Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஹெல உறுமயவின் `வாய்ப்பாடு'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஹெல உறுமயவின் `வாய்ப்பாடு'

[31 - May - 2007]

இனநெருக்கடிக்கு துரித தீர்வைக் கண்டு இரத்த ஆறு பெருக்கெடுத்தோடுவதை தடுத்து நிறுத்துமாறு சர்வதேச சமூகமும், உள்நாட்டிலுள்ள நியாய சிந்தை படைத்ததோரும் தொடர்ந்தும் குரல் கொடுத்து வரும் நிலையில் தென்னிலங்கையில் பெரும்பான்மை சிங்கள மக்களின் மதிப்புக்குரியவர்களான பௌத்த மதகுருமாரின் ஜாதிக ஹெல உறுமய இந்த நாட்டில் இனப்பிரச்சினையொன்று இல்லை. தமிழ் மக்களுக்கு துயரங்கள், சிக்கல்கள் இருப்பதாக தமக்குத் தென்படவில்லையென்ற `வாய்ப்பாட்டை' மீண்டும் பாடியுள்ளது.

கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் முளைவிட்ட இனநெருக்கடி பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம்பெற்ற பின் அரச நிர்வாக இயந்திரம் பெரும்பான்மைச் சிங்கள மக்களின் பிரதிநிதிகளிடம் கைமாறிய பின் படிப்படியாக உக்கிரமடைந்தது. சிறுபான்மை மக்கள் ஆட்சிப் பங்கில் மட்டுமல்லாமல், கல்வி, தொழில் வாய்ப்பு என்று சகல வழிகளிலுமே ஓரம்கட்டப்பட்டனர். இதனாலேயே தமிழ் தலைவர்கள் அகிம்சை வழிப் போராட்டத்தை முன்னெடுத்தார்களென்பதும் பின்னர் அது ஆயுதப் போராட்டமாக மாறி நாடு பலவழிகளிலும் பின்னடைவு கண்டுவருவதும் தொடரும் அவலநிகழ்வாகிவிட்டது.

தென்னிலங்கையில் ஆட்சிக்கதிரையை கைப்பற்றுவதற்காக இனப்பிரச்சினையில் குளிர்காய்ந்து அரசியல் வியாபாரத்தை விஸ்தரித்து இலாபம் ஈட்டும் போக்கே தொடர்கதையாகிவிட்டது.

இலங்கையின் நீண்டு செல்லும் இனநெருக்கடியும், மோதல்களும் அண்டைநாடான இந்தியாவுக்கும், உலக நாடுகள் பலவற்றுக்கும் தொடர்ந்தும் தலைவலியைக் கொடுத்துக்கொண்டிருப்பதால் இலங்கையிலுள்ள சகல இனமக்களுக்கும் ஏற்புடையதான அரசியல் தீர்வொன்றை காணுமாறும் இராணுவ வழியிலான தீர்வுகள் நாட்டுக்கு ஒருபோதும் நிரந்தர சமாதானத்தைத் தேடித்தரப்போவதில்லை எனவும் அந்த நாடுகளும், அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தல்களையும், அழுத்தங்களையும் கொடுத்து வருகின்றன.

இனநெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அரசியல் தீர்வு சகல கட்சிகள், குழுக்களின் கருத்தொருமைப்பாட்டுடன் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ அதற்காக சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவொன்றையும் அமைத்து அரசியல் கட்சிகளின் யோசனைகளை பெற்று வரும் நடவடிக்கைகளும் தற்போது தொடர்கின்றன. இந்நிலையில் பௌத்த பிக்குகளின் கட்சியான ஜாதிக ஹெல உறுமய இலங்கையில் இனநெருக்கடியொன்று இல்லை. தமிழ் மக்கள் இலங்கையில் 9 சதவீதத்தினரே என்றும் ( தவறான புள்ளிவிபரம்) பிஜியில் உள்ள இந்தியர்கள், பூட்டானில் உள்ள நேபாளத்தவர்கள், மசிடோனியாவிலுள்ள அல்பேனியர்கள் போன்ற சிறுபான்மையினர் மட்டுமே தவிர ஆட்சி நிர்வாகத்தில் ஏனைய வரப்பிரசாதங்களில் பங்காளிகள் அல்லவென சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கு யோசனை சமர்ப்பித்துள்ளது.

