Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியாவைத் திருப்திப்படுத்துகின்ற இராஜதந்திரம் கொழும்பிடம் இல்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Date: 2007-06-06

இந்தியாவைத் திருப்திப்படுத்துகின்ற இராஜதந்திரம் கொழும்பிடம் இல்லை

தேர்தல் காலத்தில் ஆதரவு தர முன்வரும் தரப்புகளை எல்லாம் வளைத்துப் போடுவதற்காக, அத்தரப்புகள் முன்வைக்கும் நிபந்தனைகள் அனைத்தையும் கொள்கை, கோட்பாடுகள், சித்தாந்தங்கள் பற்றிச் சிந்திக்காமல் ஏற்றுக்கொள்வது போல தலையாட்டி, கையெழுத்திட்டு செப்படி வித்தை காட்டுவது வேறு.

உலகளாவிய ரீதியிலான சர்வதேச அரசியலைக் கையாள்வது வேறு.

அதிகாரத்துக்கு வருவதற்காக ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக எல்லாவற்றுக்கும் தலையாட்டிவிட்டு, அதிகாரத்துக்கு வந்த பின்னர், பழைய வாக்குறுதிகளைக் காற்றோடு பறக்கவிடும் விட்டேத்திப் போக்கு, சர்வதேச அரசியலைக் கையாள உதவப் போவதில்லை என்பது இலங்கையின் அரசுத் தலைவருக்கு இப்போது மெல்ல, மெல்லப் புரிய ஆரம்பித்திருக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஜாதிக ஹெல உறுமயவையும், ஜே. வி. பியையும், அத்தரப்பில் உள்ளடங்கிய தென்னிலங்கை பௌத்த சிங்களப் பேரினவாதக் குழுமத்தையும் தலையாட்டி, கண்ணை மூடிக் கொண்டு ஒப்பந்தம் செய்யவைத்து, வலையில் வீழ்த்தும் உள்ளூர் அரசியல் தந்திரம், இந்தியா போன்ற அயல் வல்லாதிக்க நாடுகளைக் கையாளும் சர்வதேச அரசியல் இராஜதந்திரத்துக்கு பொருந்தியே வரமாட்டாது என்பது ஜனாதிபதி மஹிந்தருக்கு புதுடில்லியால் "நல்ல முறையில்' பாடமாக உணர்த்தப்பட்டிருக்கின்றது என்கின்றன அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாம் இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் மூன்று தடவைகள் புதுடில்லிக்குப் போய் வந்துவிட்டார். ஒவ்வொரு தடவையும் இந்திய அரசின் மூத்த அதிகாரிகளுடன் அவர் விரிவான பேச்சுகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

தவிரவும், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஒரு தடவையும் வெளிவிவகாரச் செயலாளர்கள் இரு தடவைகளும் கொழும்புக்கு வந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பல சுற்றுப் பேச்சுக்களை நடத்தியிருக்கின்றனர்.

இவ்வாறு ஆறு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதி மஹிந்தருடன் தாம் நடத்திய தொடர் பேச்சுகளின் போக்கு, அப் பேச்சுகளில் ஜனாதிபதி மஹிந்தர் பேணிய முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடு, அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவு செய்வதில் அவரது அரசு வெளிப்படுத்திய நம்பகத்தன்மை போன்றவை புதுடில்லியை ஏற்கனவே ஆழ்ந்த அதிருப்திக்குள் மூழ்கடித்திருந்தன என்பது சாடைமாடையாக வெளிப்பட்ட விவகாரம்தான்.

வடக்கு கிழக்கு இணைப்பை உறுதிப்படுத்துதல் உட்பட கணிசமான அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை அரசுத் தரப்பினால் முன்வைப்பது வரையிலான பல்வேறு உறுதிமொழிகள் காலத்துக்குக் காலம் நலிவடைந்து அடிபட்டுச் சென்ற பின்னணியில், இந்திய அதிகார வர்க்கத்தின் சீற்றம் நீறு பூத்த தணலாக அமுங்கிக் கிடந்ததை இராஜதந்திர வட்டாரங்கள் அவ்வப்போது நினைவூட்டத் தவறியதில்லை.

அந்த நெருப்பின் தகிப்பும் அதன் வெம்மையும் ராஜபக்ஷ நிர்வாகத்துக்கு இப்போது புதுடில்லியால் சற்று சூடாக உணர்த்தப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது.

சொல் ஒன்றும், செயல் வேறாகவும் நடிக்கும் இழுபறிப் போக்கைத்தான் எண்பதுகளின் முற்பகுதிகளில் அரசியல் தந்திரத்தில் கிழட்டு நரியான ஜே. ஆர். ஜெயவர்த்தனாவும் புதுடில்லியோடு விளையாடிப் பார்த்தார். ஆனால் "ஒபரேஷன் பூமாலை' மூலம், அதுவரை பொருளாதார, போக்குவரத்து முற்றுகைக்குள் காய்ந்து கிடந்த தமிழர் தாயகம் மீது இந்திய விமானப்படை விமானங்கள் நிவாரண உதவிகளைப் போட்டபோதுதான் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனா தமது குள்ளநரி அரசியல் தந்திரம் புதுடில்லியிடம் வேகவில்லை என்பதை உணர்ந்து, ஒரே கணத்தில் புதுடில்லிக்கு அடிபணிபவரானார்.

