Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிள்ளையானால் பாராளுமன்றம் சென்று என்ன செய்ய முடியும்? அம்பிட்டிய சுமணரத்தன தேரர் கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையானால் பாராளுமன்றம் சென்று என்ன செய்ய முடியும்? அம்பிட்டிய சுமணரத்தன தேரர் கேள்வி

July 25, 2020

கனகராசா சரவணன்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையானுக்கு எதிராக சாட்டப்பட்ட குற்றங்களும் அதற்கான வழக்குகளும் இருப்பதால் கபினற் அமைச்சர் பதவியில் அமர முடியாது. எனவே அவர் பாராளுமன்றம் சென்று செய்யக் கூடியது என்ன ? என மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாராதிபதியும் சுயேச்சைக் குழு 22 வேட்பாளருமான அம்பிட்டிய சுமணரத்தன தேரர் தெரிவித்தார்.

sumana-thero-00.png

 

மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரையில் இன்று சனிக்கிழமை தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

2020 பொது தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் இன்னும் சல தினங்கள் உள்ள நிலையில் 30 வருட யுத்ததின் பிற்பாடு இம் மக்கள் கடந்து வந்த இன்னல்கள் தொடர்பாக பாராளுமன்ற சிங்கள ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளக் கூடிய சிங்கள மொழியில் கூறி மக்களுக்கு சரியான தீர்வை வழங்க வேண்டும் என முயற்சி செய்து கொண்டிருப்பேன்.

தொல்பொருள் செயலணி தொடர்பாக மனவேதனையடைகின்றேன். இந்த நாட்டில் ஆட்சி செய்கின்றவர்களும் செய்ய இருப்பவர்களும் நான் பாராளுமன்றம் செல்வதில் பயத்தில் இருக்கின்றனா. காரணம் இந்த மக்களுக்கு உள்ள பிரச்சனைகளை அவர்கள் மொழியில் நான் எடுத்துக் கூறும்போது பாராளுமன்றம் சென்றவர்கள் இதுவரையும் செய்யாதையிட்டு அவர்கள் வெக்கப்படுவார்கள், அரசியலில் மட்டுமல்ல நிர்வாகத்துறையில் இருப்பவர்களும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடந்த 4 வருடங்கள் இருந்து இந்த மக்களுக்கு என்ன செய்தார் என்பதை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

அவர் ஊயிர்த ஞாயிறு குண்டுவெடிப்பில் தற்கொலை குண்டுதாரியின் தலையை இந்து மயானத்தில் புதைத்தவர். அரசாங்க அதிபர் என்ற முறையில் தனது பிரதேசத்தில் செய்துவிட்டு தேர்தலில் நின்று இம் மக்களிடம் வாக்கு கேட்பது வெக்கமில்லை என எனக்கு தெரியவில்லை.

 

http://thinakkural.lk/article/57871

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

இம் மக்கள் கடந்து வந்த இன்னல்கள் தொடர்பாக பாராளுமன்ற சிங்கள ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளக் கூடிய சிங்கள மொழியில் கூறி மக்களுக்கு சரியான தீர்வை வழங்க வேண்டும் என முயற்சி செய்து கொண்டிருப்பேன்.

அட இவ்வளவுதானா?  இவ்வளவு காலமும் தமிழர் பிரச்சனையை தீராதற்கு காரணம்: இவர்கள் சொல்வது அவர்களுக்கு தங்கள் மொழியில்  புரியாததே காரணமாம். சுமந்திரனுக்கும் சிங்களம் தெரியாதாம் அல்லவே. சிங்களம் தெரிந்த வேடபாளர்களை தெரிவு செய்யுங்கள் மக்களே! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.