Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழர்களின் எதிர்பார்ப்புகளை வெற்றிகொள்ள ஒற்றுமையாக பயணிக்கவேண்டும் – சார்ள்ஸ் நிர்மலநாதன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழர்களின் எதிர்பார்ப்புகளை வெற்றிகொள்ள ஒற்றுமையாக பயணிக்கவேண்டும் – சார்ள்ஸ் நிர்மலநாதன்

spacer.png
கூட்டமைப்பானது கடந்த தேர்தலில் 16 ஆசனங்களை பெற்றுக்கொண்ட நிலையில் இம்முறை 10 ஆசனங்களையே பெற்றுள்ளது. வன்னியில் கூட ஒரு ஆசனத்தை இம்முறை நாம் இழந்திருக்கின்றோம்.இந்த தேர்தலில் ஆட்சியாளர்கள் அதிகாரபலம் மற்றும் பணபலம் எனபவற்றை பயன்படுத்தியிருந்தார்கள். அதனை விட எம்மவர்கள் பிரிந்து நின்று இந்த தேர்தலை சந்தித்தார்கள். இப்படியான சூழலிலும் கூட்டமைப்பிற்கு வாக்களித்த அனைத்து தமிழ் உறவுகளிற்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.அத்துடன் வடக்கு- கிழக்கில் தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழர்களின் அரசியல் விடிவிற்காக இணைந்து பயணிக்கவேண்டும் என்பது எனது விருப்பம். அந்த ஒற்றுமையை நான் எதிர்பார்த்து நிற்கின்றேன் என மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தலில் ஆட்சியாளர்கள் அதிகாரபலம் மற்றும் பணபலம் எனபவற்றை பயன்படுத்தியிருந்தார்கள். அதனை விட எம்மவர்கள் பிரிந்து நின்று இந்த தேர்தலை சந்தித்தார்கள். இப்படியான சூழலிலும் கூட்டமைப்பிற்கு வாக்களித்த அனைத்து தமிழ் உறவுகளிற்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.இம்முறை தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் தேசிய கட்சிகளிற்கு அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. அது ஏன் என்பதை எம்மால் இன்னும் ஊகிக்க முடியவில்லை.

எமது கட்டமைப்புகளை சிதைப்பதற்கு அவர்கள் தயாராக இருக்கின்ற நிலையில் சிலர் ஏன் இவ்வாறான மனநிலையில் இருந்தார்கள் என்பது வேதனையான விடயமாக இருக்கின்றது.எமக்கு ஏற்ப்படக்கூடிய நெருக்கடிகளை நாங்கள் புரிந்துகொள்ளாத நிலையில் இருந்திருக்கிறோம். கடந்ததேர்தலில் எனக்கு கிடைத்த விருப்புவாக்குகள் கூட இம்முறை குறைந்தே காணப்படுகின்றது. எனவே தேர்தல் முடிவை ஒரு பாடமாகவே நான் எடுத்துக்கொண்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.(15)
 

http://www.samakalam.com/செய்திகள்/தமிழ்-நாடாளுமன்ற-உறுப்ப/

 

