Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஜினி ஏன் கட்சி ஆரம்பிக்க மாட்டார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5602D66B-82AA-4DB5-971C-DCA9073E442E.jpeg
 

 

நவம்பரில் ரஜினி கட்சி ஆரம்பிப்பது உறுதி எனச் சொல்லிசேனல்கள் விவாதங்கள் நடத்தி வருகின்றன. ரஜினி கட்சிஆரம்பிப்பார் எனச் சொல்லி கால் நூற்றாண்டு கடந்து விட்டது; அப்படிச் சொன்னவர்களுக்கே தாடி, மீசை நரைத்து, தலையெல்லாம் சொட்டையாகி விட்டது. இனியும் ஏன்யாமற்றொரு தலைமுறையை குழப்பறீங்க என காறித்துப்பலாம் தான். ஆனால் அதைவிட முக்கியமாய், இப்போது கட்சி ஆரம்பத்தால்ரஜினிக்கு என்ன பிரச்சனைகளெல்லாம் வரும் எனக் கேட்பதுபயன் தரும்.

 

1) ரஜினிக்கு சமூக அரசியல் ஆர்வமோ பிரக்ஞையோ இல்லை. ஒருங்கிணைப்புத் திறனும் இல்லை. அவர் அரசியலுக்கு ஏற்றவரேஅல்ல. இதை நம்மை விட நன்றாக ரஜினியும் லதாவும் அறிவார்கள். அதனாலே தனக்கு வராத தளத்தில் கால்பதிக்க தயங்குகிறார்.

 

2) தொண்ணூறுகளில் ரஜினி ஜெயாவுக்கு எதிராக சற்று சவுண்டுவிட்டு அது ஓரளவுக்கு திமுக கூட்டணிக்கு தேர்தலில் உதவியதுஎன்னவோ உண்மைதான். ஆனால் உடனே அவர் கோடம்பாக்கம், இயமமலை என ஒதுங்கி விட்டார். அதன் பிறகு தமிழகம் எனஒன்று இருக்கிறதென்றோ, அதைக் காப்பாற்றத் துடிக்கும்ஆண்டவன் இருக்கிறார் என்றோ அவர் மறந்து விட்டார். ஏனென்றால் அவர் சம்பாதிப்பதற்காக இங்கு வந்தவர், வந்தநோக்கத்தை மறந்து அரசியலில் சூதாட அவர் தயாரில்லை.

 

3) கமலுடன் ஒப்பிடுகையில் ரஜினிக்கு சினிமா எனும் கலையின்மீதும் பெரிய அக்கறையோ லட்சிய வேட்கையோ இல்லை. முழுக்க முழுக்க அவருக்கு நடிப்பு ஒரு தொழில்தான். அத்தொழிலுக்குப் பாதகமான எதையும் அவர் இதுவரைசெய்ததில்லை. அதனாலே கமலைப் போன்று கண்ணிவெடியில்கால்வைக்கிற முயற்சிகளில் இறங்கி பெரும்பணத்தை அவர்இழந்ததில்லை, இதுவரை அவர் கடனிலும் மூழ்கியதில்லை. அப்படித்தான் அவர் ஒரு படத்துக்கு 90 கோடி வாங்கும் அளவுக்கு(இது போக, படத்தின் லாபத்திலும் பங்குவாங்குகிறாரா எனத்தெரியவில்லை) இந்தியாவின் உச்ச நட்சத்திர நடிகராக மாறிஇருக்கிறார்.

