Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வட, கிழக்கை தனிமொழி மாநிலமாக ஏற்றுக்கொள்வது இனப் பிரச்சினை தீர்வுக்கான அடிப்படைத் தேவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வட, கிழக்கை தனிமொழி மாநிலமாக ஏற்றுக்கொள்வது இனப் பிரச்சினை தீர்வுக்கான அடிப்படைத் தேவை

[04 - June - 2007]

* தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. ஸ்ரீகாந்தா

இந்தியாவை பின்பற்றி வடக்கு, கிழக்கு மாகாணத்தை அங்குள்ள சிங்கள சிறுபான்மை மக்களும் சகல உரிமைகளோடு வாழக்கூடிய விதத்தில் தனிமொழி மாநிலமாக ஏற்றுக் கொள்ள வேண்டியது இனப் பிரச்சினை தீர்வுக்கான அடிப்படை தேவையென்பதை பெரும்பான்மையினக் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என். ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மாகாண சபைகள் தொடர்பான பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

மாகாண சபைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்தப் பிரேரணை தொடர்பாக எமது மக்களுக்குப் பெரிதாக அக்கறை கிடையாது. ஏனென்றால், மாகாண சபைகள் திட்டத்தின் கீழ் பெறக்கூடிய எந்தவோர் பலாபலனையும் எமது வடக்கு, கிழக்கு மாகாணத்தில் எமது மக்களின் பாரம்பரிய பிரதேசத்தில் யுத்தமொன்று மீண்டும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற பின்னணியில் எமது மக்கள் பெற்றுக் கொள்ளக் கூடிய நிலை திட்டவட்டமாக இல்லை.

காலஞ்சென்ற ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சிக்காலத்தில் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம், 1988 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட மாகாண சபைகள் திட்டத்தின் கீழ், 18 வருடங்களாக ஒரே மாகாணமாக- ஒரே அலகாக- இணைக்கப்பட்டிருந்த வடக்கு- கிழக்கு மாகாணங்கள், எமது தமிழ் தேசிய இனத்தின் வரலாற்றுத் தாயகம் என்று நாங்கள் மாத்திரமல்ல சர்வதேச ரீதியில் உண்மைக்கு மதிப்பளிக்கின்ற சகலராலும் எந்தவித சந்தேகத்துக்குமிடமின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்ற அந்தப் பிரதேசம் கடந்த வருடம் பிற்பகுதியில் இந்த நாட்டின் உயர் நீதிமன்றம் சட்ட நுணுக்கங்களைக் கருத்தில் கொண்டு அளித்த தீர்ப்பின் பிரகாரம், இரண்டு தனித்தனி மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்ற விடயமானது எமது மக்களைப் பொறுத்தவரையில் மிகப் பாரதூரமான ஒரு விடயமாகும்.

மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கின்ற சர்வகட்சி மாநாட்டின் முன்னால் ஆளும் அரசாங்கக் கூட்டணியின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மாவட்டங்களை மாத்திரம் அலகுகளாகக் கொண்டு பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்ற அரசியல் பின்னணியில் எமது மக்களைப் பொறுத்தமட்டில் அரசியல் தீர்வென்று அரசாங்கமும் சரி அல்லது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் சரி அல்லது இன்று தென்னிலங்கையில் மூன்றாவது சக்தியாக கருதப்படுகின்ற `ஜனதா விமுக்தி பெரமுன'வும் சரி எந்தக் கருத்துகளை அல்லது திட்டங்களை முன்வைத்தாலும் கூட எமது மக்கள் ஓர் அடிப்படையான விடயத்தை இந்தக் கட்சிகளிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள்.

இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்று நீங்கள் எவராவது பேசுகின்ற பொழுதிலும் கூட, இலங்கை என்கின்ற இந்த அழகிய தீவு ஒரே நாடாக இருக்க வேண்டும்; இருக்க முடியும் என்ற அடிப்படையில்தான் நீங்கள் பேசுகிறீர்கள் என்பதை நாங்கள் நன்கு அறிவோம்.

இலங்கை ஒரே நாடு என்று நீங்கள் கருதுகின்றபொழுது அந்த அடிப்படையிலே நீங்கள் பிரேரணைகளை அல்லது யோசனைகளை முன்வைக்கின்றபொழுது ஒன்றுபட்ட அந்த நாட்டிலே எமது மரபுவழிப் பிரதேசம், எமது மக்கள் வரலாற்று ரீதியாகத் தொடர்ந்து வாழ்ந்து வருகின்ற பிரதேசம், தமிழ்த் தேசிய இனம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மொழி ரீதியாக வாழையடி வாழையாக வாழ்ந்து வருகின்ற பிரதேசமாகக் கருதப்படுகின்ற பிரதேசம், கொள்ளப்படுகின்ற பிரதேசம், ஒரே அலகாக ஆங்கிலத்திலே சொல்வதானால் ஒரே யுனிட்டாக இருக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்கின்ற விடயத்தை நீங்கள் தயவு செய்து மறந்துவிடக்கூடாது.

