Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அசரமாகக் கொண்டுவரப்படும் 20 ஆவது திருத்தம்; அரசாங்கத்தின் உடனடி இலக்கு என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அசரமாகக் கொண்டுவரப்படும் 20 ஆவது திருத்தம்; அரசாங்கத்தின் உடனடி இலக்கு என்ன?

September 5, 2020

20-th.jpgபொதுத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றாக அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான செயற்பாடுகளை அரசாங்கம் முழு வீச்சில் ஆரம்பித்துள்ளது. சட்டமா அதிபரின் அங்கீகாரம் அதற்குக் கிடைத்துள்ள நிலையில், அமைச்சரவையும் அதனை ஏற்றுக்கொண்டு வர்த்தமானியிலும் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த மூன்று வாரங்களுக்குள் இது பாராளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றப்படும் என்பதுதான் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு.

சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கக்கூடிய ஒரு திருத்தம் என 20 ஆவது திருத்தத்தைக் கடுமையாக விமர்சித்திருக்கும் பிரதான எதிர்க்கட்சிகள், அதற்கு எதிராக நீதிமன்றம் செல்வதற்கும் போராட்டங்களை முன்னெடுப்பதற்கும் திட்டமிட்டுள்ளன. எதிர்க்கட்சிகள் என்னதான் போராட்டங்களை நடத்தினாலும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுள்ள பொது ஜன பெரமுன அரசாங்கம் முன்னால் வைத்துள்ள கால்களைப் பின்னால் எடுக்கப்போவதில்லை.

 

20 ஆவது திருத்தம் என்பது அடிப்படையில் ஜனாதிபதிக்கான அதிகாரங்களை வரையறையற்ற முறையில் வழங்குகின்றது. 2015 க்கு முன்னர் அவ்வாறான ஒரு நிலைதான் இருந்தது. ஜனாதிபதியின் அதிகாரங்கள் வரையறையற்றதாக இருந்ததுடன், பாராளுமன்றம் அமைச்சரவை என்பன ‘பொம்மை’யாக இருந்தன. 18 ஆவது திருத்தத்தின் மூலம் தனது அதிகாரங்களை அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்‌ஷ மேலும் அதிகரித்திருந்தார். அது சர்வாதிகார ஆட்சி ஒன்றை உருவாக்கியிருந்த நிலையில்தான், 2015 இல் ஆட்சி மாற்றம் ஒன்றுக்கு மக்கள் வாக்களித்தார்கள்.

 

2015 இல் உருவாகிய ‘நல்லாட்சி’ என்ற பெயரிலான மைத்திரி – ரணில் அரசாங்கம் அதனுடைய முதலாவது செயற்பாடாக 19 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைத்தது. பாராளுமன்றமும் அமைச்சரவையும் பலம்வாய்ந்தவையாக இருந்தன. சுயாதீன ஆணைக்குழுக்களை ஜனாதிபதியினாலோ அரசாங்கத்தினாலோ கட்டப்படுத்த முடியவில்லை. ஜனாதிபதியால் நினைத்தபோது பாராளுமன்றத்தைக் கலைக்க முடியவில்லை. 19 ஆவது திருத்தத்தில் ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும் கூட, அது நாட்டில் ஜனநாயகத்தைப் பலப்படுத்தியது.

 

பொது ஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அதிகாரத்தைக் கைப்பற்றியிருப்பதென்பது தமக்கு ஏற்றவாறு அரசியலமைப்பை மாற்றியமைப்பதற்கு கிடைத்துள்ள சுதந்திரமாகவே அவர்கள் எடுத்துக்கொள்கின்றார்கள். அதனால், அவர்களுக்கு உடனடித் தேவையாகவுள்ளவைகளை 20 ஆம் திருத்தத்தின் மூலமாகப் பெறப்போகின்றார்கள். இரண்டாம் கட்டமாக புதிய அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டுவருவதற்கான முயற்சியிலும் அவர்கள் இறங்கியிருக்கின்றார்கள். அதற்காக நிபுணர்குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

 

ஒக்ரோபர் மாதத்தில் 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதும், அதன்பின்னர் அடுத்த வருட முற்பகுதியில் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதும்தான் அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரல். பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு இருப்பதால், இதனைத் தம்மால் நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உள்ளது. தேவைப்படக்கூடிய ஒரு – இரு எம்.பி.க்களையும் வாங்கிவிட முடியும் எனவும் அவர்கள் நம்புகின்றார்கள். அதில் அவர்களுக்குத் தேவையான அனுபவம் உள்ளது.

 

ஆளும் கட்சியில் 150 உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருக்கின்ற போதிலும், அவர்களில் பெரும்பாலானவர்கள் 19 ஆவது திருத்தம் வந்தபோது அதனையும் ஆரரித்தவர்கள்தான். 2015 முற்பகுதியில் 19 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வாக்களிப்புக்கு விடப்பட்ட போது, ஒரேயொரு உறுப்பினர் மட்டும்தான் அதற்கு எதிராக வாக்களித்தார். தற்போது அரசாங்கத்தில் இருப்பவர்கள், குறிப்பாக மைத்திரி தரப்பில் இருப்பவர்கள் ’19’ ஐ ஆதரித்தார்கள். அதனை இல்லாமல் செய்யும் வகையில் தற்போது கொண்டுவரப்படவுள்ள ’20’ ஐ ஆதரிக்கவும் அவர்கள் தயாராகத்தான் உள்ளார்கள்.

இவர்களிடம் கொள்கைகள் ஏதாவது இருக்குமா? அப்படியானால், ஆட்சியில் உள்ளவர்களுடன் ஒட்டிக்கொண்டிருந்தால் போதும் என்பதுதான் இவர்களுடைய கொள்கையா?

இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டுள்ளவர்களைப் பாராளுமன்றத்துக்குக் கொண்டுவந்து அமைச்சராக்குவதும், ஜனாதிபதிக்கு வரையறையற்ற அதிகாரங்களைக் கொடுப்பதன் மூலம் – பிரதமர், அமைச்சரவை, பாராளுமன்றம், சுயாதீன ஆணைக்குழுக்கள் என்பவற்றை ‘பொம்மைகள்’ ஆக்குவதும்தான் இந்த 20 ஆவது திருத்தத்தின் உடனடி நோக்கம். அதனை ஆதரிக்கப்போகும் எம்.பி.கள் அதனைப் புரிந்துகொண்டுதான் ஆதரிக்கப்போகின்றார்களா அல்லது அதிகாரத்திலிருப்பவர்களுக்கு தமது விசுவாசத்தைக் காட்டுவதற்காக வாக்களிக்கப் போகின்றார்கள?


 

http://thinakkural.lk/article/66465

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.