Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாம் சுதந்திரமாகக் கற்பதற்கு அரசுக்கு சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும் தமிழ் மாணவர் ஒன்றியம் கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Wed Jun 6 8:38:54 EEST 2007

நாம் சுதந்திரமாகக் கற்பதற்கு அரசுக்கு சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும் தமிழ் மாணவர் ஒன்றியம் கோரிக்கை

சுதந்திரமாக நாம் கற்பதற்கு அரசு அனுமதிக்க வேண்டும். அதற்குரிய அழுத்தங்களைச் சர்வதேச சமூகம் அரசுக்கு வழங்கி, எமது உரிமைக்குரல் நசுக்கப்படுவதை நிறுத்த உதவ வேண்டும்.

இவ்வாறு தமிழீழ மாணவர் எழுச்சி நாள் குறித்து விடுத்த அறிக்கை ஒன்றில் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் யாழ்.மாவட்டப் பிரிவு கோரியுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ் மாணவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடி இறுதியில் தன்னைத் தானே மாய்த்து உயிர் நீத்த யாழ்.இந்து அன்னையின் தவப்புதல்வன் பொன்.சிவகுமாரனை நினைவுகூர்ந்து ஆண்டுதோறும் ஜூன் ஆறாம் திகதி மாணவர் எழுச்சி நாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

இன்றைய காலகட்டத்தில், தமிழ் மாணவர்கள் மீதான கல்வி ஒடுக்குமுறை தமிழ் மாணவர்களைப் பெரிதும் பாதித்துள்ளது.

தமிழ் மாணவர்களை அழிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில் இந்த வருடம் மாணவர் எழுச்சி தினம் முக்கியத்துவம் பெறுகின்றது.

பேரினவாதச் சக்திகளினால் பல்வேறு ஒடுக்குமுறை வடிவங்கள் உருவாக்கப்பட்டு, அவை தமிழ் மாணவர்களின் கல்வியை ஒடுக்க முயற்சிக்கின்றன. பல்வேறு வடிவங்களில் தமிழ் மாணவர்களின் கல்வியை நாசமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த வருட நடுப்பகுதிக்குப் பின்னர் குடாநாட்டு மாணவர்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி நிற்கின்றனர். பல மாணவர்கள் அரச பயங்கரவாதத்தின் கொடுமையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் தமது எதிர்காலக் கல்வியைத் தொலைத்து நிற்கின்றனர்.

கடந்த ஓகஸ்ட் மாதத்தின் பின்னர் ஒன்பது மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஒருமாணவன் சித்திரவதைக்குப் பின் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆறு மாணவர்கள் தொடர்பாக இன்றும் தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

கல்வியை இடைநிறுத்தி உள்ளனர்

மாணவர்களுக்கு எதிராக வன்முறைகள் ஒருபுறம் தொடர, மறுபுறம் பஞ்சமும், பட்டினியாலும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் கல்வியை இடைநிறுத்தியுள்ளனர்.

என்றுமில்லாத துயரச்சுமையோடு இருக்கும் மாணவர்களாகிய நாம் எமது கல்வியினையோ, எமது விடுதலைத் தாகத்தினையோ அழித்துவிட முடியாது என்பதனை சிங்கள தேசத்துக்குத் தொடர்ந்தும் எடுத்துக் காட்டுவோம்.

எமது சுதந்திரமான கல்விக்காகப் பயணிக்கும் நாம் மிக விரைவில் அவற்றினைப் பெற்றுக் கொள்ளுவோம் என்ற உறுதியோடும், நம்பிக்கையோடும் முயற்சியுடன் கற்போம்.

எமது உணர்வுகள் மதிக்கப்படவேண்டும். எமக்கு உரிமைகள் கிடைக்கப்பட வேண்டும். நாம் சுதந்திரமாக கற்க அரசு அனுமதிக்க வேண்டும். இதற்குரிய அழுத்தங்களைச் சர்வதேசம் அரசுக்கு வழங்கி எமது உரிமைக்குரல் நசுக்கப்படுவதை நிறுத்த உதவுமாறு வேண்டுகின்றோம். என்றுள்ளது.

நன்றி - உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஓகஸ்ட் மாதத்தின் பின்னர் ஒன்பது மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஒருமாணவன் சித்திரவதைக்குப் பின் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆறு மாணவர்கள் தொடர்பாக இன்றும் தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

இரண்டு கிழமைக்கு முன்பு பாராளுமன்றத்தில் இதுபற்றி தமிழ் கூட்டமைப்பினர் கதைத்தார்கள். தமிழ் அமைப்புக்கள் சர்வதேச மனித உரிமைகள் நிறுவனங்களுக்கு முறையிட்டன. கொஞ்ச நாட்களின் பின்பு இச்செய்தியும் கிருசாந்தி, செம்மணி வழக்கு போல மறைந்து விடும்.

சென்ற வருடம் திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் பற்றி எதிர்ப்பு வந்தது. குரல் கொடுத்த மாமனிதர் விக்னேஸ்வரனின் குரலையும் அடக்கிவிட்டார்கள். இப்பொழுது புத்தர் சிலை விவகாரம் மறைந்து போய்விட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.