இன்றைக்கு எதற்கு எடுத்தாலும் இந்தியாவைப் பற்றிப் பேசுகிறார்கள். இந்தியாவைப் பற்றி பேசுகின்ற எந்தவோர் அரசியல்வாதியைப் பார்த்தும் நாங்கள் கூற விரும்புவது எல்லாம் இந்தியாவினுடைய அரசியலைப் பற்றி உங்களுக்கு அடிப்படை அரசியல் ஞானம் இருக்குமாக இருந்தால் நீங்கள் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது, அந்த நாட்டிலே மொழி ரீதியான மாநிலங்களின் அடிப்படையில்தான் அதிகாரப் பரவலாக்கல் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அங்கு குஜராத் மொழி பேசுகின்ற மக்களுக்கென குஜராத் ஒரு தனி மாநிலமாக இருக்கின்றது. தெலுங்கு மொழி பேசுகின்றவர்களுக்கு ஆந்திரா. கன்னட மொழி பேசுகின்றவர்களுக்கு கர்நாடகம். தமிழ்மொழி பேசுகின்றவர்களுக்கு தமிழ்நாடு. அஸ்ஸாம் மொழி பேசுகின்றவர்களுக்கு அஸ்ஸாம். வங்காள மொழி பேசுகின்றவர்களுக்கு மேற்கு வங்காளம். பஞ்சாப் மொழி பேசுகின்றவர்களுக்கு பஞ்சாப். காஷ்மீர் மொழி பேசுகின்றவர்களுக்கு காஷ்மீர். இப்படித்தான் அங்கு மாநிலங்கள் அமைந்திருக்கின்றன. அது மாத்திரமல்ல, அந்த நாட்டிலே ஒரிஸ்ஸா மொழி பேசுகின்றவர்களுக்கு ஒரிஸ்ஸா. மராட்டி மொழி பேசுகின்றவர்களுக்கு மகாராஷ்டிரம் என்ற அடிப்படையிலே அங்கு பல்வேறு மொழிகளைப் பேசுகின்ற மக்களுடைய அரசியல் அபிலாஷைகள் உள்ளடக்கப்பட்ட மாநில ஆட்சிகள் அமைந்திருக்கின்றன.

ஹிந்தி மொழி பேசுகின்ற மக்களைப் பொறுத்தமட்டிலே அவர்களுடைய நிலப்பரப்பைக் கொண்ட எட்டு மாநிலங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதாவது உத்தரப் பிரதேசம் ஹிந்தி மொழி பேசுகின்றவர்களுடைய மாநிலம். மத்திய பிரதேசமும் ஹிந்தி மொழி பேசுகின்றவர்களுடைய மாநிலம். ராஜஸ்தான் ஹிந்தி மொழி பேசுகின்றவர்களை மிகப்பெரும்பான்மையாகக் கொண்ட மாநிலம். ஹரியானாவும் அதேமாதிரி. பீகாரும் அதேமாதிரி. உத்திராஞ்சல் அதேமாதிரி. சட்ரிஸ்கார் அதேமாதிரி. ஹிமாலயப் பிரதேசமும் அதேமாதிரி. அந்த இந்தியத் துணைக் கண்டத்திலே 40 வீதத்தை உள்ளடக்கி இருக்கின்ற ஹிந்தி மொழி பேசுகின்ற பெரும்பான்மை மக்களுக்கு எட்டு மாநிலங்கள் அளிக்கப்பட்டிருக்கின்ற அதேநேரத்திலே, ஏனைய மொழிகளைப் பேசுகின்ற மக்களைப் பொறுத்தமட்டிலே அவர்களுக்கும் அந்தப் பரந்து விரிந்த இந்திய நாட்டு பேரரசின் கீழே மலையாள மக்களுக்கு அமைக்கப்பட்டிருக்கின்ற கேரள மாநிலம் உட்பட தனித்தனி மாநிலங்கள் அளிக்கப்பட்டு அவர்களுடைய அரசியல் அபிலாஷைகள் திருப்திப்படுத்தப்பட்டிருக

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.