 

4) ரஜினியின் பலம் அவரது லௌகீகம். சுயநலம். அடைந்தஎதையும் இழந்து விடலாகாதே எனும் கவனம். இதற்குநேர்மாறான ஒரு சித்திரத்தை அவர் ஊடகம் வழியாக உருவாக்கிஉலவ விட்டிருக்கிறார்

 

5) ரஜினியின் நடிப்பு வாழ்வின் இறங்குமுகம் துவங்கி விட்டது. விஜய் சர்க்காரில் நூறு கோடி பெற்று அதிக சம்பளம் பெறும்நடிகராக ரஜினியை வரிசையில் முந்தி விட்டார். இதை வைத்துரஜினி சினிமாவில் இருந்து ஓய்வுபெற்று அரசியல் கட்சிஆரம்பித்து புதிய இன்னிங்ஸை ஆரம்பிப்பார் என சிலர் நம்பினர். ஆனால் ரஜினி எல்லாரையும் விட புத்திசாலி. ஒரு நடிகராக தன்நிறைகுறைகளைத் துல்லியமாக அறிந்தவர் அவர்.

 

6) என்னதான் இறங்குமுகத்தில் இருந்தாலும் இன்னும் 5-8 வருடங்களாவது அவருக்கு சம்பாதிக்க மீதமுள்ளது. அதாவதுஅவரைப் போன்ற 40 வருடங்கள் கோலோச்சிய மாஸ் ஹீரோவின்நடிப்பு வாழ்வின் இறங்குமுகமே பல வருடங்கள் நீடிக்கும். இதனாலே ரஜினி கடந்த சில வருடங்களில் இளம்இயக்குநர்களின் இயக்கத்தில் தொடர்ந்து படங்களாக நடித்துத்தள்ளுகிறார். தன் ஆயுளை நீட்டிப்பதற்காக புதிய விசயங்களைகதைத்தேர்வில் முயன்று பார்க்கிறார். நிறைய உழைக்கிறார். இதையெல்லாம் அரசியலில் இறங்குவதன் மூலம் அவர்கைவிடுவாரா?

 

7) தொண்ணூறுகளில் கூட ரஜினி சாபமிட்ட பிறகு ஜெயலலிதாஆட்சியை இழந்தாலும் திரும்ப வந்த அம்மா அவரைப் பழிவாங்கமுயற்சிக்கவில்லை. அதற்குக் காரணம் ரஜினி யாருக்கும் அரசியல்எதிரி அல்ல, அவருக்கு சொந்தக் கட்சியோ, நேரடி அரசியல்அடையாளமோ இல்லை என்பது. திமுகவுக்கு ஆதரவாககளமிறங்கி லூஸ் டாக் செய்ததற்கு வடிவேலு எப்படியானதண்டனையை அதிமுக வென்றபிறகு அனுபவித்தார் எனஅறிவோம். வடிவேலு போன்ற உச்ச நகைச்சுவை நடிகரை வீட்டில்உட்கார வைக்க இருந்த ஒரே காரணம் அவர் எதிர்க்கட்சிக்காகபிரச்சாரம் செய்தார் என்பது. அரசியல் கட்சி ஆரம்பித்தால்இன்னும் உக்கிரமாக கட்சிகளை சாட வேண்டி இருக்கும். அதுஅதிகாரத் தரப்புடன் பகைமையை உண்டு பண்ணும். ஆக, அரசியல் எனத் தேர்வு செய்து விட்டால் சினிமாவை விட்டு விடவேண்டும். ஒரு திரைக்கலைஞனால் இங்கு அரசாங்கத்தைஎதிர்த்து களமடவே முடியாது. இதுதான் நட்சத்திர நடிகர்கள்பொதுவாக கட்சியில் இணைந்து பங்காற்றத் தயங்குவதற்குக்காரணம்.

 

😎 ரஜினிக்கும் இந்த பயம் இருந்திருக்கும், இருக்கும் - ஒருநிச்சயமற்ற எதிர்காலத்துக்காக நிகழ்காலத்தின் வசதிகளை, அதிகாரத்தை கைவிட அவர் தயாராக மாட்டார். ஒருவேளைஜெயலலிதா, கலைஞர் மறைவுக்குப் பிறகு தனக்கான ஒரு வெளிஉருவாகி விட்டது என அவர் நம்பிக்கை வளர்த்திருக்கலாம். ஆனால் ஆளும் அதிமுகவுக்கும் அவர்களைப் பின்னிருந்துஇயக்கும் பாஜகவுக்கும் தமிழக மக்களிடையே செல்வாக்கில்லைஎன, அடுத்து வருவது திமுக ஆட்சியே எனப் புரிந்து கொண்டநிலையில் அவர் தான் அரசியல் கட்சி ஆரம்பித்தால் அது தன்மொத்த சொத்தையும் விற்று திருப்பதி உண்டியலில் போட்டதுபோலாகும்.

