Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து அரசு முடிவுசெய்யவேண்டிய காலம் வந்துவிட்டது இன்றைய தள நிலையில் அது அர்த்தமற்றதாகி விட்டதாக அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Thu May 31 5:35:59 EEST 2007

போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து அரசு முடிவுசெய்யவேண்டிய காலம் வந்துவிட்டது இன்றைய தள நிலையில் அது அர்த்தமற்றதாகி விட்டதாக அறிவிப்பு

அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கைச்சாத்தான போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்துத் தீர்க்கமான முடிவு எடுக்கப்படவேண்டிய காலம் கனிந்துவிட்டது.

ஒப்பந்தம் கைச்சாத்தான காலத்தில் நிலவிய சூழ்நிலைக்கும் இன்றைய தள நிலைமைக்கும் இடையில் பெரும் வேறுபாடு உள்ளது.

ஆகையால், போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதா என்பது குறித்து அடுத்த வாரத்தில் விசேட பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தவுள்ளோம்.

அரசாங்கத்தின் சார்பில் இந்தத் தக வலை வெளியிட்டார் அமைச்சர் ஹெகெ லிய ரம்புக்வெல.

நேற்றைய ஊடகவியலாளர் சந்திப் பின்போது அமைச்சர் இதுகுறித்துச் சொன்னதாவது

2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்துக் கும் இடையில் கைச்சாத்தான போர்நிறுத்த ஒப்பந்தம் இப்போது பொருத்தமற்றதாகி விட்டது.

அன்றைய சூழ்நிலைக்கும் இன்றைய தள நிலைக்கும் மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வேறுபாடு உண்டு. அத னைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதால் நாட் டுக்கு எந்த நன்மையும் கிடைக்கும் என்று எண்ணத்தோன்றவில்லை.

இந்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்யவேண் டும்; அரசாங்கம் கிழித்தெறியவேண்டும் என்று சிங்களத் தேசியவாதிகள் அரசுக் குப் பெரும் அழுத்தம் கொடுத்துவருகி றார்கள்.

அதற்கான காலம் வந்துவிட்டதாகவே கொள்ளவேண்டியுள்ளது. இது குறித்து ஆராய்ந்து முடிவுக்கு வருவதற்கான பேச் சுக்களை அடுத்த வாரத்தில் நடத்தவுள் ளோம்.

கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங் களிலும் விடுதலைப் புலிகள் அடுத்தடுத்து நடத்திவரும் குண்டுத்தாக்குதல்களுக்கு அரசாங்கம் பதிலடி கொடுத்துவருகிறது. என்றார். (அ1)

உதயன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமைதி ஒப்பந்தம் குறித்து இரண்டு வாரத்தில் முடிவு

கொழும்பு : விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே சண்டை அதிகரித்து வருவதையடுத்து, நார்வே நாடு மத்தியஸ்தம் செய்து உருவான அமைதி ஒப்பந்தத்தை தொடருவதா, வேண்டாமா என்பது பற்றி இரண்டு வாரங்களில் முடிவு செய்யப்படும் என இலங்கை அறிவித்துள்ளது.

இலங்கை, கொழும்பில் கடந்த வாரம் புலிகள் நடத்திய இரண்டு கண்ணிவெடி தாக்குதல்களில் பாதுகாப்பு படை வீரர் ஒருவரும் ஏழு பொதுமக்களும் பலியாயினர். 40 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவங்களுக்கு இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே கண்டனம் தெரிவித்தார். கொழும்பில் நடத்தப்பட்ட தாக்குதல் இன ரீதியாக மக்களை பிளவுபடுத்த நடந்த முயற்சி. எதிர்காலத்தில் இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் பாதுகாப்பு படையினர் தடுக்க வேண்டும் என இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே கூறினார்.

ராணுவ செய்தி தொடர்பாளர் பிரசாத் சமரசிங்கே, "பயங்கரவாத குழுக்களின் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். பயங்கரவாத செயல்களை தடுப்பதற்கான நடவடிக்கையில் பாதுகாப்பு படையினருக்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும்' என்றார்.

இதை தொடர்ந்து இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளரும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சருமான கெகலியா ரம்புக்வெல்லா நிருபர்களிடம் கூறுகையில், "அமைதி ஒப்பந்தம் தற்போது செயல்பாட்டில் இல்லை. எனவே, அமைதி ஒப்பந்தத்தை பலப்படுத்துவதா அல்லது ரத்து செய்வதா என்பது பற்றி இரண்டு வாரங்களில் முடிவு எடுக்கப்படும்' என்றார். இலங்கையின் வவுனியாவில் நேற்று முன்தினம் நடந்த இரண்டு சம்பவங்களில் ஆறு ராணுவ வீரர்களை விடுதலைப் புலிகள் சுட்டு கொன்றனர்.

தினமலர்

கடைசியில் இலங்கை அரசுக்கிருந்த பாதுகாப்பை மகிந்தவே மீற தலைப்பட்டுட்டார் இனி பாவம் மகிந்த பூனைக்கு யார் மணிகட்டுவது என காத்திருந்த நேரத்தில் தான் கட்டுறன் என தொடங்கீட்டார் ஆனால் சட்டரீதியாக ஒப்பந்தம் மீறப்பட்டுவிட்டது அதாவது இன்னொருவரின் எல்லையை கைப்பற்றி அதனை தக்கவைப்பதிலிருந்தே இலங்கை அரசு செயலர்றதாக்கி விட்டது இதுவரை புலிகள் தாக்கி அழிப்பு தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தளம் திரும்புவதையே வாடிக்கையாக கொன்டிருந்தனர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போர் நிறுத்த உடன்பாடு தொடர்பாக அடுத்த ஓரிரு வாரத்தில் அரசின் முடிவு

[31 - May - 2007]

டிட்டோகுகன்

போர் நிறுத்த உடன்பாடு தொடர்பான தனது நிலைப்பாட்டை அரசு அடுத்த ஓரிரு வாரங்களில் அறிவிக்க உள்ளதாக அரச பாதுகாப்பு விவகாரப் பேச்சாளரும் அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பான வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்;

போர் நிறுத்த உடன்பாடு குறித்து தீர்க்கமான முடிவொன்றை ஓரிரு வாரங்களுக்குள் அரசு அறிவிக்கவுள்ளது. போர் நிறுத்த உடன்பாட்டைப் பொறுத்தவரை, இன்று அது செயலிழந்தே உள்ளது.

இது அனைவருக்கும் தெரிந்த விடயம். இதில் இரகசியங்கள் எதுவுமில்லை. ஆனாலும், உத்தியோகபூர்வமாக இந்த ஒப்பந்தம் பழைய நிலையிலேயே உள்ளது.

அடுத்து வரும் இருவார காலப்பகுதியில், போர் நிறுத்த உடன்பாட்டை வலுப்படுத்துவதா? அல்லது இரத்துச் செய்வதா? என்பது குறித்து அரசு அறிவிக்கவுள்ளது. மனித உரிமை மீறப்படுவதாக சர்வதேசத்துக்குப் பரப்புரை செய்யும் புலிகளின் தந்திரோபாய முயற்சிகளுக்கு பாராளுமன்றத்திற்குள்ளிருந்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.