Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போர் நிறுத்த உடன்பாட்டை கிழித்தெறியும் ஆற்றல் இந்த அரசாங்கத்துக்கு இல்லை: ஐ.தே.க

Featured Replies

போர் நிறுத்த உடன்பாட்டை கிழித்தெறியும் ஆற்றல் இந்த அரசாங்கத்துக்கு இல்லை: ஐ.தே.க

[வெள்ளிக்கிழமை, 1 யூன் 2007, 08:38 ஈழம்] [கொழும்பு நிருபர்]

போர் நிறுத்த உடன்பாட்டை 2004 ஆம் ஆண்டிலிருந்து கிழித்தெறியப் போவதாகத் கூறிவரும் அரசாங்கம் ஏன் அவ்வாறு செய்யவில்லை எனக் கேள்வி எழுப்பியிருக்கும், சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, போர் நிறுத்த உடன்படிக்கையை கிழித்தெறியவோ, அல்லது புதிய உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடவோ அரசாங்கத்தினால் முடியாது எனவும் தெரிவித்தது.

போர் நிறுத்த உடன்பாடு தொடர்பாக அடுத்த ஓரிரு வாரத்தில் அரசின் முடிவு வெளியிடப்படும் என அரசின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார்

இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

விடுதலைப் புலிகளுடன் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் செய்துகொண்ட உடன்படிக்கையை இரத்துச் செய்யப் போவதாக அரச தலைவருக்கான தேர்தலின் போது தெரிவித்தே மகிந்த ராஜபக்ச வெற்றிபெற்றார்.

2004 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை முன்னைய அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க கலைத்தபோதும் அவரும் போர் நிறுத்த உடன்படிக்கையை குப்பைத் தொட்டியில் வீசப்போவதாகத் தெரிவித்தவர்தான். ஆனால், அவராலும் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த உடன்படிக்கையை இரத்துச் செய்யப்போவதாக இப்போது அரசாங்கம் மீண்டும் கூறுகின்றது

மக்களை ஏமாற்றுவதற்காகவே இவ்வாறான கருத்துக்களை அரச தரப்பினர் வெளியிட்டு வருகின்றார்கள். அரசாங்கத்தினால் போர் நிறுத்த உடன்படிக்கையை ஒருபோதுமே கிழித்தெறிய முடியாது.

இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் பொது மக்களும் முப்படையினரும் என ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருக் கின்றார்கள். இப்படியிருக்கையில் உடன்படிக்கையை அரசாங்கம் ஏன் இரத்துச் செய்யவில்லை?.

உலக நாடுகளின் அபிப்பிராயத்தை மீறி இன்றைய அரசாங்கத்தினாலும், அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினாலும் செயற்பட முடியாது. உலகினைப் புறக்கணித்து அவ்வாறு செய்தாலும், புலிகளுடன் புதிய போர் நிறுத்த உடன்படிக்கையை செய்துகொள்ள அரசாங்கத்தினால் முடியாது. இதனை அரசாங்கத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஒரு சவாலாகவே விடுக்கின்றது.

அன்று நாங்கள் போர் நிறுத்த உடன்படிக்கையைச் செய்துகொண்ட போது, எதிர்த்தவர்களும், இன்று எதிர்ப்பவர்களும் எதற்காக இரு தரப்பினராலும் மீறப்பட்டு செயலிழந்து போயிருக்கும் உடன்படிக்கையை இதுவரையில் கிழித்தெறியாமல் வைத்திருக்கின்றார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

செய்தி மூலம்: புதினம், நன்றி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.