9) ரஜினி என்னதான் இமைய மலை, பனிக்குகைகள், சாமியார்என கனவு கண்டாலும் அவரால் ஏழ்மையில், முற்றும்துறந்தெல்லாம் வாழ முடியாது. பாஜக பின்னிருந்து பணத்தைஇறக்கினாலும் ரஜினியும் செலவு செய்தே ஆக வேண்டும். களமிறங்கினால் அதிமுகவையோ திமுகவோ விமர்சிக்காமல்பிரச்சாரம் செய்ய முடியாது. அப்படி தலைவர்களை மட்டுமல்லகட்சித்தொண்டர்களையும் லட்சக்கணக்கில் பகைக்க நேரிடும். இது பாஜக கூட்டணியில் ஆட்சி அமையாத பட்சத்தில் ரஜினியின்படங்கள் தயாரிக்கப்பட்டு வெளிவருவதில், வெளிவந்தாலும்ஓடுவதில் பெரும் தடங்கல்களை ஏற்படுத்தும். அடுத்த சிலவருடங்கள் நடிக்காமல் இருந்தால், நடித்த படங்கள்வெளியாகாமல் போனால் இதன் விளைவு 500-1000 கோடிகள்நஷ்டமாக இருக்கலாம்

 

10) நவம்பரில் கட்சி ஆரம்பித்து ஆறே மாதங்களில்உள்கட்டமைப்பை நிறுவி, ஊரூராகப் பயணித்து மக்களைசந்தித்து பிரச்சாரம் பண்ணி கட்சியை நிலைப்படுத்தி தேர்தலில்நின்று ... “முதல்வன் படத்தில் மட்டுமே இது சாத்தியம். இருந்தும்ரஜினி அதைத் தள்ளிப்போட்டு என்ன பயன், அரசியலில்இறங்குவதற்கு சாத்தியமில்லாத சூழலை தானேஉருவாக்குவதைத் தவிர. அதாவது, கட்சி ஆரம்பிக்கப் போவதாய்சொல்லி உரையாற்றினாரே அப்போது கூட அவருக்கு சற்றேநம்பிக்கை இருந்திருக்கலாம், ஆனால் இப்போது நிலைமைதலைகீழாகி விட்டது. ரஜினி கட்சி ஆரம்பித்தால் வெற்றிவாய்ப்பு1-10 என இருக்கையில் அவர் அம்முடிவை எடுக்கவே மாட்டார். எடுத்தால் அவரைப் போல பெரிய முட்டாள் வேறில்லை. ரஜினிமுட்டாளில்லை.

 

மாறாக, ரஜினி வரும் சட்டமன்றத் தேர்தலில் பட்டும்படாமல் சிலவேட்பாளர்களை ஆதரித்து அறிக்கை விடுவார். அல்லது சிலகட்சிகளுக்கு மறைமுகமாய் ஆசி வழங்கி பூடகமாய் பேசுவார். தன் கருத்துக்களால் யாரும் புண்படாமல் பார்த்துக் கொள்வார். நிச்சயமாக வெளிப்படையாக பாஜக சார்புநிலையை எடுக்கமாட்டார். பத்திரிகையாளர் சந்திப்பில் பேச மாட்டார். தேர்தல்முடிந்து ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதும் பூங்கொத்துகொடுத்து அவரைப் புகழ்ந்து அறிக்கை வெளியிடுவார் ரஜினி. அதுதான் ரஜினி ஸ்டைல்.

 

http://thiruttusavi.blogspot.com/2020/09/blog-post_5.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.