தற்போதைய ஒற்றையாட்சி அமைப்பு முறைமையில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுத்து அரச மதமாக பிரகடனப்படுத்த வேண்டுமெனவும் பிரதேச சபை மட்டத்திலேயே அதிகாரங்களைப் பரவலாக்கி திருத்தங்களுடன் தற்போதைய நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை தொடரவேண்டுமெனவும் சிபார்சுகளை முன்வைத்திருக்கிறது.

அத்துடன், தமிழ் மக்கள் இந்நாட்டின் இனத்தவர்களே அல்லர் என்றும் சிங்களர்கள் மட்டுமே இங்குள்ள ஒரே இனம் என்றும் ஹெல உறுமய திட்டவட்டமாக கூறுகிறது. ஆனால், வரலாற்றுக்காலம் தொட்டே தமிழ் மக்கள் இந்நாட்டின் பூர்வீகக் குடிகள் என்பதற்கு இந்த ஹெல உறுமயவின் பௌத்த மதகுருமார், போற்றித்துதித்து முன்னுதாரணம் காட்டும் `மகாவம்சத்தை' அவர்கள் மறந்துவிட்டார்கள் போலும்.

ருகுணரட்ட மன்னன் துட்டகைமுனு அநுராதபுரத்தில் தமிழ் மன்னனான எல்லாளனை தோற்கடித்து முழு நாட்டையும் பரிபாலித்ததையும் வங்கதேசத்து இளவரசன் விஜயனின் வருகையுடன் சிங்கள மக்களின் வரலாறு இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டதென்பதையும் உறுதியான நம்பிக்கையுடன் வெளிப்படுத்திவரும் ஹெல உறுமயவினர் போன்றவர்கள் தமிழ் மக்களும் இலங்கையின் பூர்வீகக் குடி மக்கள் என்பதையோ, வடக்கு,கிழக்கு பகுதிகளில் நெடுங்காலமாக அவர்கள் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதையோ ஏற்றுக்கொள்ளத் தயங்குவதும் அத்துடன் பெரும்பான்மை மக்களுக்கு உள்ள சகல உரிமைகளும் இந்தநாட்டில் வசிக்கும் சகல இனமக்களுக்கும் உண்டு என்பதையும் ஏன் அங்கீகரிக்க தயங்குகிறார்கள் என்பதும் விசனத்திற்குரியதாகும்.

அத்துடன் ஹெல உறுமயவினரிடமிருந்து இன்னுமொரு விதண்டாவாதமும் முன்வைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை இல்லை. அவர்கள் வேண்டுமென்றால் தமிழ் நாட்டுக்குச் சென்று அங்கு சுயநிர்ணய உரிமை கோரியும், இதர உரிமைகளைக் கேட்டும் போராட்டம் நடத்தலாமே என்பது அவர்கள் முன்வைத்துள்ள இன்னுமொரு நகைப்புக்கிடமான வாதமாகும். அண்டை நாடான பாரதத்திலிருந்தே இலங்கைக்கு சிங்களவர்கள், தமிழர்கள் குடிபெயர்ந்து வந்தவர்கள் என்பது சான்றுகளுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாறு. காலத்திற்குக் காலம் இடம்பெற்ற இந்தியப் படையெடுப்புகளினால் குறிப்பாக தென்னிந்தியாவிலிருந்து இடம்பெற்ற படையெடுப்புகளினால் தமிழர்கள் வரலாற்றுக் காலம் தொட்டே இலங்கையில் குடியேறியுள்ளனர். காகங்கள் பறந்து வந்துவிட்டுத் திரும்பும் தூரத்திலுள்ள தமிழகத்திலிருந்து இலங்கைக்கு குறிப்பாக வடபகுதிக்கு தமிழ் மக்களின் வருகை வரலாற்றுக்கு முந்திய காலம் தொட்டே இருந்திருக்க முடியும் என்பது உண்மையா என்பதுபற்றி மனதை குடையவேண்டிய எந்த அவசியமும் இல்லை.

