Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எவருக்கும் பாதுகாப்பு வழங்க முடியாத கையாலாகாத்தனத்தில் அரசாங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எவருக்கும் பாதுகாப்பு வழங்க முடியாத கையாலாகாத்தனத்தில் அரசாங்கம்

[30 - May - 2007]

* கடுமையாக சாடுகிறது ஐ.தே.க.

அருளானந்தன் அருண்

இன்று சகல வழிகளிலும் தோல்வியடைந்ததொன்றாக மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் உள்ளதென ஐக்கிய தேசியக் கட்சியின் காலி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

முக்கியமாக நாட்டில் எவருக்கும் பாதுகாப்பு அற்ற நிலை நிலவுவதாகவும் கடத்தல், கப்பம் பெறல் போன்ற புதுமையான கலாசாரத்தை உருவாக்கியுள்ள அரசாங்கமாக இது உள்ளதாகவும் அவர் மேலும் குற்றஞ்சாட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தார்.

மேலும் அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது;

இன்று அரசாங்கம் அனைத்து வழிகளிலும் தோல்வியடைந்துள்ளது. மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க முடியாத, விலை வாசி அதிகரிப்பை தடுக்க முடியாத அரசாக இந்த அரசு உள்ளது.

கடந்த வாரம் கோட்டையில் துறைமுக வாசலில் குண்டு வெடித்தது. பின்னர் நேற்று இரத்மலானையில் வெடித்துள்ளது. மக்களின் உயிருக்கு அரசாங்கத்தினால் பாதுகாப்பு வழங்க முடியவில்லை.

ஆனால், இன்று பாதுகாப்பு செயலாளர் அங்குமிங்கும் செல்லும்போது வீதியில் எவருமே நடமாட முடியாமல் உள்ளது. பாடசாலைகளில் தண்டனை வழங்குவதுபோல் வீதியில் செல்பவர்களை அவரைப் பார்த்துக்கொண்டு நிற்குமாறு பணிக்கின்றார்கள்.

விலை அதிகரிக்கும்போது நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன அவ்வாறு செய்யமுடியாது. நாம் வழக்கு போடுவோம் என பல கதைகள் கூறுகின்றார். ஆனால் எதுவும் நடப்பதில்லை. இன்று அவர் கோமாளி மாதிரி உள்ளார். மாவிற்கு இரண்டு ரூபா அதிகரித்தால் பாணும் இரண்டு ரூபாவினால் விலை அதிகரிக்கப்படுகின்றது. ஒரு இறாத்தல் பாணிற்கு ஒரு கிலோ மா தேவைப்படுவதில்லை. ஆயினும் இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்த முடியாத கையாலாகாத் தனத்தில் அரசு உள்ளது. அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கடன் நிறுத்தப்பட்டுள்ளது.

தற்பொழுது புதிதாக கடத்தல், கப்பம் பெறல் என புதிய கலாசாரம் உருவாக்கப்பட்டுள்ளது. வர்த்தகர்கள் பலரும் தமது வியாபாரங்களையும் முதலீடுகளையும் நிறுத்தி விட்டு வெளிநாடுகளுக்குச் செல்கின்றார்கள்.

எங்கு பார்த்தாலும் கொலைகளும் குற்றங்களும் மலிந்து காணப்படுகின்றன. 6 பேர் கொலை, 5 பேர் கொலை, 3 பேர் கொலை எனக் கொலைகள் இடம்பெறுகின்றன. ஊடகங்களை நாம் பார்த்தால் கொலைச் செய்திகளாகவே வந்து கொண்டிருக்கின்றன.

இன்று இலங்கை மிகவும் ஆபத்தான ஒரு நாடாக உள்ளதாக வெளியாட்கள் யாரும் சொல்லத்தேவையில்லை. இரவில் விமான நிலையத்தை பாதுகாப்பு காரணங்களைக் காட்டி மூடி வைப்பதன் மூலம் இலங்கை ஒரு ஆபத்தான நாடு என்னும் செய்தியை அரசாங்கமே சர்வதேச நாடுகளுக்குத் தெரிவித்துள்ளது.

ஜயலத் ஜெயவர்தன

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஐ.தே.க.வின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜெயவர்தன உரையாற்றுகையில் தெரிவித்ததாவது;

புலிகளுடன் ஐக்கிய தேசியக் கட்சி உடன்படிக்கையொன்றைச் செய்ததாக கூறி எம் மீது சுதந்திரக் கட்சியும் ஜே.வி.பி.யும் இணைந்து குற்றஞ் சாட்டின. ஆனால், இவர்களில் ஆளும் அரசாங்கத்தின் அமைச்சராக இருந்த ஷ்ரீபதி சூரியாராச்சி அரசு புலிகளுக்கு பல மில்லியன் ரூபாவை வழங்கியதாக பாராளுமன்றத்திலேயே கூறினார்.இதை நிரூபிக்கத் தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும் அவர் இக் குற்றச்சாட்டை ஆணித்தரமாக முன்வைத்ததுடன் இது குறித்து விசாரிக்க பாராளுமன்றத் தெரிவிவுக் குழுவொன்றையும் அமைக்கக் கோரிக்கை விடுத்தார்.

ஆனால், இன்று வரைக்கும் இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க குழுவொன்று அமைக்கப்படவில்லை. அரசாங்கத்தில் பங்குதாரர்களான ஜே.வி.பி., ஹெல உறுமய என்பனவும் இப்பிரச்சினை குறித்து புதுமையான அமைதி காக்கின்றன.

அரசாங்கம் இந்த விடயத்தில் நிரபராதியாக இருந்தால் அதை நிரூபிக்க ஏன் இவர்கள் பாராளுமன்ற தெரிவுக் குழுவை அமைக்கத் தயங்குகிறார்கள்? இதைத்தான் நாம் கேட்கிறோம்.

இன்று கிறிஸ்தவ மக்கள் மட்டுமல்லாது அனைத்து மத மக்களும் ஒரு புனித வணக்கஸ்தலமாக வழிபடும் மன்னார் மடுமாதா தேவாலயத்தினையும் அதனை அண்டிய பிரதேசத்தையும் கைப்பற்ற அரசாங்கம் இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. ஆனால், இதன் மூலம் அந்த தேவாலயத்திற்கோ அல்லது அண்டிய பிரதேசங்களில் வாழும் மக்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.