Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளின் உலகளாவிய வலையமைப்பை ஒடுக்குவதற்கு சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்பு அவசியமாகும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் உலகளாவிய வலையமைப்பை ஒடுக்குவதற்கு சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்பு அவசியமாகும்

வீரகேசரி நாளேடு

தமிழீழ விடுதலைப் புலிகளின் உலகளாவிய வலையமைப்பை ஒடுக்க சர்வதேச ரீதியான ஒத்துழைப்பு அவசியமாகும். அவர்களுக்குக் கிடைக்கும் ஆயுத மற்றும் நிதி உதவிகள் பிரிவினைவாத வன்முறைகளை அதிகரிக்கச் செய்துள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கூறியுள்ளார்.

இவற்றை அவர்கள் பல்வேறு துறைமுகங்களைக் கடந்து இலங்கைக்குக் கொண்டு வந்து சேர்க்கின்றனர். இதன்பொருட்டு ஏற்றும் துறைமுகம், இறக்கும் துறைமுகம், போக்குவரத்துத் துறைமுகம் என்பவற்றைப் பயன்படுத்துகின்றனர். சில சந்தர்ப்பங்களில் கொள்கலன்களில் கொண்டுவந்து சேர்க்கின்றனர் என்றும் அவர் சொன்னார்.

இந்த தொடர் உதவிகளை ஒடுக்க சர்வதேச, இருதரப்பு உதவிகள் அவசியம். 1983 ஆம் ஆண்டுக்குப் பின்னர், நாட்டுப் பிரிவினை தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டு வரும் வன்முறைகள் காரணமாக 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமீழீழ விடுதலைப் புலிகள் பல்வேறு நாடுகளின் கொடிகளின் கீழ் இராணுவ ஆயுதங்களைக் கடத்தி வருகின்றனர். எனவே, சர்வதேச நாடுகள் இவ்விடயத்தில் மிகவும் விழிப்பாக நடந்துகொள்ள வேண்டும் என்று கூறிய அவர், புலிகள் உலகளாவிய வலையமைப்பைக் கொண்டுள்ளதுடன், 54 நாடுகளில் அரசியல் அலுவலகங்களையும் கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடமிருந்து மில்லியன் கணக்கான டொலர்களை அவர்கள் புறட்டுகின்றனர் என்றும் குறிப்பிட்டார். சிங்கப்பூரில் நடைபெற்ற பிராந்திய பாதுகாப்ப> மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர் கூறுகையில்,

இந்து சமுத்திரத்தின் கப்பல் போக்குவரத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அச்சுறுத்தலாக உள்ளனர். உலகில் கடல் ஆதிக்கத்தைக் கொண்டிருக்கம் பயங்கரவாத அமைப்புக்களில் விடுதலைப் புலிகளும் அடங்குவர். எனவே, புலிகளின் செயற்பாடுகளைத் தடுப்பதற்கு சர்வதேச ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

புலிகளுக்கு தனியான கடற் போக்குவரத்து உண்டு. பல்வேறு நாடுகளின் கொடிகளைப் பயண்படுத்தி கப்பல்கள் மூலமாக வணிகமும் ஆயுதத் தளவாடங்களைக் கடத்தவும் செய்கின்றனர். அத்துடன், இந்த வளங்களைப் பயன்படுத்தி பல்வேறு கடல் வழித் தாக்குதல்களையும் புலிகள் மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் விடுதலைப் புலிகள் சர்வதேச கடல் போக்குவரத்துக்கு அச்சிறுத்தலாக உள்ளனர் என்பது தெளிவாகிறது. இந்திய மீனவர்கள் கடத்தப்பட்டமை, மாலைதீவு கடற்பகுதியில் படகு தாக்கியழிக்கப்பட்டமை என்பவற்றை வைத்துப் பார்க்குமிடத்து,

விடுதலைப் புலிகள் இலங்கைக்கு மட்டுமல்லாது, இந்தியா மற்றும் மாலைதீவுக்கும் அச்சுறுத்தலாகவே உள்ளனர். இது இந்து சமுத்திரத்தின் கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலானது. சர்வதேச சமூகம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.