான சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று சர்வதேச சமூகத்துக்குக் காட்டும் ஏமாற்று நாடகமும் அரங்கேறுகின்றது.

இந்த அபத்த நாடகத்தின் ஓர் அங்கமாக அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு இன்று கூடுகின்றது.

அமைதித் தீர்வுக்கான ஆலோசனை எனத் தெரிவித்து ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சமர்ப்பித்த யோசனைத் திட்டத்தை சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு இன்று ஆராயவிருப்பதாகக் கூறப்படுகின்றது.

1980 களின் ஆரம்பத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, தமிழர் தரப்பால் நிராகரிக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்தி சபைத் திட்டத்தை ஒட்டிய ஏறத்தாழ அதேபோன்ற யோசனை நகலையே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மீளத் தோண்டி எடுத்து இப்போது சமர்ப்பித்திருக்கின்றது.

அந்தத் திட்டத்தைச் சமர்ப்பிக்கவும் சுதந்திரக்கட்சி காலத்தை இழுத்தடித்ததால், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு சுமார் மூன்று மாதம் காத்திருந்து, இப்போது கூடுகின்றது.

இதேசமயம், ஆளும் தரப்பில் உள்ள மற்றொரு பௌத்த சிங்கள மதவாதக் கட்சியும், பேரினவாத அமைப்புமான ஜாதிக ஹெல உறுமயவும் தீர்வுக்கான தனது யோசனைத் திட்டத்தை சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கு இன்று சமர்ப்பிக்கும் எனக் கூறப்படுகின்றது.

"உலக்கை தேய்ந்து உளிப்பிடியானது' போல "கழுதை தேய்ந்து கட்டெறும்பானது' போல ஜாதிக ஹெல உறுமய முன்வைக்கும் தீர்வு யோசனைத் திட்டமும் அமைந்திருப்பது வேடிக்கையானது.

"வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் சுயாட்சி பெறுவதற்காக' இரத்தம் சிந்தி, உயிரையும் உடைமைகளையும் ஆகுதியாக்கி, தலைமுறைகளை ஈகம் செய்து, தமிழர்கள் போராட

மறுபுறம் இப்பிரச்சினையை அமைதி வழியில் தீர்ப்பதற்கான யோசனைத்திட்டம் என்ற பெயரில், கிராமங்களுக்கு அதிகாரத்தைப் பகிரும் முறைமை என்று கூறப்படும் "கிராம சபை முறை' அல்லது "பஞ்சாயத்து முறை' குறித்து பேரினவாதக் கட்சியான ஹெலஉறுமய பேசுகிறது.

நெருப்பாகத் தகிக்கும் ஈழத் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு மாவட்ட மட்ட அதிகாரப் பரவலாக்கம் என்ற கோதாவில் ஆளும் தரப்பின் பிரதான கட்சியும், கிராம மட்ட அதிகாரப் பரவலாக்கம் என்ற பெயரில் ஆளும் தரப்பின் கூட்டணிக் கட்சியான ஹெல உறுமயவும் தீர்வு யோசனைகளை முன்வைப்பது, தமது நியாயமான உரிமைகளுக்காகப் போராடும் ஈழத் தமிழர்களைக் கேலிசெய்து, முட்டாள்களாக்கும் முயற்சியன்றி வேறில்லை.

1980 களின் முற்பகுதியில் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் அப்போதைய அரசினால் முன்வைக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்தி சபைத்திட்டம் தமிழர்களால் அப்போதே நிராகரிக்கப்பட்டு செயலிழந்த பின்னர்தான், உரிமைக்கான தமிழரின் போராட்டம் முழு அளவில் ஆயுத எதிர்ப்புப் புரட்சியாக வடிவெடுத்து, விடுதலைக்கான சுதந்திரப் போராட்டமாக உருக்கொண்டு வன்முறைப்புயல் வீச வழிசெய்தது. இந்தப் புறநிலை அம்சங்களைக் கவனத்தில் எடுக்காமல் புறக்கணித்துக்கொண்டு, "மீண்டும் பழைய குருடி கதவைத் திறவடி!' என்ற கணக்கில், செத்துச் செயலிழந்த மாவட்டசபை முறையை மஹிந்த அரசு தூசுதட்டித் தூக்கியெடுத்து மீண்டும் முன்வைத்திருக்கின்றது.

நீதி முறைமையின் பெயரால் தமிழர்களின் மரபுவழித் தாயகத்தை கூறுபோட்டு, அவர்களின் பூர்வீக வாழிடங்கள் மீது கொடூர இராணுவ நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்து விட்டு, இடப்பெயர்வுகள், வகைதொகையற்ற கைதுகள், சிறைவைப்புகள், சித்திரவதைகள், ஆள்கடத்தல்கள், காணாமற் போகச் செய்தல்கள், படுகொலைகள், சொத்துச் சூறையாடல்கள் என்று பெரும் மனிதப் பேரவல நெருக்கடிக்குள் தமிழர்களை ஆழ்த்தி வதைக்கிறது அரசு.

தொடர்ச்சியான போர் நடவடிக்கைகளும் இராணுவ அழுத்தங்களும் என்றுமில்லாதவாறு தமிழர் தாயகம் மீது கட்டவிழத்து விடப்பட்டிருக்கின்றன. பல்லாயிரம் தமிழர்கள் தத்தமது சொந்த வீடுகளில் இருந்து வேரோடும் வேரடி மண்ணோடும் குடி பெயர்க்கப்பட்டு, நோயும், பிணியும், பசியும், பட்டினியும் வாட்ட, அடிப்படை வசதிகளின்றி அகதி முகாம்களில் அல்லற்படுகின்றார்கள்.

நியாயமான சட்டபூர்வமான உரிமை கேட்டுப் போராடும் தமிழினத்துக்கு ஒரு பக்கத்தில் இத்தகைய கொடூர மனிதப் பேரவலத்தைப் பரிசாக பாடமாக கொடுத்த தென்னிலங்கை, மறுபுறம், இந்தப் பூதாகாரப் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கான வழியாக மாவட்ட சபை, கிராமசபை முறைகளை "பிச்சையாக' தூக்கி வீசும் கருணையைத் தமிழர்களுக்கு ஈயவும் முன்வந்திருக்கின்றது.

ஈழத் தமிழரின் தேசிய இனப்பிரச்சினை விடயத்தில், இராணுவ மேலாதிக்க நிலையில் நின்று கொண்டு, தான் விரும்பும் அரைகுறைத் திட்டத்தைத் தீர்வாகத் தமிழர்களின் மீது கட்டிவிடுவதே கொழும்பு அரசின் தீர்க்கமான முடிவாகும். அதுவே இப்போது வெளிப்படுகின்றது.

உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டத்தில் தமிழர்கள் இரும்பை ஒத்த உறுதியாக இருக்கும் வரை இத்தகைய சலுகைகளும், பிச்சைகளும் தீர்வாகி விடா.

தமிழர் தரப்பினால் பரிசீலனைக்குக் கூடத் தொட்டுப்பார்க்கத் தகுதியற்ற வெறும் காகிதாதித் திட்டங்களாக அவை அடிபட்டுப் போகும்.

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.