Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமத்துவத் தகைமையை மறுத்து சமரசத்துக்கான பாதை மறிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Date: 2007-06-02

சமத்துவத் தகைமையை மறுத்து சமரசத்துக்கான பாதை மறிப்பு

ஜனாதிபதி மஹிந்தர் தலைமையிலான அரசின் போரியல் முனைப்புப் போக்குப் பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

ஊசலாடியபடி மயிரிழையில் தொங்கிக் கொண்டிருக்கும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு செத்துச் செயலிழந்து, உக்கி, உருக் குலைந்து வெற்றுத் தாளாகிப் போயுள்ள போர் நிறுத்த உடன் படிக்கைக்கு நிரந்தரமாக இறுதிக் கிரியைகள் நடத்தி, அதை ஆழக்குழிதோண்டிப் புதைத்துவிட அரசு தயாராகிவிட்டது என் பதும் செய்தி. இவ்விடயம் தொடர்பான அரசின் உத்தியோகபூர்வ முடிவு விரைவில் வெளியாகும் என்றும் கட்டியம் கூறப்பட்டுவிட்டது.

இதேசமயம்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் நிர்வாகம் மேற்கொண்ட "சமாதானத்துக்கான யுத்தம்' என்ற விபரீதக் கோட்பாட்டை தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வும் பின்பற்றத் தயாராகி விட்டார் என்றும் செய்திகள் வெளியாகி யிருக்கின்றன.

"இராணுவ நடவடிக்கைகள் மூலம் புலிகளைப் பலவீனப்படுத்தி பணியவைப்பது. பின்னர் தாம் விரும்பிய தீர்வுக்கு புலிகளை இணங்க வைப்பது.' இதுதான் தென்னிலங்கையில் புதிது புதிதாக ஆட்சிக்கு வரும் அரசுத் தலைமைகளின் இறுமாப்புடன் கூடிய கனவாக இருந்து வந்திருப்பதை கடந்த மூன்று, நான்கு தசாப்தகால இலங்கை வரலாறு கண்டு வருகின்றது.

ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனாவில் தொடங்கி, ஜனாதி பதி ஆர். பிரேமதாஸா, ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷவரை எவரும் இத்தகைய கனவு காணும் விடயத்தில் விதிவிலக்கானவர்கள் அல்லர். ஆனால் அவர்களின் இந்தக் கனவு தொடர்ந்தும் பகல் கனவாக நீடித்து நனவாகாமல் கானல் நீராக நம்பிக்கை தந்து காலை வாரி போனதுதான் இன்று வரையான யதார்த்தம்.

"எல்லோரும் ஏறி விழுந்த நொண்டிக் குதிரையில் தானும் ஏறித் தடுமாறி விழுந்தாராம் சக்கடத்தார்' என்பதுபோல, புலிகளை இராணுவ ரீதியில் பலவீனப்படுத்தி, அதன்பின்னர் தாம் விரும்பும் அரைகுறையான உருப்படியற்ற தீர்வுத்திட்டத்தைத் தமிழர் கள் மீது திணித்தல் என்ற மனக்குதிரையிலே தானும் பயணிக்கத் தயாராகி விட்டார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

"இலங்கையில் சமாதானத்துக்கான விரோதிகள் பயங்கரவாதிகளான புலிகளே!' என்று பக்கச் சார்பான பிரசாரத்தில் முழு அளவில் ஈடுபட்டிருக்கும் தென்னிலங்கை, அந்த சமாதான விரோதிகளை நசுக்கிவிட வேண்டும், அதற்கு யுத்தம் தவிர்க்கப் பட முடியாதது என்ற விபரீத விளக்கத்தை அளித்துக் கொண்டு "சமாதானத்துக்கான யுத்தம்' என்ற கனவுக் குதிரையிலே தாவி ஏற முனைகின்றது.

"நிலையான சமாதானத்தை நிறுவி, தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதாக இருந்தால், அதற்கு முன்னர் ஒரு பாரிய யுத்தத்தின் மூலம் புலிகள் அமைப்பை பூண் டோடு அழிக்க வேண்டும். அதற்குப் போர் தவிர்க்கப்பட முடியா தது.' என்ற பரப்புரையைத்தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு முன்னர் இதே கருத்தியல் வித்தையைக் கையிலெடுத்த ஏனைய தென்னிலங்கை அரசியல் தலைவர்களும் முன்வைத் தார்கள்.

"சமாதானம் என்ற உன்னத இலட்சியத்தை அடைவதற்கு போர் என்ற அழிவு நடவடிக்கை அத்தியாவசியமானது' என்ற இந்த விநோத விபரீத தனக்குள்ளேயே முரண்பாட்டு நிலைகளைக் கொண்டுள்ள அரசியல் கோட்பாடு, சில சமயங் களில் சர்வதேச மட்டத்தில் சில காலத்துக்கு நன்றாக வேகலாம்; எடுபடலாம். அதுவும் "பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேச யுத்தம்' என்ற பெயரில் அமைதிக்கான போரியல் கோட்பாடு எனும் ஒவ்வாத கொள்கைப் போக்கை சர்வதேச வல்லாதிக்க நாடுகள், அமெரிக்கா தலைமையில் பூமிப்பந்து எங்ங னும் கட்டவிழ்த்து விட்டுள்ள இன்றைய சூழ்நிலையின் பின்புலத்தில் "சமாதானத்துக்கான யுத்தம்' என்ற மஹிந்தரின் பரப்புரையும் சர்வதேச மட்டத்தில் நன்கு அவியலாம்.

