Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசியத்தை சிதைக்க சிங்கள தேசம் முயற்சி – ஜனநாயக போராளிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியத்தை சிதைக்க சிங்கள தேசம் முயற்சி – ஜனநாயக போராளிகள்

DSCN2277-1.jpg?189db0&189db0

தமிழ்த்தேசியத்தைச் சிதைப்பதற்கான அத்தனை நாசகார வேலைகளையும் முடுக்கி விட்டு சிங்கள தேசம் காத்திருக்கிறது. அவர்களுக்கு பேரதிர்ச்சியினை ஏற்படுத்தும் வகையில் தமிழர்களது வாக்குப்பலத்தினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை வெற்றி பெற ஒன்றிணைந்து செயல்படுங்கள் என ஜனநாயகப் போராளிகள் கட்சி குறிப்பிட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவளிக்கும் வகையில் ஜனநாயகப் போராளிகள் கட்சியினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,

“பேரினவாத சிந்தனைக்குள் திளைத்துப்போன சிங்கள ஆட்சியாளர்கள் இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னர் தமது ஆட்சி அதிகாரங்களை தக்கவைத்துக் கொள்வதற்காக அதுவரை ஒன்றுபட்டிருந்த தமிழ் சிங்கள இனங்களிடையே மொழிவாதம் இனவாதங்களை தூண்டி தமிழர்களை சிங்கள மக்களிற்கு பிரிவினையாளர்களாகக் காட்டி தமிழர்களுக்கெதிராக போர்ப்பிரகடனம் செய்தது. மூன்று தசாப்தங்களாக நீடித்த பெரும் போர்களினால் மனிதப்பேரழிவுகளுடனும் ஆறாத ரணங்களுடனும் போர் முடிவுக்கு வந்தாயிற்று.

யுத்தம் நடைபெற்ற காலங்களில் சர்வதேச தலையீடுகளுடன் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் பேசப்பட்டன சில இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டிருந்தன சடுதியாக முடித்து வைக்கப்பட்டிருந்த ஆயுதப்போர் தமிழர்களின் பேரம் பேசும் பலத்தினை இல்லாமல் செய்துவிட்டது.

இன்றைய சூழ்நிலையில் தமிழர்கள் ஒன்றுபட்ட தரப்பாக ஓரணியில் திரள்வதே மீளவும் பேரம் பேசும் சக்தியினை தலைமைகளுக்கு ஏற்படுத்தும். எமது எதிர்கால சந்ததிகள் தமது சொந்த நிலத்தில் கௌரவமாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்கு வழியேற்படும்.

இந்த தேர்தலிலே தமிழர்களது அரசியல் பலத்தினை உடைத்து எங்களை ஒரு பலவீனமான சமூகமாக உலகிற்குக்காட்டி ஒரு அரைகுறைத்தீர்வினை தமிழர்கள் மீது திணிக்க சிங்களதேசம் கங்கனம் கட்டிநிற்கின்றது அதற்காகவே அபிவிருத்தி என்றும். அமைச்சர்கள் என்றும் தாங்கள் தான் மாற்று அணி என்றும் மாபெரும் நடிகர்களும் துணை நடிகர்களும் நாடக நடிகர்களும் தமிழர் தேசமெங்கும் திருவிழாக்கால மணிக்கடைகளை நிறுவியிருக்கிறார்கள்.

அன்பான தமிழ் உறவுகளே, தேர்தல் கால திருவிழா வீதி நாடகங்களை பாருங்கள் ரசியுங்கள். தேர்தல் முடிந்தவுடன் அவர்களும் வீட்டுக்குத்தான் செல்லப்போகிறார்கள் என்பதனை மறந்து விட வேண்டாம்.

எமது இனத்தின் தன்மான இருப்பிற்காக ஆயுதமேந்தியவர்கள் என்கின்ற உரித்தோடு கூறிக்கொள்கிறோம் தமிழ்த்தேசியகூட்டமைப்பு தலைவரால் தமிழ்மக்களது எதிர்கால அரசியல் இருப்புக்காக உருவாக்கப்பட்டது. மிகவும் கவனத்துடனும், தூரநோக்கோடும் அது உருவாக்கப்பட்டது. தமிழர்களது உரிமைசார் விடயங்களில் விட்டுக்கொடுப்பில்லாத இந்த இறுக்கமான தமிழ்த்தேசியப் பலம்தான் காலத்திற்குக்காலம் கூட்டமைப்புக்குள் இருந்து பலவீனமானவர்கள் பிரித்தெடுக்கப்படுகிறார்கள். இருந்தும் அவர்களை எமது மக்கள் மிகத்தெளிவாக இனங்கண்டு தோற்கடித்து விடுகிறார்கள்.

இத்தரப்புக்கள் தாம் தோற்கடிக்கப்படுவோம் என தெரிந்தும் தேர்தலில் போட்டியிடுவது தமது எஜமானர்களின் ஏவல்படி தமிழர் வாக்குகளை சிதைப்பதற்கே.

அன்பான இளையோர்களே உங்களை காலம் ஒரு வரலாற்றுக் கடமைக்காக அழைத்து நிற்கின்றது. தமிழர் பகுதிகளில் தேர்தல் தினத்திலன்று அதி உச்ச வாக்குப்பதிவினை ஏற்படுத்த உங்கள் பகுதி மக்களைத் தயார்ப்படுத்துங்கள் அவர்களுக்குத் தேர்தலின் முக்கியத்துவத்தினை உணர்த்துங்கள். வாக்களிக்க நாம் தவறுவோமானால் சந்திக்கப்போகும் விளைவுகளை எடுத்து கூறுங்கள். துணிந்து நில்லுங்கள். எமது மண்ணில் ஏனைய இனத்தவர்கள் எங்களின் மீது ஆட்சிசெய்கின்ற இழி நிலையிலிருந்து நாம் மீள வேண்டுமாயின் உச்ச வாக்களிப்பு அவசியமாகிறது.

தமிழ்த்தேசியத்தை சிதைப்பதற்கான அத்தனை நாசகார வேலைகளையும் முடித்து விட்டு சிங்களதேசம் காத்திருக்கிறது. அவர்களுக்கு பேரதிர்ச்சியினை ஏற்படுத்தும் வகையில் தமிழர்களது வாக்குப்பலத்தினால் தமிழ்த்தேசியகூட்டமைப்பினை வெற்றி பெற ஒன்றிணைந்து செயல்படுங்கள்.

இறுதியாக எமது அன்பான மக்களே, தலைவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை உருவாக்கியது அரசியல்வாதிகளை நம்பியல்ல அவர் ஒவ்வொரு தமிழ் மக்களையும் நம்பினார். தனது போராளிகளை நம்பினார் அவர்கள் தனது முடிவினை பலப்படுத்துவார்கள் என்பது தலைவருக்கும் நன்கு தெரியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (150)

https://newuthayan.com/தமிழ்-தேசியத்தை-சிதைக்க/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.