தெரிந்தோ, தெரியாமலோ அதே போன்ற விட்டேத்திப் போக்கையே புதுடில்லி உறவைக் கையாளும் விவகாரத்தில் பின்பற்றி மஹிந்த ராஜபக்ஷவின் நிர்வாகமும் ஜே. ஆர். ஜெயவர்த்தனா போல வாங்கிக் கட்டத் தயாராகி வருவதாகத் தோன்றுகின்றது.

இலங்கை இனப்பிரச்சினையை அமைதி வழியில் சமாதான முறையில் தீர்ப்பதற்கான வாய்ப்புக்களை, உதாசீனப்படுத்தி

இது தொடர்பான இந்திய ஆலோசனைகளை செவிமடுப்பது போல தலையாட்டிப் பின்னர் புறக்கணித்து

ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்து விட்டு, பின்னர் அவற்றை நிறைவு செய்யாமல் காலத்தை இழுத்தடித்து ஏமாற்றி

தனது இராணுவத் தீர்வு நிகழ்ச்சி நிரலை கனகச்சிதமாக நிறைவு செய்யும் அந்தரங்கத் திட்டப்படி, அயல் வல்லாதிக்க சக்தியான இந்தியாவையும் மீறி, பாகிஸ்தானையும், சீனாவையும் இந்தக் குட்டித் தீவுக்குள் அகலக்கால் வைக்கக் கூடியதாக இழுத்து வீழ்த்தும் "மஹிந்த சிந்தனை'ப் போக்கு, புதுடில்லிக்கு கடும் எரிச்சலையும் சீற்றத்தையும் இயல்பாகவே ஏற்படுத்தி விட்டது என்பது அம்பலமாகி வருகின்றது.

புலிகளின் "புறொப்லர்' விமானங்களைத் தாக்கி அழிப்பதற்காக என்று கூறி, சீன, பாகிஸ்தான் நாடுகளின் "மிக் 29' நவீன குண்டு வீச்சு விமானங்களை இலங்கைத் தீவுக்குள் நிலைகொள்ள அனுமதிப்பது இந்திய யுத்த விமானங்களுக்கும் அச்சுறுத்தலைத் தரக் கூடிய உயர் தொழில்நுட்பத் தாக்குதல் விமானங்களை அதன் நட்புறவற்ற நாடுகளின் துணையோடு அதன் தென்கோடி முனையில் இருக்க இடமளிப்பது இந்தியாவைப் பொறுத்தவரையில் அற்ப விவகாரமல்ல: ஆழமான அர்த்தங்கள் பொதிந்த புதைந்த விடயம்.

"புலி விமான' பூச்சாண்டியைக் காட்டி, இந்தியாவுக்கு கிலியை ஏற்படுத்தும் நடவடிக்கையை மஹிந்தர் அரசு நாசூக்காக ஒப்பேற்ற முயல்வதாகவே புதுடில்லி கருதுகின்றது.

அதற்கான "செக் மேட்' நடவடிக்கைகளை காய் நகர்த்தல்களை புதுடில்லி ஏற்கனவே ஆரம்பித்து விட்டதாகவும் தகவல். இதைக் கொழும்பு புரிந்து கொண்டு இராஜதந்திரமாக விவேகமாக நடந்துகொள்ள வேண்டும். இல்லையேல் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனா புதுடில்லியிடம் பட்டுத் தெளிந்தது போன்றதோர் பாடத்தை மஹிந்த ராஜபக்ஷ நிர்வாகமும் புதுடில்லியிடம் பட்டுத் தெளிய வேண்டி நேரும்.

நன்றி - உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

இல்லையேல் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனா புதுடில்லியிடம் பட்டுத் தெளிந்தது போன்றதோர் பாடத்தை மஹிந்த ராஜபக்ஷ நிர்வாகமும் புதுடில்லியிடம் பட்டுத் தெளிய வேண்டி நேரும்.

ஜே.ஆர் எங்கே இந்தியாவிடம் பட்டுத் தெளிந்தார். அவர் இந்தியாவைக் கொண்டே தமிழர்களை அழிக்கச் செய்தவர். இச்சந்தர்ப்பத்தில் ஜே.ஆர் தோற்கவில்லை. இந்தியா தான் தோற்றது.

இந்தியா தான் கடைசியில் அவமானத்துடன் நாட்டை விட்டுச் சென்றது.

இந்தியா, இலங்கையை பாகிஸ்தான், சீனாவிடம் இருந்து ஆயூதம் வாங்க வேண்டாம் என்று சொல்லி ஆயூதம் கொடுக்க, ஆயூதங்களை இந்தியாவிடம் வாங்கினதுமல்லாமல் சீனா, பாகிஸ்தானிடமும் இலங்கை அரசு வாங்கி இருக்கிறது. இவ்விடயத்திலும் இலங்கையே இந்தியாவை ஏமாற்றி விட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா ஒரு வய்க்கல் பட்டரை நாய் ........ கொழும்பு ஊடகம்

அதுக்கு என்ன அர்த்தம்??????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.