ஆனால் நீண்ட காலத்துக்கு அது பயன்தரத் தக்க வகையில் தாக்குப் பிடித்து நின்று, நிலைத்து ஓடாது என்பதே யதார்த்தம். "பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேச யுத்தம்' என்ற சகதியைத் தானே தோற்றுவித்து, அதற்குள் காலை விட்ட அமெரிக்கா, இப்போது நிற்கவும் முடியாமல், மீளவும் முடியாமல் அந்தரிப்பது போன்ற நிலையைத்தான் "சமாதானத்துக்கான யுத்தம்' என்ற விபரீதக் கொள்கைப் போக்கும் உருவாக்கும் என்பது திண் ணம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு முன்னர் ஆட்சியிலிருந்த ஜனாதிபதி சந்திரிகாவின் அரசும் இதேபோன்ற பட்டறி வைத்தான் இவ்வழியில் போய் படித்துக் கொண்டது என்பதும் அவரது அரசில் இடம்பெற்றிருந்த ஜனாதிபதி மஹிந்தருக்கும் அவரது அணியினருக்கும் தெரியாத விடயமுமல்ல.

அரசுத் தரப்பும் புலிகள் தரப்பும் இப்போது வெளிப்படுத்தி வரும் அரசியல், இராணுவக் கருத்துகள் இரண்டு தரப்புகளுமே விரைவில் முழு அளவில் யுத்தத்துக்குள் மூழ்குவர் என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவனவாகவே இருக்கின்றன. சமாதான நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகள் அருகி, முற்றாக அற் றுப்போய் விட்டன.

இதற்கு அடிப்படைக் காரணம் அமைதி முயற்சிகளை இந்த இரண்டு தரப்பும் அணுகும் முறையும் போக்கும்தான்.

இவ்விவகாரத்தில், இலங்கை அரசு தன்னை சட்டரீதியான, உயர் அதிகார பீடமாகக் கருதி அதில் இறுமாப்பை வெளிப்படுத்தி நிற்கின்றது. புலிகளை அது சட்ட விரோதப் புரட்சிகர அமைப்பாக நோக்குகின்றது. சமத்துவ நோக்கில் புலிகளைப் பார்க்க அது அடி யோடு மறுக்கின்றது. தன்னை உயர் நிலையில் நிறுத்தி, புலி களைத் தாழ்த்தப்பட்ட தரப்பாகவே பார்க்கிறது.

ஆனால் புலிகளோ தன்மானமுடைய தமிழர் தேசத்தின் அதி காரமிக்க பிரதிநிதிகளாகத் தங்களை வெளிப்படுத்தி, அந்த அந்தஸ்துடனும், சமத்துவத் தகைமையுடனும்தான் சமாதான நடவடிக்கைகளில் கலந்து கொள்ள முடியும் என்ற பிடிவாதத் தில் நிற்கின்றார்கள். இரு தேசங்கள் மத்தியிலான யுத்தத்தில் சமவலு வுடைய சமத்துவமான போரிடும் தரப்பாகவும், ஒரு தேச விடு தலை இயக்கத்தின் தனித்துவமான தலைமைத்துவமாகவும் தம்மை உயர்நிலையில் நிறுத்தி, இலங்கை அரசுடன் சம பங் காளியாக சம தரப்பாக அமர்ந்துதான் அமைதி முயற்சிகளில் ஈடுபட முடியும் என்பதில் உறுதியாக நிற்கின்றார்கள் அவர்கள். இலங்கை அரசின் சமச்சீரற்ற அணுகுமுறைக்கும், ஆணவப் போக் குக்கும் அடிபணியும் விட்டுக் கொடுப்பில் புலிகள் இல்லை.

இப்படி ஒரு தரப்பை மற்றத் தரப்பு பகை முரண்பாட்டுடன் இனம் கண்டு, அதனையே நடைமுறையில் பின்பற்றுவதில் தீர்க்கமாக இருக்கும்போது, விரோதமும் குரோதமுமே நீடிக்கும். நல்லிணக்கத்துக்கும் சமரசத்துக்கும் வாய்ப்பே இருக்காது.

புலிகளைப் பலவீனப்படுத்தி, மண்டியிடச் செய்தபின்னர் சமரசத்துக்கு இணங்க வைக்கலாம் என்ற தென்னிலங்கைக் கனவு கூட இந்த அடிப்படையில் எழுந்திருப்பதுதான்.

நன்றி - உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.