Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலையின்  மீது  அமர்ந்து  யோகா  செய்யும்  பெண்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலையின்  மீது  அமர்ந்து  யோகா  செய்யும்  பெண்கள்!

July 18, 2020

சீனா: யுன்னன் (Yunnan) மாகாணத்தில் வட்டவடிவ லில்லி இலைகளின்  மீது   பெண்கள் யோகா செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.

oga-on-worlds-largest-water-lily-leaves-

நீர்நிலை ஒன்றில் 10 அடி விட்டம் கொண்ட அகன்ற இலைகளின்  நடுவே  பெண்கள் அமர்ந்து யோகாசனம்  செய்யும் குறித்த வீடியோவானது தற்போது  சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

விக்டோரியா அமேசானிக்கா எனப்படும் தாவரப் பெயருடைய குறித்த லில்லி இலைகள் 50 கிலோ கிராம் எடை கொண்டவர்களையும் தாங்கும் வலிமை உடையன என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ:(மூலம்- New China TV)

 


 
 

 
  • 1 month later...

யோகாவின் அற்புத வாழ்வு -02

யோகா என்ற வார்த்தைக்கு ஒன்றிணைதல் என்று பொருள் ஆகும் . யோகா பயிற்சி மூலம் உங்கள் உடலையும், மனதையும் மற்றும் உயிரையும் ஒன்றிணைத்து எப்போதுமே துடிதுடிப்புடன், உற்சாகமாக, ஆரோக்கியமாக வைத்திருக்க வழியாகும்.உங்கள் விதியை நீங்களே நிர்ணயிக்கும் ஆற்றலை, சுதந்திரத்தை உங்களுக்கு வழங்கும் உள்நிலை விஞ்ஞானமானது யோகா பயிற்சி ஆகும்.

யோகாவில் எட்டு அங்கங்கள் உள்ளன

அதில் முதல் நான்கு  அங்கங்கள்

இயமம் (தார்மீக ஒழுக்கங்கள்), நியமம்(உள் ஒழுக்கம்), ஆசனம் (இருக்கை), பிராணயாமம் (சுவாச உத்திகள்)  உடல் மற்றும் உயிரை  சமநிலையில் வைக்கின்றன

மிச்ச நான்கு அங்கங்கள் மனதை ஒருநிலையில் வைக்கின்றன.

இதில் முக்கியமாக ஆசனம் மிக முக்கியமான அடித்தளம் ஆகும் .

ஆசனம் பயிலும் போது உடலில் உள்ள இட (நிலா) மற்றும் பிங்கள (சூரியன்) நாடி சமநிலையை அடைகின்றன . ஆனந்தமாக இருக்கத் தேவையான இரசாயனத்தை உங்களுக்குளேயே உருவாக்கிறது  மற்றும் உடல் உள் உறுப்புகளை  வலிமையாக்குகிறது அதனால் உடல் கழிவுகள் வெளியேறி உடல் பரிசுத்தமாகிறது

இந்த உடல் நிலையில் எந்த ஒரு வியாதியும் அண்டாது

நான்காவது அங்கங்கள் பிராணயாம பயிற்சி முலமாக உயிரை வளர்க்க முடியும் .உதாரணத்திற்கு ஆமை மெதுவாக 4 மூச்சு 1 வினாடிக்கு இழுத்து மெதுவாக மூச்சு விடுகிறது அதன் காரணத்தால்தான் ஆமை 500 ஆண்டு வரை உயிர் வாழ முடிகிறது. அதேபோல் நாம்  பிராணயாம பயிற்சி மூலம் முச்சைக் கட்டுக்குள் கொண்டு வந்தால் நாமும் நீண்ட ஆண்டுகள்  உயிர் வாழ இயலும்.

ஐந்தாவது முதல் ஏட்டாவது அங்கங்கள் தியானம் மனக் கட்டுப்பாட்டை நோக்கிச் செல்கிறது . தியானம் மனிதருக்கு யாரும் தர இயலாத  மன அமைதி தருகிறது . இந்த நிலையில் மனிதன் தனக்கு ஆனந்தமாக வாழ எது அவசியம் என உணர முடியும் .

எந்த ஒரு கடினமான வேலையும் பிரச்சினையும் அமைதியான முறையில் அறிவு பூர்வமாக முடிக்க முடியும். மனிதன் தன் முழு சிந்தனையும் ஒருநிலைப்படுத்தி தனக்கு இருக்கும் எந்த ஒரு கற்பனையும் நடை முறையில் உருவாக்கிட முடியும் . வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களிலும், சமநிலையையும் ஆற்றலையும் புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்வதே யோகாவாகும்.

– கே.கமலேஸ்வரன்
Instagram: _nowyogabegins
Facebook: Now Yoga Begins

http://thinakkural.lk/article/69276

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.