புத்தாயிரமாம் ஆண்டில் உலகம் சுருங்கி ஒரு கிராமமாகி விட்ட நிலையில், பொருளாதாரம், விஞ்ஞானத்துறைகளில் பல்வேறு சவால்களை உலகம் எதிர்நோக்கியுள்ள நிலையில், இலங்கையிலுள்ள பெரும்பான்மைச் சமூகத்தின் போற்றுதலுக்குரியவர்களாக உள்ள ஹெல உறுமயவினர் கற்காலச் சிந்தனைகளுடன் விளங்குவது கவலையையும், விரக்தியையும் தரும் விடயமாகும். மேலும், ஐ.நா.வால் சிறுபான்மையினருக்கு விதந்துரைக்கப்பட்ட உரிமைகளிலும் பார்க்க இலங்கையில் தமிழர்களுக்கு அதிகளவில் வழங்கப்பட்டுள்ளன என்று அக்கட்சியின் யோசனையில் குறிப்பிடப்பட்டிருப்பது அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அகதிகளாக அடைக்கலம் கோரி பல்வேறு துன்பங்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் தமிழ் மக்கள் தொடர்பாக இக்கட்சியினரின் கண்ணோட்டம் எந்தமட்டத்தில் இருக்கின்றது என்பதையே வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றது.

கடந்த ஒன்றரை வருடத்திலேயே சுமார் 2 இலட்சம் தமிழ் மக்கள் அகதிகளாகி அடிப்படை வசதிகளின்றி கூடாரங்களில் படும் துன்பங்கள், அவலங்கள் ஆட்சியில் தற்போது பங்காளிகளாக விளங்கும் ஹெல உறுமயவினருக்கு தென்படவில்லையா? அல்லது ஆட்சிக் கதிரையை பிடிப்பதற்காக, அதனை தக்கவைப்பதற்காக தமிழ் மக்களின் பிரச்சினைகளை அடியோடு நிராகரித்துவிட்டு, `அரசியல் பிழைப்பு' தொழிலுக்கு இக்கட்சியினர் முதலீடு செய்கிறார்களா என்பதே எம்முன்னாலுள்ள கேள்வியாகும்.

அகிம்சா மூர்த்தியான புத்தர் பெருமானின் போதனைகளை பின்பற்றி நடப்பவர்களெனக் கூறிக்கொள்ளும் இந்தக் கட்சியைச் சார்ந்தவர்கள், ஏனைய சமூகம் ஒன்றின் அடிப்படைப் பிரச்சினைகளை புரிந்து கொண்டு நியாயமான முறையில் அவற்றை நிவர்த்தி செய்வதற்கு ஆக்கபூர்வமான வழியில் தமது பங்களிப்பை வழங்கவேண்டும் என்பதே நியாய சிந்தை படைத்தோரின் எதிர்பார்ப்பும் கோரிக்கையுமாகும்.

தினக்குரல்

ஹெல உறுமயவின் `வாய்ப்பாடு'

????????

ஓர் ஒண்டு புத்தன்

ஈர் ஒண்டு புத்தன்

மூ ஒண்டு புத்தன்

ஓர் இரண்டு புத்தன்

ஈர் இரண்டு புத்தன்

மூ இரண்டு புத்தன்

ஓர் மூண்டு புத்தன்

ஈர் மூண்டு புத்தன்

மூ மூண்டு புத்தன்

ஓர் நான்கு புத்தன்

ஈர் நான்கு புத்தன்

மூ நான்கு புத்தன்

ஓர் ஐந்து புத்தன்

ஈர் ஐந்து புத்தன்

மூ ஐந்து புத்தன்

ஓர் ஆறு புத்தன்

ஈர் ஆறு புத்தன்

மூ ஆறு புத்தன்

வாய்ப்பாடு சரியா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.