Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகள் முகாம்களுக்கு விடுதலைச் சிறுத்தைகளினால் உலர்உணவு விநியோகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையிலிருந்து யுத்தம் காரணமாக தமிழ் நாட்டுக்கு இடம்பெயர்ந்தவர்களில் கணிசமானவர்கள் யுத்தம் முடிந்த பின்னர் இலங்கைக்குத் திரும்பிவிட்டனர். ஆனாலும் இலங்கைக்குத் திரும்ப முடியாத சூழ்நிலையில் பல ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கொரோனா நிவாரணமாக உலர்உணவுப் பொதிகளை வழங்கி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி ஒன்றியத்திலுள்ள வாணியாறு ஈழத்தமிழர் முகாம் மக்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு தலைமையிலான குழுவினர் நேற்று(02) நேரில் சென்று நிலைமையினைப் பார்வையிட்டு உலர்உணவுப் பொருட்களை வழங்கி வைத்துள்ளனர்.

அங்கு ஈழத்தமிழ் மக்களிடம் வன்னிஅரசு கருத்துத் தெரிவிக்கையில் முகாம்களில் வாழுகின்ற ஈழத்தமிழ் உறவுகள் கொரோனா காரணமாக தொழில் வாய்ப்பை இழந்ததால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைக் கருத்திற் கொண்டே கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் அவர்களின் அறிவுரைக்கமைவாக தமிழகத்தில் ஈழத்தமிழர்கள் வாழுகின்ற அனைத்து முகாம்களுக்கும் நிவாரணப் பொதிகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ஈழத்தமிழர்கள் மீது விடுதலைச் சிறுத்தைகள் கொண்டிருக்கும் உறவு என்றுமே மாறாது. இலங்கையில் தமிழ் மக்கள் அரசியல் ரீதியான விடுதலை பெற்று வாழுகின்ற நிலை ஏற்படும்போதே முகாம்களில் தங்கிவாழுகின்ற ஈழத்தமிழர்கள் அவர்கள் சுயவிருப்பின் அடிப்படையில் தாயகத்திற்குச் செல்வதே பொருத்தமானது. அதுவரையில் உங்களை எவரும் வற்புறுத்தி இலங்கைக்குத் திருப்பி அனுப்பமுடியாது எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின்போது தலைமை நிலையச் செயலாளர் தமிழ்ச்செல்வன், அமைப்புச் செயலாளர் கி.கோவேந்தன், மாவட்டச் செயலாளர் ஜானகிராமன், மின்னல் சக்தி அதியமான் உள்ளிட்ட விடுதலைச் சிறுத்தைகள் பலர் கலந்துகொண்டு நிவாரணப் பொதிகளை வழங்கிவைத்தனர். IMG-20200602-WA0005.jpg IMG-20200602-WA0007.jpg IMG-20200602-WA0009.jpg

https://www.pagetamil.com/128137/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.