Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாவை யுத்த குற்றங்களிற்காக விசாரணை செய்யவேண்டும்- மனித உரிமை கண்காணிப்பகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவை யுத்த குற்றங்களிற்காக விசாரணை செய்யவேண்டும்- மனித உரிமை கண்காணிப்பகம்

 
June 24, 2020

கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறித்து யுத்த குற்ற விசாரணை அவசியம் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மிகநீண்ட காலத்திற்கு முன்னரே அவரை யுத்த குற்ற விசாரணைகளிற்கு உட்படுத்தியிருக்கவேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது படையினரை பெருமளவில் கொலை செய்தேன் என அவர் தெரிவித்துள்ளதை தொடர்ந்து இலங்கை அதிகாரிகள் இது குறித்து விசாரணைகளிற்கு உத்தரவிட்டுள்ளனர் என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

 

HRW_logo-300x174.jpg
எனினும் உண்மையில் கருணா அம்மான யுத்த குற்றங்களிற்காக பல வருடங்களிற்கு முன்னரே விசாரணைக்கு உட்படுத்தியிருக்கவேண்டும் என மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.
26 வருட உள்நாட்டு யுத்தத்தின் போது விடுதலைப்புலிகள் பெருமளவு மனித உரிமை மீறல்களிற்கு காரணமாகயிருந்தனர் என தெரிவித்துள்ள மீனாக்சி கங்குலி சட்டவிரோத படுகொலைகள் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை அவர்கள் மேற்கொண்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

karuna-300x200.jpg
கருணா அம்மானின் தலைமையின் கீழ் செயற்பட்ட படையணியினர் 1990 ஜூனில் விடுதலைப்புலிகளிடம் சரணடைந்த நூற்றுக்கணக்கான பொலிஸாரை கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டு காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த வருடம் ஆகஸ்ட் மாதம் அவரது படையணியினர் 200 பொதுமக்களை கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருணா விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விலகி அரச சார்பு ஆயுத குழுவிற்கு தலைமை தாங்கியவேளையும் அவரது குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் ஒருபோதும் விசாரணை செய்யப்படவில்லை என மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

 

மாறாக அரசாங்கத்தின் சார்பில் அவரது படைப்பிரிவினர் மேலும் மேலும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள்,மனித உரிமை கண்காணிப்பகம் உட்பட பல அமைப்புகள் கருணாவின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்ற அமைப்பு பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்படுதல்,சித்திரவதை மற்றும் சிறுவர்களை படையணிகளில் சேர்த்தல் ஆகியவற்றிற்கு காரணம் என பதிவு செய்துள்ளன எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

HRW-700x394-300x169.jpg

கருணாவை ஒருபோதும் அவரது குற்றங்களிற்காக பொறுப்புக்கூறச்செய்யவில்லை,2007 இல் அவர் போலியான ஆவணங்களிற்காக கைதுசெய்யப்பட்டார்,அவ்வேளை பாதுகாப்பு செயலாளராக காணப்பட்ட கோத்தபாய ராஜபக்சவே போலி கடவுச்சீட்டை வழங்கினார் என கருணா வாக்குமூலம் வழங்கினார் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

கருணாவை யுத்த குற்றங்கள் மற்றும் ஏனைய பாரிய மனித உரிமை துஸ்பிரயோகங்களிற்காக விசாரணை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள மீனாக்சி கங்குலி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச மீதே யுத்த குற்றச்சாட்டுகள் உள்ளதன் காரணமாக கருணா மீண்டும் நீதியின் பிடியிலிருந்து தப்புவார் என கரிசனை வெளியிட்டுள்ளது.
 

http://thinakkural.lk/article/48956

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.