Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புதுக்குடியிருப்பில் வான்குண்டுத் தாக்குதல்: வயோதிப பெண் பலி- இருவர் காயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுக்குடியிருப்பில் வான்குண்டுத் தாக்குதல்: வயோதிப பெண் பலி- இருவர் காயம்

[செவ்வாய்க்கிழமை, 29 மே 2007, 16:36 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் சிறிலங்கா வான்படையின் மிக்-27 ரக வானூர்திகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் வயோதிப பெண்மணி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.55 மணியளவிலும், பின்னர் பிற்பகல் 2.20 மணியளவிலும் புதுக்குடியிருப்பு பகுதி வான்பரப்பில் நுழைந்த மிக்-27 ரக வானூர்திகள் வேணாவில் பகுதி மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன.

இத்தாக்குதலில் வயோதிபப் பெண்ணான புதுக்குடியிருப்பு வேணாவிலைச் சேர்ந்த மெய்யாப்பிள்ளை அழகு (வயது 56) கொல்லப்பட்டுள்ளார்.

வேணாவிலைச் சேர்ந்தவர்களான வி.இராசையா (வயது 60), நீ.ஜெயகதீஸ்வரி ஆகியோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வான்குண்டுத் தாக்குதலில் 15-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இவற்றில் 5 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.

புதினம்

விமானக் குண்டு வீச்சு நடைபெற்ற பகுதிப் படங்கள் சில

070529_01.jpg

070529_02.jpg

070529_03.jpg

070529_04.jpg

நன்றி: தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி

29_05_07_slaf_bomb_04.jpg

29_05_07_slaf_bomb_03.jpg

29_05_07_slaf_bomb_01.jpg

29_05_07_slaf_bomb_07.jpg

Edited by ஈழவன்85

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதுக்குடியிருப்பில் இன்றும் வான்குண்டுத் தாக்குதல்: சிறுமி காயம்

[புதன்கிழமை, 30 மே 2007, 15:53 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வேணாவில் பகுதி மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்றும் சிறிலங்கா வான்படையின் மிக் - 27 ரக வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன.

இன்று புதன்கிழமை பிற்பகல் 12 மணியளவில் வந்த மூன்று மிக் - 27 ரக வானூர்திகள் தொடர்ச்சியாக 20 நிமிடங்கள் வரை குண்டுத் தாக்குதலை நடத்தின.

இத்தாக்குதலில் புதுக்குடியிருப்பு வேணாவிலைச் சேர்ந்த நிலக்சனா (வயது 07) என்ற சிறுமி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலினால் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மண்டபங்கள் சிலவற்றின் சுவர்களில் சிறுவெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

தாக்குதல் அச்சத்தினால் அப்பகுதி மக்கள் அவ்விடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

நேற்று இப்பகுதியில் சிறிலங்கா வான்படையின் மிக் - 27 ரக வானூர்திகள் நடத்திய தாக்குதலில் வயோதிபப் பெண் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்திருந்தனர்.

puthinam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.