  • கருத்துக்கள உறவுகள்

நடந்து முடிந்த தேர்தலில் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் யார் வென்றாலும் அதை தன் பக்க வெற்றியாக்கி, ஜெனிவாவில் இவர்களை வைத்து, கோத்தா மனிதாபிமானி, நாட்டின் பொக்கிஷம். தமிழர் நாங்கள் கோத்தாவுடன் சேர்ந்து எங்கள் பிரச்சனையை எங்கள் நாட்டுக்குள்ளேயே பேசித் தீர்த்துக்கொள்கிறோம் என்று சொல்லவைத்து, தனது கோரச்சடடையை கழற்றி, சுத்தமாக்கி சர்வதேசத்தின் பிடியில் இருந்து விலகி, வாழ்நாளெல்லாம் கோரத் தாண்டவம் ஆடவே தன் தரகர் எல்லோருக்கும் அள்ளி இறைத்து முழு மூச்சாக வேலை செய்தார்கள். த. தே .கூட்டமைப்பு உட்பட இந்த நிகழ்ச்சி நிரலின்படியே உழைத்தது. ஆனால் கடைசியில் தன்னை தோல்வி அடைந்ததாகக் காட்டி இந்த விளைவுகளுக்கு தான் காரணம் இல்லை, மக்கள் தங்களை நிராகரித்தால் ஏற்பட்ட விளைவு. அதற்கு மக்களும் வாக்கு பெற்ற கட்சிகளுமே காரணம் என்று கைகழுவுதலுக்கு தயாரானது. சுமந்திரனின் சிங்களத்திலான பேட்டியுடன்மக்கள் வெளிப்படையாகவே த. தே. கூட்டணிக்கு எச்சரிக்கை கொடுத்திருந்தார்கள். சுமந்திரன் கட்சியில் இருந்து வெளியேற்றப்படாவிட்டால் கட்சிக்கு வாக்களிக்க மாட்டோம் என்று. மக்களின் ஆணையை மதிப்பவராக இருந்திருந்தால், சம்பந்தன் செய்திருக்க வேண்டிய முதல் வேலை சுமந்திரனை வீட்டை விட்டு வெளியேற்றியிருக்க வேண்டும். ஏன் அதை செய்யவில்லை? அவர் வேண்டுமென்றே இந்தத் தோல்வியை எதிர்பார்த்து சன்மானம் பெற்றிருப்பார் எஜமானிடம். சிங்களத்தின் திட்டத்துக்காய் கருமமாற்றிக்கொண்டு, வருகிற தீபாவளிக்கு தீர்வு, வருகிற பொங்கலுக்கு தீர்வு என்று மக்களைஏமாற்றியது சுத்த அயோக்கியத்தனம். த.தே. கூட்டமைப்பு எனும் தேரை குடை சாய்த்த சாரதி சுமந்திரன் ஒட்டுக்குழுவுக்கு தலைமையேற்று ஜெனிவா சென்று சிங்களத்துக்கு வக்காலத்து வாங்கி தமிழரின் எதிர்பார்ப்புகளுக்கு சாவுமணி அடிப்பார். இங்கு ஒருவர்;  இனிமேல் தமிழ்த்தேசியம் இல்லை, எல்லாம் சிங்களமயமாகப்போகுது என சந்தோஷப்படுகிறார். வேறொருவர் எல்லா சுத்துமாத்துகளையும் மதம் என்கிற போர்வையால் இழுத்து மூட முயற்சிக்கிறார். சிங்களத்தோடு கலந்து, அதுவே பாக்கியம் என்று கருதுபவர்களுக்கும், வெளிநாடே போதும் வாழ்பவர்களுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. ஒரு விழுந்த இனத்தைப் பார்த்து விழுத்திய இனம் மட்டுமே சிரிக்கும். இங்கு விழுந்த இனமே தான் விழுதப்பட்டதை நினைத்து கிண்டலும், கேலியும், கோபமூட்டலும் செய்து தன்னைத் தாழ்த்தி ரசிக்குது. தொடர்ந்து இழப்புகளையும், சேதங்களையும் சந்தித்து விடுதலை பெறுவோம் என்கிற நம்பிக்கையோடு இருந்த மக்களுக்கு இவர்களின் துரோகம் வேதனையே மிச்சம். எனது இந்தப் பதிவைப்பார்த்து பலர், பாவம் இயலாத் தன்மையில் புலம்புது என்று தங்கள் தகுதிக்கேற்ப பரிகசிப்பார்கள், எமது வலி தெரியாதவர்கள். மூழ்க இருந்த கூட்டமைப்பை கரைசேர்க்க வந்த விக்கினேஸ்வரன், தன் பெயரை இழந்து கேலிக்கு இலக்காகி இருக்கிறார். முழுதுமாக மூழ்கி தடம் தெரியாமல் இருக்கும் மக்களை மீட்கவெளிக்கிட்டிருக்கிறார். "கட்டுவோர் விலக்கிய கல்லே கட்டடத்தின் மூலைக்கு முதன்மைக் கல்லாய் அமைந்ததாம்."  