Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யுத்த முன்னெடுப்பை நிராகரித்து மக்கள் எதிர்ப்பு போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுத்த முன்னெடுப்பை நிராகரித்து மக்கள் எதிர்ப்பு போராட்டம்

[30 - May - 2007]

பி.ரவிவர்மன்

யுத்தத்துக்கு எதிராக நாடு பூராவுள்ள அனைத்து மக்களையும் அணிதிரட்டி மக்கள் எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் முதலாவது எதிர்ப்பு போராட்டம் எதிர்வரும் ஜூன் 5 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக இடம்பெறவுள்ளது.

இது தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் கொழும்பு கொம்பனித்தெருவிலுள்ள இடதுசாரி முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன, கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களான வீ.திருநாவுக்கரசு, நீல்விஜேதிலக உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் விக்ரமபாகு கருணாரத்ன தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது;

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சியாளர்கள் யுத்தமொன்றின் மூலமே நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம் என்ற நிலைப்பாட்டையே முன்னெடுத்து வருகின்றனர்.

இன நெருக்கடித் தீர்வு முயற்சிகளுக்கான சமாதான வழிமுறையிலான அனைத்து நடவடிக்கைகளும் ஓரங்கட்டப்பட்டு தமிழ் மக்கள் மீதான இராணுவ ஒடுக்கு முறையே கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகள் ஒரு போதும் வெற்றியளிக்கப் போவதில்லை. அது பேரழிவுக்கே வழிவகுக்கும்.

இவ்வாறான ஒரு நிலைமைக்கே தென்னிலங்கை உட்பட நாடு பூராவுமுள்ள அனைத்து தொழிலாளர்களும் மத்தியதர வர்க்கத்தினரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

பணவீக்கம், அத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றம் என்பவற்றால் நாட்டு மக்கள் அனைவரும் பெரும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அதேநேரம் தொழிலாளர்களின் உரிமைகள் சுரண்டப்பட்டு இராணுவ அடக்குமுறைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

சிங்கள தேசியத்தின் தலைவராக செயற்படும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ யுத்தத்திற்கே பெருமளவு பணத்தை அள்ளியிறைக்கின்றார். இதனால் நாட்டு மக்கள் அனைவரும் மிகவும் மோசமான வறிய நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இதனை விட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உட்பட முக்கிய ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் பாதுகாப்புக்கு பெருமளவு பணம் செலவிடப்படுவதுடன் இவர்கள் பயணம் செய்யும் போது வீதிகள் மூடப்படுவதால் பொதுமக்கள் மற்றும் அவசர நோயாளர்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றனர்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் உறவாடிய ஜே.வி.பி.யும் இன்று ஆட்சியாளர்களின் ஊழல் மோசடிகள், அதிகார துஷ்பிரயோகம் என்பவற்றுக்கு எதிராக வெளிப்படையாகவே தமது எதிர்ப்பை வெளிக்காட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நிதியமைச்சின் செயலாளர் ஜயசுந்தர கூட யுத்த செலவு அதிகரிப்பால் அதிருப்தியடைந்துள்ளதாக அறிய வருகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அமைச்சுப் பதவி பெறுவதற்காக அண்மையில் ஆட்சியாளர்களுடன் இணைந்து கொண்டவர்கள் கூட இன்று அதிருப்தியடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே இடதுசாரி அமைப்புகள், சமாதான விரும்பிகள், முற்போக்கு சக்திகள் என்பன ஒன்று பட்டு நாடுபூராவும் மக்கள் எதிர்ப்பு போராட்டங்களை அரசுக்கு எதிராக நடத்த வேண்டிய அவசிய தேவை ஏற்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப நடவடிக்கையானது எதிர்வரும் ஜூன் 5 ஆம் திகதி மூத்த தொழிற்சங்கவாதிகளான கந்தையா சோமபால ஆகியோரின் நினைவு தினமன்று கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக நடைபெறும்.

இதனையடுத்து நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மக்கள் எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

வீ.திருநாவுக்கரசு

இடதுசாரி முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் திருநாவுக்கரசு கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது;

கிழக்கில் இராணுவ நடவடிக்கைகள் மூலம் வெற்றி பெற்றுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சியாளர்கள் பெருமிதப்பட்டாலும் சுமார் இரண்டு இலட்சம் மக்கள் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேற்றப்பட்டது தான் உண்மை நிலைவரமாகும்.

ஏ- 9 வீதி மூடப்பட்டு யாழ். குடாநாட்டு மக்கள் திறந்த வெளிச்சிறைச்சாலைக்குள் வாழும் அவல நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

வடக்கு, கிழக்கில் மட்டுமன்றி தலைநகர் கொழும்பிலும் கைது காணாமல் போதல் , படுகொலை , கப்பம் பெறுதல் தினசரி நடவடிக்கைகளாகி விட்டது. மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச சமூகத்தின் கோரிக்கைகளைக்கூட உதாசீனப்படுத்தும் இன்றைய ஆட்சியாளர்களுக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் வீதியில் இறங்கி போராட வேண்டும்.

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.