இவரை வெறுப்பேற்றி, ஒதுங்கச் செய்வதற்கு சிங்களமும், நம்மாட்களும் முழுமூச்சாய் செயற்படுவார்கள் என்பது கடந்தகால அனுபவம். ஆனால் தவறுகளுக்கு எதிர்ப்பை காட்டுவார், அதற்கு எல்லாமுயற்சிகளையும் தடுக்கிறார் என்று கோஷம் போடுவார்கள். பொருத்து வீடுகளை தடுத்தார் என்கிறார்கள். அதனால் மக்களுக்கு வரும் உடல்நல பிரச்சனைகள் எத்தனை பேருக்கு தெரியும், அல்லது அதைப்பற்றி கவலைப்படிருப்பார்கள். அது நீண்ட கால பயனற்றது. பயனற்றுப்போகும்போது சுற்றுச் சூழல் பிரச்சனை மற்றொன்று. அதைவிட ஓலைக் குடிசையில் வாழ்வது ஆரோக்கியமானது. ஏன் இந்தப் பொருத்து வீடுகளை சிங்கள மத்தியில் செயற்படுத்தவில்லை? அங்கும் வீடற்றவர்கள் இருக்கிறார்களே. வாழும் மக்கள் தங்களுக்கு எது பொருத்தமோ அதை தெரிவு செய்ய இடமளிக்கப் படவில்லை. இப்படி ஏக்குப்போக்கான திட்டங்களை, தடுப்பார்கள் என்று தெரிந்து கொண்டும்  அறிமுகம்  செய்வார்கள். தடுத்தால் அதைவிட மோசமான திட்டத்தை அறிவிப்பார்கள். எமக்கு வேண்டியதை தர மாட்டார்கள். தமிழ் மக்களின் ஆதரவில்லாமல் அரசமைக்க முடியும் என்று சவால் விட்ட மஹிந்தா தன் தரகர் மூலம் ஏன் எம்மிடம் வாக்கு கேட்டார்? இப்போ, தமிழ் மக்கள் எனக்கு வாக்கு போட்டு என்னை வரவேற்றிருக்கிறார்கள் என்கிறார். மக்கள் ஏன் அவருக்கு வாக்கு போட்டார்கள்? செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டாரா? வருந்தினாரா? ஆண்டாண்டு காலம் சிறையில் இருக்கும் இளைஞரை விடுவித்தாரா? தெருவில் உறவுகளை தேடியலையும் மக்களுக்கு ஆறுதல் சொன்னாரா? எதுக்கு இருக்கு வாக்கு போட்டார்கள்? எங்கள் அரசியல் வாதிகளால் ஏமாற்றப்பட்டவர்கள் உங்கள் தரகர் போட்ட பிச்சைக்கு விலை போனார்கள். கஜேந்திரன் பொன்னம்பலம் என்ன முடிவு எடுப்பார்? என்று இப்போ  எதுவும்  சொல்ல முடியாது. சாய்வாரா? சாய்க்கப்படுவாரா? காலம் ஒருவரை தலைவராக்கும், ஆக்காமலும் போகும். புலம் பெயர்ந்தவர்கள் குழி பறிப்புகளை, தவிர்த்து  ஒற்றுமையாக தமிழை வளர்க்க முயற்சியுங்கள். உங்கள் பிள்ளைகளின் காலத்தில் ஈழத்தில் தமிழர் வாழ்ந்த தடையமேஇல்லாமற் போகலாம்.  ஆனால் எங்களைப்போல் அடக்கி ஒழிக்கப்படும் இனங்களுக்காக குரல் எழுப்பவாவது எங்கள் வரலாற்றை  சொல்லிக்கொடுங்கள். தமிழ் இனி மெல்லச் சாகாது, எவ்வளவு விரைவாய் சாகடிக்கப்பட முடியுமோ, அவ்வளவு விரைவாய் செத்துவிடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.